என் மலர்
திருப்பத்தூர்
- பலத்த காயமடைந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பறவைகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 60). இவர் கடந்த 18-ந் தேதி இரவு மிட்டூரில் இருந்து பறவைகுட்டை நோக்கி சென்றார்.
அப்போது அவர் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்தார்.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் மாசிலாமணியை மீட்டு சிகிச்சைக்காக, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு சிகிச்சை பயனின்றி மாசிலாமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலி பணியிடங்கள்
- வருகிற 1-ந்தேதி கடைசி நாள்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர், திருப்பத்தூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;-
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு சிக்கணம் மற்றும் கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 1-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இதற்கான எழுத்துத் தேர்வு 24.12.2023 அன்று பகல் 10 மணிமுதல் 1 மணி வரை திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி.
முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து வகுப்பினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
விண்ணப்பதாரார்கள் எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இடஒதுக்கீடு, இனச்சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.
மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://drbtpt.in வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சீனிவாசன் (வயது 40), சசி (40) ஆகியோர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரே பைக்கில் நெக்குந்தி நோக்கி சென்றுகொ ண்டிருந்தனர். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சசி படுகாயமடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களின் உதவியுடன் படுகாயமடைந்த சசியை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான சீனிவாசன் உடலை கைப்பற்றி வாணியம்பாடி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பாறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39), பேக்கரி மாஸ்டர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தமிழரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து, முருகனை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தயார் செய்யும் சமையல் அறை உள்ளது.
இங்கு இருந்து ஒரு கியாஸ் சிலிண்டர் 40 சாப்பாடு தட்டுகள் 50 டம்ளர்கள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றனர்.
இது குறித்து புகாரின் பேரில் உமாராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 23-ந்தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2023-2024 நிதியாண்டில் பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் எளிதில் எவ்வித சிக்கல்கள் இன்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைய ஏதுவாக பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வாணியம்பாடி வருவாய் உள் வட்டத்தில் இஸ்லாமியா கல்லூரி அருகில் அமைந்துள்ள அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வருகிற 23-ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதியதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 5 தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 65 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
- ஒரே நாளில் அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி ஜனதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு கவுண்டர். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 104).
இவருக்கு தனபால் (80), பழனி (78) ஆகிய 2 மகன்களும், யசோதம்மாள் (82), சரோஜம்மாள் (80), லட்சுமியம்மாள் (78), ஜெகதமம்மாள் (76), ஈஸ்வரியம்மாள் (74) ஆகிய 5 மகள்கள் உள்ளனர்.
வள்ளியம்மாளின் கணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து அவர் கூலிவேலை செய்து தனியாக வசித்து வந்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் தனது மூத்த மகன் தனபால் வீட்டில் வசித்தார்.
5 தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 65 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
மூதாட்டி உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தனது வேலைகளை தானே செய்து வந்தார். இதற்கிடையே நேற்று வள்ளியம்மாளுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
அப்போது வள்ளியம்மாளின் தம்பி துரைசாமி (102) அங்கு வந்தார். இறந்துபோன அக்காள் வள்ளியம்மாளின் உடலை பார்த்து கதறி அழுதார். சிறிது நேரத்திலேயே அக்காள் இறந்த அதிர்ச்சியில் இருந்த துரைசாமியும் திடீரென சரிந்து விழுந்து இறந்தார்.
துரைசாமிக்கு பழனி (68), பாலாஜி (59), அண்ணாமலை (57), சுந்தரேசன் (55) ஆகிய 4 மகன்களும், எல்லம்மாள் (70), சுமதி (68) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
5 தலைமுறை கண்ட துரைசாமிக்கும் பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என 57 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.
வயது முதிர்வு காரணமாக துரைசாமி தனது மனைவி கண்ணம்மாள் (89) உடன் தனது மகன், செட்டியப்பனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை வீட்டில் வசித்து வந்தார்.
வள்ளியம்மாள் மற்றும் துரைசாமி ஆகியோர் மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.
100 ஆண்டுகளை கடந்து ஒரே கிராமத்தில் அக்காள் வள்ளியம்மாள், தம்பி துரைசாமி ஆகியோர் உடலில் எந்த நோய் பிரச்சினையும் இல்லாமல் இருந்ததை அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நினைவு கூர்ந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஒரே நாளில் அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட டெனிகாய்ட், ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு டெனிகாய்ட் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான டெனிகாய்ட் விளையாட்டு போட்டி நடந்தது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- பின்னால் வந்த கனரக வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
கர்நாடக மாநிலம், பெங்களூர் பத்மநாபன் நகரை சேர்ந்தவர் ஷாட்நாயக் மகன் அனிகேஷ் (வயது 29), சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தனது பைக்கில் வேலூரில் இருந்து திருப்பத்தூரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே வந்தபோது, பின்னால் வந்த கனரக லாரி பைக் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அனிகேஷ் சம்பவ இடத்திலேயே பரதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறையினர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், 9 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மலை பம்பை பிடித்து, காப்பு காட்டில் விட்டனர்.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
- திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா பகுதியில் உள்ள வீர விநாயகர் கோவிலில் முருகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சாமிக்கு புத்தாடை அணிவித்து, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருமண தடை நீங்க சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஜோலார்பேட்டையிலும் அதிகளவில் பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது.
- எஸ்-1,எஸ்-2, எஸ்-3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளிலும் பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.
ஜோலார்பேட்டை:
கொச்சிவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது.
இதில் பயணம் செய்த பயணிகள் கழிவறை கூட செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளனர். அந்த அளவிற்கு முன்பதிவு செய்யாத பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
நிற்பதற்கு கூட இடமில்லாததால், வாலிபர்கள் கழிவறையையும் ஆக்கிரமித்தனர். இதனால் கழிவறை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று காலை ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது. ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றதும், உடனே 3 நிமிடத்தில் ரெயில் புறப்பட தயாரானது.
ஜோலார்பேட்டையிலும் அதிகளவில் பயணிகள் ஏறியதால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது. பரிதவித்த பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
இதனை அறிந்த ரெயில்வே போலீசார் உடனடியாக விரைந்து சென்று எஸ்-3 பெட்டியில் கழிவறையில் இருந்த பயணிகளை அப்புறப்படுத்தினர். மேலும் யாரும் கழிவறையில் பயணம் செய்யக்கூடாது என எச்சரித்தனர்.
அப்போது பயணிகள் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் கடும் வாக்குவத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பல பெட்டிகளில் பயணம் செய்வதாகவும், இதனால் நெடுந்தூரம் பயணம் செய்யும் பயணிகள் பரிதவிப்பதாக புகார் தெரிவித்தனர். ரெயில் நிலைய அதிகாரிகள், உடனடியாக சோதனை செய்தனர்.
அப்போது எஸ்-1,எஸ்-2, எஸ்-3 ஆகிய 3 முன்பதிவு பெட்டிகளிலும் பதிவு செய்யாத பயணிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்தது.
அவர்களையும் போலீசார் ஜோலார்பேட்டையில் இறக்கி விட்டனர். இதனை தொடர்ந்து 15 நிமிடம் கால தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






