என் மலர்
நீங்கள் தேடியது "Payment dispute"
- சுங்கசாவடியில் கட்டண தகராறு செய்து வருகிறார்.
- டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த ஆக்கிடாவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(42). இவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சத்திரக்குடி டோல்கேட் பகுதிக்கு காரில் வந்தார்.
அப்போது கட்டணம் செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பாண்டியராஜன் கட்டணம் செலுத்தி உள்ளார். ஆனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் பாண்டிய ராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாகவும், காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பாறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39), பேக்கரி மாஸ்டர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (38) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தமிழரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து, முருகனை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த முருகன் தற்போது நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.






