

பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது.
மேலும் கோவிலில் அமைந்துள்ள சூரியன், சந்திரன், சிவன், அம்பாள், ஞானாம்பிகை, தட்சிணாமூர்த்தி, அணுக்க விநாயகர், கண்ணப்ப நாயனார், கன்னி மூல கணபதிவிநாயகர், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நாகதோஷ பரிகார விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், கார்த்திகை முருகன், தண்டாயுதபாணி ,நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ,ராகு கேது, சனி, சன்னதி நவகிரகங்கள், பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.