என் மலர்tooltip icon

    தேனி

    • தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.
    • பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.

    மேலும் கோவிலில் அமைந்துள்ள சூரியன், சந்திரன், சிவன், அம்பாள், ஞானாம்பிகை, தட்சிணாமூர்த்தி, அணுக்க விநாயகர், கண்ணப்ப நாயனார், கன்னி மூல கணபதிவிநாயகர், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நாகதோஷ பரிகார விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், கார்த்திகை முருகன், தண்டாயுதபாணி ,நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ,ராகு கேது, சனி, சன்னதி நவகிரகங்கள், பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது.

    பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    • ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது.
    • 999 வருடங்களுக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

    முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதார பிரச்சினையாக உள்ளது. இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் இருந்தாலும், அணை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. கடந்த ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1886ம் ஆண்டு பெரியாறு அணையின் குறுக்கே 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அணை கட்டப்பட்டது.

    ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுவிக் மேற்பார்வையில் 9 வருடங்களாக கட்டுமான பணிகள் நடந்து 1895ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் முன்னிலையில் திவான் ராமையங்கார், சென்னை மாகாணத்தின் சார்பில் கொச்சி-திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான் சைல்டு ஹானிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    999 வருடங்களுக்கு இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அதுவரை அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கேரளாவிற்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தம் 1970ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ரூ.30 என்று நிர்ணயிக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணை நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்காக 1 கி.வாட்டுக்கு ரூ.12 கேரளாவிற்கு கொடுக்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    முல்லை பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்றுடன் 137 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஆண்டிபட்டி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து உரிமை இணையவழி விண்ணப்ப மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆண்டிபட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் தலைமை வகித்து விழிப்புணர்வு உரையாற்றினார். ஆண்டிபட்டி ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பு, பொருளாளர் அர்ஜுனன், துணைத் தலைவர் கர்ணா பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மிட்டாய் தயாரிப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் அக்கினி குமார், செயலாளர் சரவணன், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    உணவு பாதுகாப்பு அலுவலர் ஜவகர் ஜோதிநாதன் பேசும்போது, ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி உணவுப் பொருள்களை தயார் செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை விளக்கி கூறினார்.

    குறிப்பாக உணவு கூடங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறிப்பிட்ட அளவு பயன்படுத்திய பின் அதை அரசு வழங்கியுள்ள டின்களில் ஊற்றி சேகரம் செய்து வைத்து , மாதா மாதம் அரசு மூலமாகவே அதனை பயோ டீசல் தயாரிப்புக்காக மறு சுழற்சி அடிப்படையில் கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

    கடைக்காரர்கள் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி நகர் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் மிட்டாய் சங்க உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விவசாய கூலித் தொழிலாளியான ஈஸ்வரன் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.
    • உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் வனக்காப்பகம், கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் வனவர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து சென்றனர்.

    அப்போது சிலர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? என விசாரணை நடத்தப்பட்டது. இதில் இறந்தநபர் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என தெரிய வந்தது. அவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    விவசாய கூலித் தொழிலாளியான அவர் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். அத்துமீறி காப்புக்காட்டுக்குள் நுழைந்ததால் வேட்டைக்கு வந்தாரா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் லோயர் கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஈஸ்வரனின் உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொழிலாளி ஈஸ்வரன் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தார். மேலும் வனத்துறையினரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றார். இதனால் வனத்துறையினர் தங்களின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுக் கொன்றனர். அவருடன் வந்த சிலரையும் தேடி வருகின்றோம். காப்புக்காட்டுக்குள் பொதுமக்கள் வர அனுமதி இல்லை. வேட்டையாடும் கும்பல் அதிகளவில் வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே இது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    வனப்பகுதியில் நுழைந்த தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • தொழில் முனைவோர் மேம்பாட்டு செல் மற்றும் இன்குபேசன், இனோ வேசன், செல் சார்பில் தொழி ல்முனைவோரு க்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மதுரை கிரீன்ஸ்கார்ட் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி சுய தொழில் செய்வதற்கு தேவையான உதவிகளை பெறுவதற்கான வழிமுறை குறித்து சிறப்புரையாற்றி னார்.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு செல் மற்றும் இன்குபேசன், இனோ வேசன், செல் சார்பில் தொழி ல்முனைவோரு க்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் முன்னிலைவகித்தனர். எந்திரவியல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் அனை வரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து வாழ்த்தி பேசினார்.

    மதுரை கிரீன்ஸ்கார்ட் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி சங்கரலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுய தொழில் செய்வதற்கு தேவையான உதவிகளை பெறுவதற்கான வழிமுறை குறித்து சிறப்புரையாற்றி னார்.

    இந்த நிகழ்ச்சியில் உற வின்முறை தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செய லாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்த ரங்கி ற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வ ர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்தி கேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்த னர். கல்லூரியின் தொழி ல்முனைவோர் மேம்பாட்டு செல்லின் ஒருங்கிணை ப்பாளர் சுருளிமணி நன்றி கூறினார்.

    • தெருக்க ளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேனி சாலை ஓரமாக அமைந்துள்ள பெரிய சாக்கடை வடிகாலில் கலந்து பின்னர் வைகை ஆற்றில் கலந்து வருகிறது.
    • தொடர்ந்து கடமலை க்குண்டு ஊராட்சி நிர்வா கத்தினர் இன்று முதல் சாக்கடை வடிகால்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கட மலைக்குண்டு கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. அனைத்து தெருக்களுக்கும் சாக்கடை வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. தெருக்க ளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேனி சாலை ஓரமாக அமைந்துள்ள பெரிய சாக்கடை வடிகாலில் கலந்து பின்னர் வைகை ஆற்றில் கலந்து வருகிறது.

    பெரிய சாக்கடை வடிகாலில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து காணப்பட்டது. இதனால் கழிவுநீர் செல்வ தில் தடை ஏற்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சாக்கடை வடிகாலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் காரணமாக மழைநீர் செல்ல தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    தூர்வாரும் பணி தீவிரம்

    மேலும் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் அபாயமும் ஏற்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை வடிகால்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து கடமலை க்குண்டு ஊராட்சி நிர்வா கத்தினர் இன்று முதல் சாக்கடை வடிகால்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சாக்கடை வடிகால்களில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட கூடாது என பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த பணிகளை கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் மேற்பார்வை யிட்டு வருகின்றனர்.

    • தனது தாயிடம் கம்பத்தில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூறிச்சென்ற அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது நகைக்கடை மேலாளர் பேசினார்.
    • அதில் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது பத்திரபதிவு அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்து கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.

    கம்பம்:

    பெரியகுளம் அருகே சருத்துபட்டியை சேர்ந்தவர் வீரமுருகன்(35). இவருக்கும் கம்பத்தை சேர்ந்த ரெஜினா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண்கு ழந்தை உள்ளது. வீரமுருகன் தேனியில் உள்ள நகைக்கடை யில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடையின் திறப்பு விழாவையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். தனது தாயிடம் கம்பத்தில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூறியுள்ளார். இந்தநிலையில் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது நகைக்கடை மேலாளர் பேசினார்.

    அதில் வீரமுருகன் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது பத்திரபதிவு அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்து கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்க னவே வீரமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.

    இதனைதொடர்ந்து வீரமுருகனின் தாய் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.
    • சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினோகவிற்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த மாதம் சினோகவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கம்பம் கிராமச்சாவடி தெருவில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி பிறந்த குழந்தை வீட்டில் இருந்து திடீரென மாயமானது. பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.

    இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் சந்தேக மரணம் என்றும், பின்னர் கொலை வழக்காகவும் மாற்றி போலீசார் விசாரித்து வந்தனர். பிறந்து 25 நாட்களே ஆன ஆண் குழந்தை தண்ணீர் கேனுக்குள் மூழ்கடித்து கொலை செய்தது யார் என்று இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் தாய் சினேகா மற்றும் பாட்டியிடம் துருவிதுருவி விசாரித்தனர்.

    இதில் குழந்தையை கொன்றது தாய் சினேகா என உறுதியானது. சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார். அதன்பிறகு சந்தேகம் வராத அளவுக்கு பாத்ரூமில் சென்று குளிப்பது போல சென்றுவிட்டார். பின்னர் குழந்தையை தேடுவது போல மற்றவர்களுடன் சேர்ந்து நாடகமாடி உள்ளார்.

    ஆனால் போலீசார் விசாரணையில் அவர் கொலை செய்தது உறுதியானது. எதற்காக ஆண் குழந்தையை கொலை செய்தார். இவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையையே கொலை செய்துவிட்டு தாய் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாமனார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மருமகனை மிரட்டி வந்துள்ளார்.
    • சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து மருமகனை குத்தி காயப்படுத்தினார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது28). கூலித்தொழிலாளி. இவரது மாமனார் மாரியப்பன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு சதீஷ்குமாரை மிரட்டி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தி காயப்படுத்தினார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

    • ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் புண்ணிய தலமான சுருளி அருவி பண்டார துறையில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    • பின் லிங்கத்தின் மேல் சாத்த பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    சிவபெருமானுக்கு அன்னபூரணி அன்னம் இட்ட போது அவரைப் பிடித்திருந்த பிரம்ம ஹத்தி தோஷத்தில் இருந்து விடு பட்டார். அவர் அன்னம் இட்ட தினம் ஐப்பசி மாத பவுர்ணமி. இதனால் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னா பிஷேக வழிபாடு நடை பெற்று வருகிறது. அன்னா பிஷேக பிரசாதத்தை உண்டால் நோய், நொடிகள் வராது என்பது ஐதீகம்.

    இன்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் புண்ணிய தலமான சுருளி அருவி பண்டார துறையில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கம், நந்தியின் மீது, வடித்து வைக்கப்பட்ட சுத்தமான அன்னத்தை ஆண், பெண் பக்தர்கள் கொட்டி அபிஷேகம் செய்தனர். பின் லிங்கத்தின் மேல் சாத்த பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மீதம் உள்ள உணவு நீர்வாழ் உயிரினங்களுக்காக சுருளி புண்ணிய நதியிலும், முல்லைப் பெரியாற்றிலும், ஏரி, குளங்களிலும் கரைக்க பட்டது. இதையடுத்து அன்னதான மடத்தில் மாலை வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். குருகுலம் சிவனடியார்கள், பக்தர்கள் குழு , ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர். இதேபோல தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களிலும் இன்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடை பெற்றது.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் 24-ந்தேதி நீர்மட்டம் 60.47 அடியாக உயர்ந்தது.
    • முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை 71 அடிஉயரம் கொண்டதாகும். இதன்மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் 48.65 அடியாக நீர்மட்டம் இருந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. வைகை அணைக்கு பெரியாறு, கொட்டக்குடி யாறு, வருசநாடு, மூல வைகையாறு ஆகியவை மூலம் நீர்வரத்து கிடைக்கும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் 24-ந்தேதி நீர்மட்டம் 60.47 அடியாக உயர்ந்தது.

    முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் 24-ந்தேதி 60.47 அடியாக இருந்த நீர்மட்டம் இன்றுகாலை 62.89 அடியாக உயர்ந்துள்ளது. 4 நாட்களில் 2 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைக்கு நீர்வரத்து 1370 கனஅடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. 1227 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1333 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின்நீர்மட்டம் 53.10 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது.
    • இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சங்கர்(35). இவர் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து சங்கருக்கு உத்தரவு வந்தது. ஆனால் அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்குதெரு காலனியை சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(63). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×