என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி
    X

    கோப்புப்படம்

    தடுப்பு சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

    • வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சீனிவாசன் (வயது 40), சசி (40) ஆகியோர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரே பைக்கில் நெக்குந்தி நோக்கி சென்றுகொ ண்டிருந்தனர். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சசி படுகாயமடைந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களின் உதவியுடன் படுகாயமடைந்த சசியை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பலியான சீனிவாசன் உடலை கைப்பற்றி வாணியம்பாடி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×