என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை மதியம் நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி - புரட்டாசி மாதம் பவித்ரோத்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு யாகசாலை வந்தார். 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருள்கிறார். இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    யாகசாலையில் நம் பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும், இதனால் இந்நிகழ்ச்சி பூ பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூழிலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூழிலைத் திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம் பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு மேற்கில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    இந்த பவித்ரோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டி சேவை எனப்படும் அங்கோபாங்க சேவை 2-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

    பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேணி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும், எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

    • திடீர் நிபந்தனை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் சிறார்கள் தவித்தனர்.
    • பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளும் தளர்த்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சி:

    திருச்சியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில், சிலம்ப போட்டியில் பங்கேற்க 40 கிலோ எடை கட்டாயம் என திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த திடீர் நிபந்தனை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாமல் சிறார்கள் தவித்தனர்.

    திடீர் நிபந்தனையால் விளையாட முடியாத சிறார்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் சிறார்களின் பயிற்சியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளும் தளர்த்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் பெற்றோரும் பயிற்சியாளர்களும் நிபந்தனைகளை தளர்த்தகோரி போராடிய நிலையில், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது. இதையடுத்து சிறார்கள் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.

    • இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.
    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்டத்திலும் பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 242 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 932 இடங்களிலும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 174 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் இன்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.


    விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்து செல்லும் போது சிலை அமைப்பாளர்கள் மற்றும் சிலை அமைப்பு இயக்கத்தினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    சிலை அமைப்பாளர்கள் ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும் விநாயகர் சிலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தனிப்பட்ட தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஊர்வலத்தின் போது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் குறிப்பிட்ட டெசிபலுக்கு மிகாமல் ஒலிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலம் மாலை 3, 4 மணிக்குள் புறப்பட வேண்டும். இரவு 10 மணிக்குள் ஊர்வலத்தை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும்.

    ஊர்வலம் செல்லும் பாதையில் எந்தவொரு இடத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலத்தை இடைநிறுத்தம் செய்யாமல், விரைந்து நடத்தி சிலை கரைக்கும் இடம் சென்று சேர வேண்டும்.

    ஊர்வலத்தின் போது அமைப்பாளர்கள் அவர்களது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஊர்வலத்தில் அரசியல் கோஷங்கள், பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

    மது அருந்தியவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை விழாக்குழுவினர் உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு சிறு பிரச்னையும் இன்றி ஊர்வலம் செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும்.

    சிலைகளை கரைக்க கொண்டு செல்லும்போது நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

    3 சக்கர வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விசர்ஜன நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.

    மேலும் விநாயகர் சிலை கரைக்கப்படும் திருச்சி காவிரி பாலத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இரவு 10 மணி வரை சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், சிலை கரைக்கப்படும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலி, ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் பாலத்தின் கைப்பிடி சுவர் பகுதிக்கு சென்றுவிடாதபடி சவுக்கு மரங்களை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிலை கரைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் பாலத்தின் கைப்பிடி சுவரை ஒட்டியவாறு மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரும் வாகனத்தை மேடையின் அருகே திருப்பி நிறுத்தி, சிலையை அந்த மேடைக்கு மாற்றி, அங்கிருந்து காவிரி ஆற்றில் கரைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 8 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 101 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

    ஊர்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    மேலும் விநாயகர் ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்காக, போக்குவரத்து வழித்தடங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலமானது அமைதியான முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் நேற்று முதல் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று புத்தாநத்தம் இடையபட்டி விநாயகர் குளத்தில் 17 சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    பதட்டமான பகுதிகளாக கருதப்படும் துவரங்குறிச்சி மற்றும் புத்தாநத்தம் ஆகிய போலீஸ் சரகத்துக்கு உட் பட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட உள்ளனர்.

    மேலும் ஊர்வலத்தில் பிரச்னை ஏற்படுத்தும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புத்தாநத்தம் காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து புத்தாநத்தம் பஜார், ஜும்மா மசூதி வழியாக ஊர்வலமாக சென்று அந்தக் குளத்தில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

    இதையடுத்து அங்கே 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • மகாவிஷ்ணு உண்மையான இந்து கிடையாது.
    • இந்து மதத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்பவர்.

    திருச்சி:

    மகாவிஷ்ணுவை பள்ளியில் பேசுவதற்கு அழைத்து வந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-


    "மகாவிஷ்ணு பேசியது ஆன்மிக சொற்பொழிவு அல்ல, அது சனாதன சொற்பொழிவு. ஆன்மிகம் என்பது வேறு, சனாதனம் என்பது வேறு. மகாவிஷ்ணு உண்மையான இந்து கிடையாது. இந்து மதத்தை பயன்படுத்தி வியாபாரம் செய்பவர். அவரை பள்ளியில் பேசுவதற்கு அழைத்து வந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கோவிலுக்கு தமிழக பாஜகவை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா வந்தார்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சோ்ந்து கொள்வதாக முன்னாள் தலைமைச்செயலர் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். இப்போது, பின் வாங்குகின்றனா்.

    பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தில் இணைந்தால்தான் மத்திய அரசால் நிதி வழங்க முடியும்.

    கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்சனை விவகாரத்தில் அத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும். தி.மு.க. கூட்டணியில் தற்போது கொந்தளிப்பான சூழல் இருப்பதை காண முடிகிறது. தி.மு.க. கூட்டணியில் எது நடந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு தேவையற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை திட்டங்களையும், பா.ஜ.க. தொண்டர்களையும் நம்பியே நாங்கள் தோ்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து எப்போதும் நான் கருத்து கூறுவது இல்லை என்றார்.

    • கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர்.
    • 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி தெற்கு, மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் இருந்தது போல அல்லாமல் சட்டசபை தேர்தலில் சுமூகமான கூட்டணி அமையும் நிலை இல்லை என்று கூறியிருந்தார்.

    அமைச்சர் கே.என்.நேருவின் இந்த பேச்சு தி.மு.க. கூட்டணியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதி தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டத்தில் நான் பேசிய போது, 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நான் சொன்ன கருத்துக்களை தவறாக திரித்து வெளியிட்டு விட்டனர். எங்கள் கூட்டணி சரியான கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தனது கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்கமாட்டார். ஜெயலலிதா 38 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சராக ஆனதை, சட்டமன்றத்தில் பெருமையாக பேசினார்கள். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவ்வாறு கூறியதே தவிர கூட்டணியை யாரும் விட்டுக்கொடுத்து போக வேண்டியது அவசியம் இல்லை. எங்கள் கூட்டணி அருமையான கூட்டணி. கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகிக் கொண்டு உள்ளனர். வேண்டுமென்றே நான் பேசியதை மாற்றி போட்டு விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார்.

    அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி அறிந்த திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ் இன்று காலை அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவர்கள் சமரசமாகவில்லை.

    பாதிக்கப்பட்ட மாணவியை திட்டிய வார்டன் உள்ளிட்ட 3 பெண் வார்டன்களும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை ஒரு பெண் வார்டன் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்டார். மற்ற 2 பேரும் வரவில்லை.

    இதனால் மாணவர்கள் மேலும் 2 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என கூறினர். இதையடுத்து உதவி கலெக்டர் அருள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறும்போது, மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்குள் ஒரு ஒப்பந்த தொழிலாளியை எப்படி தன்னந்தனியாக கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்தது?. புகார் அளிக்க சென்ற மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் முதலில் எந்த உதவியும் செய்யப்படவில்லை.

    மாறாக அந்த மாணவி மீது வார்டன் அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் காவல்துறையிலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்க முயற்சிக்கவில்லை.

    பாதிக்கப்பட்ட மாணவி தனது தாய்-தந்தையிடம் பேசி அதன் பின்னரே மாணவர்கள் முன்னெடுத்து சென்று போலீசில் புகார் செய்துள்ளனர்.

    மாணவிகளின் பாதுகாப்பை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர். இதைத் தொடர்ந்து திருச்சி எஸ்.பி.வருண் குமார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து மற்ற 2 வார்டன்களும் அங்கு வந்து மாணவ-மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக கல்லூரி வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. பாதுகாப்புக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். 

    • நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.
    • என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    திருவெறும்பூர்:

    திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர்.

    கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார்.

    அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது. இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது.

    இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது. இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தி, விடுதி காப்பாளர் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

    • சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
    • அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளோம்.

    * திருச்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் தயாராக உள்ளது.

    * சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    * அனைத்து பகுதிகளிலும் ஆகாய தாமரையை அகற்றி விட்டோம்.

    * சென்னை மாநகராட்சியில் புதிதாக ரூ.22 கோடி மதிப்பில் எந்திரம் வாங்கி உள்ளோம். அந்த எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து வாய்க்காலிலும் தூர்வாரப்பட்டு வருகிறது.

    * எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை மட்டுமல்லாது எல்லா மாநகராட்சிகளிலும் வாய்க்காலை சுத்தப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் அனைத்து இடங்களிலும் முடிந்து விட்டது.

    * 20 செ.மீ., 25 செ.மீ. மழை பெய்தால் எந்த வடிகாலுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

    * அதிகமாக மழை பெய்தால் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழை நீர் தேங்கும். அங்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கினால் மோட்டார் வைத்து உடனே அகற்றப்படும்.

    * எல்லா சுரங்கப்பாதைகளையும் சுத்தம் செய்து விட்டோம் என்று கூறினார்.

    • தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது.
    • மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அக்டோபர் 2-ந் தேதி வி.சி.க சார்பில் மகளிர் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் மதுவை ஒழிப்பதற்கும் போதை பொருட்களை ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தொடர் பரப்புரையில் ஈடுபட இருக்கிறோம்.

    இந்த மாநாட்டுக்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஆதரவு நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும். தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெளிநாடு செல்லும் முதல்வர் நிர்வாகத்தை கவணிப்பதற்காக துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களை நியமிக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 15 நாள் பயணம் மேற்கொள்கிறார் இந்த 15 நாட்களில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிற அளவுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் பெருகி உள்ள காலம் இது. எனவே. இது சம்பந்தமில்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது.

    ஐ.ஏ.எஸ். போன்ற அதிகாரிகளை அவர்களின் சிறந்த ஆளுமைகளை ஆட்சி நிர்வாகத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல் மதுவை வியாபாரம் செய்வது, எப்படி? லாபத்தை பெருக்குவது எப்படி? கடைகளில் எண்ணிக்கையை பெருக்குவது எப்படி? என்பதற்கு அந்த அதிகாரிகளில் சிந்தனை ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இது வேதனைக்குரியது.

    சினிமாவிலேயே இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான். அந்த முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்.டி.ஆர்.யை பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள்.

    தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள்.

    அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம். வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வர அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது தி.மு.க.விலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் அவரோடு இருந்தார்கள்.அதனால் வெற்றி பெற முடிந்தது.

    அதன் பிறகு வந்த தலைவர்கள் அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள். அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

    விஜய் அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம், என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப்பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும். இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இது குறித்து நாம் ஒரு கருத்தை சொல்லப்படுகிறது.

    முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    பழனியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மாநாடு நடத்திருக்கிறார்கள். இந்த மாநாடு பல லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று இருப்பதாகவும் தெரிகிறது. பாஜக . ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்கள் கடவுள்,மதம் ஆகியவற்றை பயன்படுத்தி மக்களை அரசியல் அடிப்படை வாக்கு வங்கியாக மாற்றுவதற்கு வட இந்திய மாநிலங்களில் எவ்வாறு முயற்சித்தார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அப்படிப்பட்ட அந்த முயற்சிகளுக்கு இடம் அளிக்காமல் அவர்களின் அரசியல் சதியை அம்பலப்படுத்தக் கூடிய வகையிலே இந்து சமய அறநிலைத்துறை செயல்படுகிறது என்றால் அதை நாங்கள் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி கீழே இறங்க முயன்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.
    • ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சியில் பல்லவன் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே, கீழே இறங்கியபோது ரெயிலுக்கு அடியில் பயணி சிக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கடும் சிரமத்திற்கிடையே ரெயிலுக்கு அடியில் சிக்கியவரை ரெயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.

    படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?
    • மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

    திருச்சி:

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழரல்லாத எல்.முருகனுக்கு மீண்டும் மத்திய இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்தது ஏன்?

    * தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற தமிழர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்காதது ஏன்?

    * எல்.முருகனோடு தோற்றுப்போன மற்ற பாஜக தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி தராதது ஏன்?

    * மத்திய அமைச்சர் பதவியை மீண்டும் எல்.முருகனுக்கு தர என்ன காரணம்?

    * அண்ணாமலை, கே.பி.ராமலிங்கம் போன்றோருக்கு மத்திய அமைச்சராக தகுதியில்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    ×