search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே ராணுவ வீரர் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே ராணுவ வீரர் உள்பட 2 பேர் தற்கொலை

    • இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
    • கடை வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மனமுடைந்தவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே அழகாபுரி அம்மாபட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது39). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஓய்வு பெற்ற பணத்ைத வைத்து நண்பருடன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சேகர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே சிவலிங்கபட்டியை சேர்ந்தவர் பஞ்சராஜா மனைவி மலர்க்கொடி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மலர்க்கொடிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குணமாகாததால் மனமுடைந்த அவர் அரளி விைதயை அரைத்து குடித்து மயங்கினார்.

    ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×