என் மலர்
தேனி
- சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
- புகாரின்பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி ஸ்ரீராம் நகர் மேற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகள் கனிமொழி (வயது 19). தந்தை இறந்து விட்ட நிலையில் குணா என்பவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்காத தால் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- நகையை பறிமுதல் செய்த போலீசார் அதனை சுருளியம்மாளிடம் ஒப்படைத்தனர்.
- ஒரு பெண்ணே மூதாட்டியின் மேல் மிளகாய் பொடியை தூவி நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மணிநகரைச் சேர்ந்தவர் முனியாண்டி மனைவி சுருளியம்மாள் (வயது 65). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து அருகே உள்ள தெருவுக்கு ரைஸ்மில்லில் மாவு அரைக்க சென்று கொண்டு இருந்தார். அவரை பின் தொடர்ந்து ஒரு பெண் வந்தார். அதனை கவனிக்காத சுருளியம்மாள் ரைஸ்மில் நோக்கி சென்று கொண்டு இருந்தபோது திடீரென அவர் மீது மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இதனால் சுருளியம்மாள் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணை பிடித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் நகையை பறித்தது மந்தை குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜோதி (39) என தெரிய வந்தது. இதனையடுத்து நகையை பறிமுதல் செய்த போலீசார் அதனை சுருளியம்மாளிடம் ஒப்படைத்தனர். பட்ட பகலில் பெண்ணிடம் நகை பறித்து தப்பி ஓட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கம்பம் நகரில் பொதுவாக போதை ஆசாமிகள் மற்றும் வழிப்பறி திருடர்கள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு பெண்ணே மூதாட்டியின் மேல் மிளகாய் பொடியை தூவி நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன.
- சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது.
இங்கு மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கு சின்னமனூரிலிருந்து மகாராஜா மெட்டு வரை 52 கி.மீ நெடுஞ்சாலை செல்கிறது.
இந்நிலையில் பலத்த காற்று வீசியதால் தாக்கு பிடிக்க முடியால் மரங்கள் நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே சின்னமனூர் வனச்சரகத்தினர் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்தியுள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளி கட்டிட சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக பள்ளியின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
- அங்கன்வாடி மைய கட்டிட வளாக முன்புறமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் மதுபான பிரியர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி குப்புநாயக்கன்பட்டி அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் கோவில் அமைந்துள்ளது. இந்தத் தொடக்கப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிட சீரமைப்பு மற்றும் மராமத்து பணிகளுக்காக பள்ளியின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள 2 மதுபான கடைகளில் மது வாங்கிக் கொண்டு இரவு வேளைகளில் மதுபான பிரியர்கள் இந்தப் பள்ளி வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்தி விட்டு அங்கேயே குடிபோதையில் தங்கி விடுகின்றனர்.
மேலும் குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திற்கு உடைத்து செல்வதால் பள்ளிக்கு வரும் சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிட வளாக முன்புறமும் மாலை மற்றும் இரவு வேலைகளில் மதுபான பிரியர்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
இவர்கள் குடித்துவிட்டு உடைத்துச் செல்லும் கண்ணாடி பாட்டில்களால் அங்கன்வாடிக்கு வரும் பச்சிளம் குழந்தைகள் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது.
- தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரையில் நல்லமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சற்றும் எதிர்பாராத நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதனால் வீட்டில் இருந்த நல்லமணி மற்றும் அவரது குடும்பத்தினர் அலறிய டித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர்.
மேலும் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பெரியகுளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பாக பெரும்பாலும் பொதுமக்களே தீயை அணைத்து கட்டுப்படுத்தி னர்.
மேலும் தீ பற்றிய உடன் அங்கு இருந்த மின்வாரிய பணியாளர்கள் மின்சார த்தை துண்டித்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியாளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.
- சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
சின்னமனூர்:
உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள ஹைவே விஸ் பேரூராட்சியில் மேக மலை, மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா ெமட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 895 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.
தமிழக அரசு அறிவித்து ள்ள மகளிர் உரிமை த்தொகை பெறுவதற்கான திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேனி மாவட்ட த்தில் 24 -7 -2023 முதல் 4-8 -2023 வரை முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் வரும் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளடக்கிய 7 கிராமங்க ளுக்கும் முதற்கட்ட முகா ம்கள் பேரூராட்சி அலுவலக த்தில் ஒரு இடத்தில் மட்டும் நடைபெறுதாக இருந்தது. பேரூராட்சியில் உள்ள ஏழு கிராமங்களும் 10 முதல் 15 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் வாகன போக்கு வரத்தும் குறைவாகவே உள்ளது. இதனைத் ெதாட ர்ந்து இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. பேரூர்செயலாளர் கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் கவன த்துக்கு கொண்டு சென்ற னர். கலெக்டர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைவரும் பயன்பெறும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியா ளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.
மேலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விண்ணப்ப பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
- மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்ன ழுத்த கம்பி வழித்தடத்தை மின்வாரிய ஊழியர்கள் அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.
- குடியிருப்பு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவ தானபட்டி அருகே ஜெய மங்கலம் சத்யாநகர் பகுதி யில் உள்ள மிகக் குறுகலான தெருக்களில் உயர் மின்ன ழுத்த கம்பி வழித்தடத்தை மின்வாரிய ஊழியர்கள் அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகில் உயர் மின்னழுத்த மின்சார கம்பிகள் கொண்டு செல்வத ற்காக மின்கம்பங்கள் ஊன்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை பொருத்தும் பணிக்காக வந்தனர். அப்போது குடி யிருப்பு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஜெயமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் மின்வாரிய ஊழியர்கள் பணியை நிறுத்திவிட்டு மின் இணைப்பு இணைப்பதற்காக கொண்டு வந்த மின் உபகரணங்களை திருப்பி எடுத்துச்சென்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மிகக் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளின் மிக அருகாமை யில் மின் கம்பங்களை நிறுவி மின்சாரம் கொண்டு செல்லப்படுவதால், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதனால் விபத்து களும், உயிரிழப்புகளும் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. வீடுகள் இல்லாத பகுதிகளில் சென்ற உயர் மின் அழுத்த வழித்தடத்தை ஒரு சிலரின் சுயலாபத்தி ற்காக குறுகிய தெருக்களில் உயர் மின்னழுத்த வழித்த டத்தை கொண்டு வருகின்ற னர் என்றனர். இச்சம்பவ த்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது
- மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமகனாக உள்ள திருமணமாகாத ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் (வயது 17½ முதல் 21 வரை) பிறந்திருக்க வேண்டும். 10, +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.
இணையவழி தேர்வு 13.10.2023 அன்று நடைபெறும். இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வரதட்சணையாக 50 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என கூறி கணவர் மனைவியை கொடுமைப்படுத்தி 2-வது திருமணத்திற்கு முயன்றுள்ளார்.
- இதுகுறித்த புகாரின்பேரில் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
பெரியகுளம், வடகரை பூந்தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் திவ்யா (வயது 28). இவருக்கும் புல்லக்கா பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரேசன் என்பவ ருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 20 பவுன் நகை மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது.
கணவர் டிரைவர் வேலைக்கு சென்ற போது மாமனாரான முருகன் என்பவர் திவ்யாவின் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இது குறித்து அவர் கணவர் மற்றும் மாமியாரிடம் கூறிய போது அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த தீபாவளி சமயத்தில் திவ்யா மற்றும் குழந்தையை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கதிரேசன் வந்து விட்டார். அப்போது மீண்டும் வீட்டுக்கு வரும் போது 50 பவுன் நகையுடன் வந்தால்தான் வாழ முடியும் என கூறியுள்ளார்.
மேலும் வேறு ஒரு பெண்ணை 2-வது திரு மணம் செய்ய முயன்று ள்ளார். இது குறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளிக்கப்ப ட்டது. போலீசார் கணவர் மற்றும் அவரது குடும்பத்தை எச்சரித்து சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர். அதன்படி மீண்டும் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் திவ்யாவிடம் 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி அடித்து கொடுமைபடுத்தி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திவ்யா புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னமயில் வரதட்சணை கொடுமை படுத்திய கணவர் கதிரேசன், மாமனார் முருகன், மாமியார் அம்சராணி மற்றும் சந்துரு, சுமதி ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.
- 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்ப த்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூடலூர் மின்வாரிய உதவிபொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இதேபோல சின்ன மனூர் கோட்டப்பொறி யாளர் அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர், தேனி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒரு ஆண் ஊழியரும் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் பணியில் சேரும்போது கொடுத்த சான்றிதழ்களில் மதிப்பெண் திருத்தப்பட்ட தாக புகார் எழுந்தது. அதன்படி இவர்கள் பணியில் சேர்ந்தபோது வழங்கிய 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பார்த்தபோது அதில் மதிப்பெண் திருத்தப்பட்டி ருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சத்துணவு மையத்தை சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- அனுமதி யின்றி சொகுசு விடுதிகள் கட்ட மட்டும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகில் உள்ள மேற்குதொடர்ச்சி மலை ப்பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ் , மணலார், மேல்மணலார், வெண்ணி யார், இரவங்கலாறு, மகாராஜாமெட்டு ஆகிய 7 கிராமங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மாணவ-மாணவிகள் ைஹவேவிஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சத்துணவு மையத்ைத சீரமைக்கவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரி விக்கையில், நூற்றுக்க ணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடப்பற்றாக்குறையால் சிரமம் அடைந்து வருகின்ற னர். இங்குள்ள மாணவர்க ளுக்கு இந்த அரசு பள்ளி மட்டுமே உள்ளது.
மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட குழி தோண்டப்பட்டது. ஆனால் வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நிறுத்த ப்பட்டது. ஹைவே விஸ் பேரூராட்சி யில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தேயிலை தோட்ட தொழி லாளர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி புலிகள் காப்பகமாக மாறியதால் கட்டுமான பணிக்கு அனு மதி இல்லை என வனத்துறை யினர் தெரி விக்கின்றனர். அனுமதி யின்றி சொகுசு விடுதிகள் கட்ட மட்டும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதி மறுப்பது வியப்பாக உள்ளது என்று தெரிவித்தனர்.
- மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
- திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே உள்ள மேலசொக்கநாதபுரம் தேனி மாவட்டத்தில் முதல் நிலை பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய பேரூராட்சியாக உள்ளது. பேரூராட்சி க்குட்பட்ட பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர்.
இந்நிலையில் பல்வேறு தெருக்கள் மற்றும் குடியி ருப்பு பகுதிகளில் சாலை, குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தித் தரும்படி பொதுமக்கள் கோரிக்கையை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளிகண்ணன் ராமசாமி மற்றும் செயல் அலுவலர் இளங்கோவன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து பொதுமக்கள் குறைகளை கேட்டு அறிந்தனர்.
சாலை வசதிகள் இல்லாத பகுதிகளில் சாலை வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், அனைத்து அடிப்படை வசதிககள் மற்றும் பிற இடங்களில் சாலைகளை சீரமைத்து தருவதாகவும் உறுதியளித்த னர். மேலும் வீடுகளில் இருந்து கொட்டப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து பேரூராட்சி தூய்மை பணி யாளர் வாகனம் வரும்போது வழங்கும்படி பொது மக்களிடம் அறிவுறுத்தினர்.
திறந்தவெளி கழிப்பறை இல்லாத பேரூராட்சியாக மேல சொக்கநாதபுரம் செயல்பட வேண்டும் என்றும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.






