search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே மூதாட்டி உள்பட  2 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை

    • இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    போடி அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா மனைவி குள்ளம்மாள் (வயது90). இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விஜயபிரகாஷ் (20). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித்திரிந்துள்ளார். அதனை அவரது தாய் தட்டிக்கேட்டதால் வேதனை அடைந்த விஜயபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×