search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people sucide"

    • இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
    • கடை வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மனமுடைந்தவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே அழகாபுரி அம்மாபட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது39). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஓய்வு பெற்ற பணத்ைத வைத்து நண்பருடன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சேகர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே சிவலிங்கபட்டியை சேர்ந்தவர் பஞ்சராஜா மனைவி மலர்க்கொடி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மலர்க்கொடிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குணமாகாததால் மனமுடைந்த அவர் அரளி விைதயை அரைத்து குடித்து மயங்கினார்.

    ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    போடி அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா மனைவி குள்ளம்மாள் (வயது90). இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விஜயபிரகாஷ் (20). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித்திரிந்துள்ளார். அதனை அவரது தாய் தட்டிக்கேட்டதால் வேதனை அடைந்த விஜயபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கூலித் தொழிலாளிக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆத்துபொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 30).

    கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ்குமார் தினசரி மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ரமேஷ்குமாரிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துடியலூர் அருகே உள்ள அசோகாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 35). ரெடிமேட் சப்பாத்தி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் தொழில் தேவைக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தினேஷ்பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×