என் மலர்tooltip icon

    சேலம்

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.

    இதனிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 829 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 760 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 63.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 64.20 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 27.91 டி.எம்.சி.யாக உள்ளது.

    கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 424 கனஅடியாவும், ஆற்றில் தண்ணீர் திறப்பு 424 கனஅடியாகவும் உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 98.58 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 856 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரத்து 836 கனஅடி தண்ணீர் குடிநீர் மற்றும் வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
    • சேலம் உள்பட 4 மாவட்டங்களில் கல்மாவு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன. மேலும் சரக்கு ஆட்டோக்கள், டெம்போக்கள் உள்பட 3 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும், மற்ற வாகனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

    சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கார்மெண்ட்ஸ், நூற்பாலை உள்பட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 12-ந்தேதிக்கு முன்பாக ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்து 12 நாட்கள் ஆகியும் வடமாநில தொழிலாளர்கள் இன்னும் தமிழகத்திற்கு திரும்பவில்லை. இதனால் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இன்னும் பூட்டியே கிடக்கின்றன. அது மட்டுமின்றி மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தொழிற்சாலைளில் உற்பத்தி சரிந்து 40 ஆயிரம் லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.

    இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்கு பரிமாற்றம் தடைபட்டுள்ளது. சேலம் உள்பட 4 மாவட்டங்களில் கல்மாவு ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா உள்பட வெளி மாநிலங்களுக்கு சென்ற 30 ஆயிரம் லாரிகள் அங்கு பெய்யும் மழையால் லோடு கிடைக்காமல் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி காய்கறி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதால் தினமும் அதனை எடுத்து சென்ற 5 ஆயிரம் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    மொத்தமாக மழை மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பால் 80 ஆயிரம் லாரிகளும், 30 ஆயிரம் இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் தமிழக சரக்கு வாகனங்கள் லோடு கிடைக்காமல் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனைகளால் உரிமையாளர்களுக்கு வாடகை இழப்பு ஏற்பட்டு வாகனங்கள் பெயரில் வாங்கிய கடனுக்கு மாத தவணை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்பி வருகிறார்கள்.

    எனவே கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள், வங்கிகள் தவணையை வசூலிப்பதில் கெடுபிடிகளை தவிர்க்க வேண்டும், மத்திய மாநில அரசுகள் லாரி தொழிலை நசிவில் இருந்து காக்க காலாண்டு வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் மழை பெய்ததால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
    • மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஆனைமடுவு மற்றும் ஏற்காட்டில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் லேசான தூறலுடன் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணி நேரம் கனமழை கொட்டியது. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் அதிக அளவில் மழை பெய்ததால் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கிறார்கள். இந்த மழையை தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகமாக உள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 35 மி .மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 18.2, வீரகனூர் 10, ஓமலூர் 7, காடையாம்பட்டி 4, கரியகோவில் 2, மேட்டூர் 1.6, எடப்பாடி 1.2, சேலம் 1 மி.மீ. என மாவட்டடம் முழுவதும் 80 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானி யத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும் மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிரா விடர்கள் மற்றும் பழங்கு டியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத் தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுப் பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.
    • அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர்.

    வாழப்பாடி:

    கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமம் வழியாக நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ் லம்பாடி இனப்பெண் ஒருவர் வந்துள்ளார். சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாத அவர் மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கியுள்ளார்.

    கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார். சில தினங்களில் அந்த மரத்தடியிலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்த அவரும் குழந்தையும் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இவரை அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர். இச்சிலைக்கு அருகில் முறுக்கு மீசை முனியப்பன் சாமியையும் பிரதிஷ்டை செய்து எட்டிமரத்து முனியப்பன், லம்பாடி அம்மன் கோவில் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.

    குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் குழந்தையுடன் சென்று லம்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் குழந்தைகளின் அழுகையை அம்மன் கட்டுப்படுத்தி நோய்நொடி வராமல் பாதுகாப்பதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இதன்படி ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் குழந்தையை அம்மன் சன்னதியில் படுக்க வைத்து குழந்தைப் பொங்கல் வைத்து நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
    • உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் மணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் B.Ed மற்றும் TNTET Paper – II தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023 ஆகும்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டுதல், சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது.

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
    • இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர்.

    காக்காபாளையம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மார்க்கமாக தினமும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்றபடியே பரபரப்பாக காணப்படும்.

    இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும், வாகனங்கள் செல்லாதவாறு ரோட்டில் நின்று கொண்டு அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் (கடை எண். 7165) யின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 15 குவாட்டர் பாட்டில், 10 பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். வழக்கம்போல் இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட் டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு சந்து கடை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் பட்டம் பெற்றதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்று பேசினார்.

    விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக இயக்குனர் அகிலா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். முனைவர் பட்டம் ஆய்வை நிறைவு செய்த 153 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வில் நிறைஞர் முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 104 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களை விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    இதில் பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 3 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளின் முதுகலை பாடப்பிரிவில் 31 மாணவர்களுக்கும், இளநிலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழையும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    மேலும் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 42 ஆயிரத்து 915 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 978 மாணவர்களும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனத்தில் படித்த 631 மாணவர்களும் பட்டங்கள் பெற்றனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி உறுதிமொழி வாசிக்க அனைத்து மாணவர்களும் பட்டம் பெற்றதற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பதிவாளர் தங்கவேல் உள்பட பலர் செய்திருந்தனர்.

    தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

    விழாவில் பங்கேற்ற மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. பா.ம.க.வை சேர்ந்த சதாசிவம் விழாவில் இருந்து வெளிநடப்பு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள எந்த எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்காததால் தானும் புறக்கணித்ததாக கூறினார்.

    • ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 107 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 829 கன அடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 63.45 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 63.83 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 27.62 டிஎம்சியாக உள்ளது.

    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
    • கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் கண்ணு வலி கிழங்கு என சொல்லப்படும் செங்காந்தாள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.

    செங்காந்தாள் விதை கொள்முதல் செய்வதற்காக நண்பர்கள் அவினாசியை சேர்ந்த குமார், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாஞ்சியப்பன் (39) ஆகியோருடன் 50 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு காரில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி காலை 4.30 மணிக்கு சேலம் இரும்பாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் போலீஸ் என கூறி வெங்கடேஷ், அவருடன் வந்த குமார், வாஞ்சியப்பன் ஆகியோரை பணத்துடன் காரில் கடத்தியது. பின்னர் தாரமங்கலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றது.

    இது குறித்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை செப்டம்பர் மாதம் இறுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரித்து வந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள முத்தியால் பள்ளியை சேர்ந்த நடராஜன் (53), அவரது மனைவி சுஜாதா (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர் . தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவல் படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூசாரி வட்டம் சீனிவாசன் (44) , கீரப்பாப்பம்பாடி மகாலிங்கம் (39), மாமாங்கம் ஜெகன்மோகன் (44), தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் கோபி (38) ஆகியோரை அவரவர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 6 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    • (வயது 43). இவர் கடந்த 20 வருடங்களாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் வீரபாண்டியார் நகரில் ஸ்ரீ சிவசக்தி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பழைய செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • காலை 9 மணி அளவில் கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் கடையின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அந்த பகுதியினர் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 43). இவர் கடந்த 20 வருடங்களாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் வீரபாண்டியார் நகரில் ஸ்ரீ சிவசக்தி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பழைய செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் செல்போன்கள் பழுது சரி பார்த்து கொடுப்பதுடன் பழைய செல்போன்களையும் வாங்கி சரி செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    தீ விபத்து

    இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் கடையின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அந்த பகுதியினர் பார்த்தனர். உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அங்கு எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அக்கம் பக்கம் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    ஆனாலும் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் செல்போன்கள் என சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மின் கசிவு

    மின் கசிவு காரண மாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

    ×