தேவதானப்பட்டி அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் தொழிலாளி வந்த பைக் மீது மோதியது.இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேவதானப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொன்னம்பட்டியை சேர்ந்தவர் ரோகித்குமார் (வயது20). செண்ட்ரிங் தொழிலாளியான இவர் பெரியகுளம் சத்தியாநகரில் உள்ள வீட்டில் வேலை பார்க்க சென்றார். வேலை முடிந்து பின்னர் பைக்கில் ஊர் திரும்பிக்கொ ண்டிருந்தார்.

தேனி- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரோகித்குமார் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானார்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே எரசிங்கபாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com