என் மலர்tooltip icon

    தேனி

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக துணை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக கொட்டக்குடி, வராக நதி, சுருளியாறு, வரட்டாறு, மஞ்சளாறு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நீர் பெருக்கு வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. ஏற்கனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2310 கன அடியாக உள்ளது. தற்போது மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5338 மி.கன அடியாக உள்ளது. இன்று மாலை அல்லது நாளை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. 

    அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதனால் கரையோரமுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து வருகிற 10-ந் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி அதற்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதே போல முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 125.85 அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒரே அடி உயர்ந்து 126.85 அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 980 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 2605 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 105 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4018 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.87 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 412 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவி, கொட்டக்குடி ஆறு, மேகமலை அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 5-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 35.2, தேக்கடி 46, கூடலூர் 21.2, உத்தமபாளையம் 50.4, சண்முகாநதி அணை 16, போடி 21.3, மஞ்சளாறு 10.4, சோத்துப்பாறை 52, வைகை அணை 23.4, பெரியகுளம் 14, வீரபாண்டி 21.8, அரண்மனைப்புதூர் 12.2, ஆண்டிபட்டி 61.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
    • வருகிற 10ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது. வரத்து 980 கன அடியாகவும், திறப்பு 105 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    முல்லைப்பெரியாற்றில் உள்ள லோயர்கேம்ப் குருவனூத்து பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் ஆற்றின் குறுக்கே உள்ள சிறு புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நீர் திறப்பு 500 கன அடிக்கு மேல் அதிகரித்தால் மட்டுமே மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 67.26 அடியாக உள்ளது. வரத்து 2680 கன அடியாகவும், திறப்பு 69 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5147 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் கரையோரப்பகுதியில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் நிலை உள்ளது. வருகிற 10ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணி த்துறை மற்றும் வருவா ய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து மற்றும் திறப்பு 336 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 4-ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும், போடி அணைக்கரை பிள்ளையார் அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால் வராக நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையை கடந்து பொது மக்கள் செல்ல வேண்டாம் என பொது ப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    பெரியாறு 2.8, தேக்கடி 6.8, கூடலூர் 4.2, உத்தம பாளையம் 3.6, சண்முகாநதி அணை 5.4, போடி 8, வைகை அணை 3, மஞ்ச ளாறு 4, சோத்துப்பாறை 18, பெரியகுளம் 8, வீரபாண்டி 12, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    போடி:

    போடி நகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி வார்டுகளில் 1000 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    பரமசிவம் கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் குணசேகரன், துப்புரவு அலுவலர் மணிகண்டன், இளநிலை பொறியாளர் சரவணன், துப்புரவு ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கணேசன், அகமது கபீர் மற்றும் கவுன்சிலர் மகேஸ்வரன் உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது.
    • தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்திற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே ஆண் யானை குட்டி மர்மமாக இறந்து கிடந்ததால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேனி மாவட்டம் சுருளி அருவி, மணலாறு, இரவங்க லாறு, வெண்ணியாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தேக்கடி வனப்பகுதியில் இருந்து மேகமலை வனப்பகுதிக்கு யானைகள் வந்துபோவது அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக கம்பத்திற்கு அரிசி கொம்பன் யானை வந்து சென்றபிறகு இதுபோன்ற யானைகள் நடமாட்டம் அதிகரித்து ள்ளது.

    இந்நிலையில் இரவங்க லாறு அணையின் கரையை யொட்டி ஆண் யானை க்குட்டி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறை யினருக்கு தோட்ட தொழி லாளர்கள் தகவல் அளித்தனர்.

    அந்த யானைக்குட்டி ஆண் என்பதால் தந்தத்துடன் காணப்பட்டது. இதனை யடுத்து கால்நடை பரா மரிப்புத்துறை டாக்டர் தலைமையில் அங்கு வந்த குழுவினர் யானை குட்டியி ன் உடலை பிரேத பரிசோ தனை செய்து அதனை வனப்பகுதியிலேயே புதைத்தனர்.

    யானை குட்டி இறப்பிற்கான தகவல்கள் மாறுபட்ட முறையில் வெளியாகி உள்ளது. வயிற்று வலியால் யானை இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் யானையின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் காணப்பட்டன. தந்தம் உள்ள பகுதியிலும் காய ங்கள் இருந்ததால் தந்தத்தி ற்காக கொலை செய்யப்ப ட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே யானையின் இறப்பு குறித்து துணை இயக்குனர் ஆனந்த் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி போலீசில் அவரது மனைவி புகார் அளித்தார்.
    • இந்த நிலையில் தேவாரம் ஓவுலாபுரம் பெட்ரோல் பங்க் பகுதியில் அவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் பொன்னையா. (வயது 73). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி போலீசில் அவரது மனைவி பவுன்தாய் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் தேவாரம் ஓவுலாபுரம் பெட்ரோல் பங்க் பகுதியில் பொன்னையா மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவரை மீட்டு உத்தமபாளைம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னையா உயிரிழந்தார்.

    இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.
    • தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 5 மணி நேரத்தில் 10 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

    குறிப்பாக போடி-மதுரை ரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருப்பதால் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போடியில் 6 வீடுகள் கனமழைக்கு இடிந்து விழுந்தது.

    இதே போல் போடி, கொட்டக்குடி, குரங்கணி, பீச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள் உருண்டு நடுரோட்டில் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன மழை காரணமாக மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி சாலையில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இவை காண்பதற்கு மிகுந்த ரம்யமாக இருந்தாலும் தண்ணீர் வரும் பாதையில் இருந்த பாறைகள் உருண்டு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் குரங்கணி போலீசார் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினருடன் இணைந்து சாலையில் விழுந்த மரங்களையும், பாறைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்துக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைச்சாலையில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

    • தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ளதால் இறைச்சி வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • ஆடுகள் விலை திடீரென அதிகரித்ததால் வாங்க தயக்கம் காட்டினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    மதுரை, உசிலம்பட்டி, தேனி, கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ளதால் இறைச்சி வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    ஆண்டிபட்டி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். ஆனால் ஆடுகள் விலை திடீரென அதிகரித்ததால் வாங்க தயக்கம் காட்டினர். குறிப்பாக 10 கிலோ கொண்டு ஆடு ரூ.10 ஆயிரமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது 1 கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    புதுமண தம்பதிகள் மறுவீடு, ஊர் விருந்து ஆகியவற்றிற்கு அதிக அளவில் அசைவ உணவுகள் பரிமாறப்படும். இதனால் இறைச்சி தேவை அதிகரிப்பதால் விலையையும் உயர்த்தினர். இந்த விலையில் ஆடுகளை வாங்கிச் சென்றால் தங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் வியாபாரிகள் தயக்கத்துடன் இருந்தனர். இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் தீபாவளி விற்பனை மந்தமாக இருந்தது.

    ஒருசில வியாபாரிகள் மட்டும் வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல விலையை குறைத்து விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்தனர்.

    சந்தையின் நடு மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டி சுற்று வட்டார கிராம மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். மழைநீரோடு கழிவு நீரும் சேர்ந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த தண்ணீரை வெளியேற்றி சந்தையை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போடியில் நேற்று பெய்த கன மழை காரணமாக 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது.
    • அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே குடியிப்புகள் உள்ளன. இங்கு செண்பகவேல் என்பவருக்கு சொந்த வீடுகளில் 3 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    நேற்று பெய்த கன மழை காரணமாக இந்த 3 வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுவர் வெளிப்புறம் விழுந்த தால் வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இருந்தபோதும் பெரும்பாலான பகுதி சேதம் அடைந்ததால் குடும்பத்தினர் கடும் சிரமம் அடைந்தனர்.

    நகராட்சி அலுவலகம் பின்புறம் அரசு ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கி ரமிப்புகள் அகற்றப்பட்டன. அதில் சில மண்மேடுகள் அப்புறப்படுத்தாததால் சாக்கடையில் அடைத்து நின்றது. இந்த நிலையில் நேற்று சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக போடி யில் கன மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சாலையில் தண்ணீர் செல்ல வழியி ல்லாததால் கழிவு நீருடன் மழை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள், முதியவர்களுடன் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். சம்பவம் குறித்து அறிந்ததும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து வந்து சாக்கடை கழிவுகளை அகற்றினர். அதில் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    • கோவில் திருவிழாவில் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
    • இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் மிகவும் வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டு வருகிறது. நாளை நடைபெற உள்ள இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு போதை விழிப்புணர்வு குறித்த இரு பாலருக்கான மாரத்தான் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தற்போதைய கால கட்டத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி தம்பிரான் கவுண்டர்கள் இளைஞர் அணி சார்பில் முதலாம் ஆண்டு போட்டி இன்று நடத்தப்பட்டது.

    இந்தப் போட்டியை சுரேஷ் என்ற சுருளிசாமி, நாட்டாமைக்காரர் மற்றும் ஒக்கலிகர் சமுதாய நிர்வாகிகள்ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தேனி தெற்கு விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் வசந்தன், முன்னாள் கம்பம் நகர சேர்மன் சிவக்குமார் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி யில் 400க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீரா ங்கனைகள் கலந்து கொண்டனர்.

    கம்பம் வ. உ.சி. திடலில் தொடங்கி காமயகவு ண்ட ன்பட்டி, நாராயண த்தேவன்பட்டி, சுருளிப்பட்டி வழியாக மீண்டும் கம்பம் வ.உ.சி. திடலில் முடிவுற்றது. சுமார் 13 கி.மீ. தூரம் ஆண்களுக்கும், 5 கி.மீ. தூரம் பெண்களுக்கும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம், சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.

    • சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • இறந்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே வைகை அணை சாலை சிட்கோ அருகே உள்ள மயானத்திற்கு எதிரே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து திம்மரசநாயக்கனூர் பிட்-2 வி.ஏ.ஓ. தேவி ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலியானது தெரிய வந்துள்ளது.

    • திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் தொழிலாளி வந்த பைக் மீது மோதியது.
    • இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொன்னம்பட்டியை சேர்ந்தவர் ரோகித்குமார் (வயது20). செண்ட்ரிங் தொழிலாளியான இவர் பெரியகுளம் சத்தியாநகரில் உள்ள வீட்டில் வேலை பார்க்க சென்றார். வேலை முடிந்து பின்னர் பைக்கில் ஊர் திரும்பிக்கொ ண்டிருந்தார்.

    தேனி- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரோகித்குமார் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே எரசிங்கபாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் ஷஜீவனா தேனி மாவட்டத்தில் அரண்மனைப்புதூர் பகுதியில் தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.
    • நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு நடைபாதையில் இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தேனி:

    சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக நேரலையில் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, சரவணக்குமார் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தேனி மாவட்டத்தில் அர ண்மனை ப்புதூர் பகுதியில் தொடங்கி வைத்து நடைபயிற்சியில் பங்கேற்றார்.

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை யில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபயிற்சிபாதைகள் கண்ட றியப்பட்டு நடைபயி ற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபயிற்சிபாதைகள் உருவாக்கப்படும் என அறிவித்தார். தேனி மாவட்டத்தில் இயற்கையான நடைபயிற்சி பாதையை கண்டறியும் விதமாக மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த 04.06.2023 முதல் 29.10.2023 வரை 29 நாட்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது.

    இத்திட்டம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்சுப்பிரமணியன் கடந்த 7.9.2023 அன்று தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டு, ஆரோக்கியமான நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதிசெய்தார்.

    தேனி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் என்னும் நடைபயிற்சி திட்டம் அரண்மனை புதூர் ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு தொடங்கி கொடு விலார்பட்டி, பள்ளபட்டிபிரிவு, அய்யனா ர்புரம் பிரிவு, கோட்டைப்ப ட்டி வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் ஊராட்சிமன்ற அலுவலகம் வந்தடையும் வகையில் 8 கி.மீ தூரம் இயற்கை எழில் சூழ்ந்த வகையிலும், தூய்மையான காற்று கிடைக்க பெறும் வகையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது .

    பொதுமக்களிடையே தினசரி நடைப்பயிற்சி பழக்கத்தினை ஊக்கபடுத்தவும் நடை பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    60 வயதிற்கு மேற்ப ட்டவர்களிடம் காணப்பட்ட உயர் ரத்த அழுத்தமும், நீரழிவு நோயும் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே காணப்படுகிறது. இதனால் சிறுவயதிலேயே மாரடைப்பு போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் நடைப்பயிற்சி இன்றியமையாததாகும்.

    நமது நாட்டிலேயே முதல் மாநிலமாக நமது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் தனித்துவமான திட்டமாகும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் எடை சீராக பராமரிக்கப்படுகிறது. மேலும் அன்றையதினம் முழுவதும் உற்சாகத்துடனும் சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது. மேலும் இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு நடைபாதையில் இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்துதர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு, உருவாக்கப்பட்ட நடைபயிற்சி பாதைகளை பயன்படுத்தி, நடைபயிற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர்ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமிதா, இணை இயக்குநர் (பொதுசு காதாரத்துறை இயக்குநரகம், சென்னை) சண்முகசுந்தரம், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலை வர்ச க்கரவர்த்தி, துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) குமரகுருபரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர்முருகன், அரண்மனைப்புதூர் ஊராட்சிமன்ற தலை வர்பிச்சை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×