என் மலர்tooltip icon

    சேலம்

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகள் உள்பட பல கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

    தீவிர நடவடிக்கை

    இதையடுத்து உணவு பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தீவிரமாக கண்காணித்து சீல்வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் புகையிலை பொருட்கள் விற்கப்படும் கடைகளை கண்காணித்து சமீபத்தில் அதிரடி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த 13 கடை உரிமை யாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் சேலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து ஆட்டையாம்பட்டியில் ஒரு மளிகை கடை, ஓமலூர் அருகே செலவடையில் ஒரு மளிகை கடை, எடப்பாடி, ஜலகண்ட ாபுரம் பிரதான சாலையில் ஒரு மளிகை மற்றும் ஒரு பீடா கடை, பெரியசோரகை மாட்டுக்காரன் வளைவில் 2 பெட்டிக்கடைகள், நங்கவள்ளியில் ஒரு பெட்டிக்கடை உள்பட 13 பெட்டி கடைகளுக்கும் சீல் வைக்கும் நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    இன்றும், நாளையும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ள தால் தற்போது அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையடுத்து நாைள மறுநாள் திங்கட் கிழமை முதல் இந்த 13 கடைகளும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிகாரி பேட்டி

    இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், கடந்த 2022-2023-ம் ஆண்டில் 33 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் புகையிலை விற்று கடை உரிமையாளர்கள் சிக்கினால் அந்த கடைகள் சீல் வைக்கப்படுவதுடன், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் 13 கடைகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்த தேர்வு இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
    • 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு 1 மணி வரை நடைபெற்றது. தேர்வெழுதியவர்கள் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்த தேர்வு இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் நடக்கிறது.

    10 மையங்கள்

    இதையொட்டி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் புறநகரில் 8 ஆயிரத்து 95 பேரும், மாநகரில் 3 ஆயிரத்து 89 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 184 பேர் எழுதுகிறார்கள்.

    ஜயராம் கல்லூரி, ஏ.வி.எஸ். கல்லூரி, கணேஷ் கல்லூரி, செந்தில் பப்ளிக் பள்ளி, பத்மாவதி கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, வைஸ்யா கல்லூரி, சோனா கல்லூரி, தியாகராஜர் பாலிடெக்னிக் உள்பட 10 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு 1 மணி வரை நடைபெற்றது. தேர்வெழுதியவர்கள் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டனர். மேலும் வீடியோ காமிரா பதிவும் செய்யப்பட்டனர்.

    கடும் கட்டுப்பாடு

    தேர்வு எழுத வந்த ஆண் மற்றம் பெண் விண்ணப்ப தாரர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனும திக்க வில்லை. தேர்வு எழுதுபவர்களுக்கு தேவை யான குடிநீர் மற்றும் கழி வறை உள்பட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    உதவி ஆய்வாளர் களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை யிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சிறப்பு குழுவினரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 3800 ஆண்கள், 1124 பெண்கள் என மொத்தம் 4924 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை எழுதினர்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.
    • இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் வீராணம் போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணி புரிந்தவர் கதிரேசன் வயது (52), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, வடக்கு துணை கமிஷனர் கவுதம் கோயலை விசாரிக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கை அளித்தார். இதையடுத்து கதிரேசனை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

    • சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    சேலம்:

    சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

    திருச்செங்கோடு

    இதனை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜவேல், மல்லிகா, கார்த்திகேயன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், எட்டிமடை அ.தி.மு.க. நிர்வாகி குணசேகர், அசோக்குமார், சரவணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் லோகநாதன், செந்தில்குமார், முனியப்பன், குணவேல், சிறு மொளசி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர நிர்வாகி சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல்லில் ஸ்ரீதேவி மோகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தீவட்டிப்பட்டி

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், வேப்பிலை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், தீவட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமசாமி வெள்ளையன் என்கிற ராஜமாணிக்கம், ராஜகுரு, பீட்டர், ரஜாக், மணி, ராஜேஷ், நைனாகாடு ராஜா, பாபுலால், வேலு, நாராயணன் குலாப்ஜான், வேப்பிலை ரவி, காசி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி

    உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வாழப்பாடி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதில் நிர்வாகிகள் குபேந்திரன், சிவக்குமார், பத்மாவதிகுமரன், செல்லையா, பார்த்திபன், வெங்கடேசன், அனிதா பழனிமுத்து, பழனிசாமி, மதியழகன், ராஜா, சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.42 அடியாக இருந்ததால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது.
    • அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாகவும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை தற்போது முழுமையாக வெளியே தெரிகிறது. அணையில் நீர்மட்டம் குறைந்ததால் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 583 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 ஆயிரத்து 266 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் அணையின் நீர்மட்டம் 54.42அடியாகவும், அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 20.70 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 14.70 டி.எம்.சி. தண்ணீரே பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். மீதியுள்ள தண்ணீர் குடிநீர், மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.42 அடியாக இருந்ததால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த மணல் திட்டுகள், பாறைகள் ஆங்காங்கே வெளியே தெரிகிறது. சில இடங்களில் வறண்டும், நிலப்பகுதி பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி கபினி அணையின் நீர் மட்டம் 74.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1422 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 102.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2461 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 6038 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளிலிருந்தும் 8038 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கடந்த 23-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.60 ஆக இருந்தது.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படு கின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.60 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிஇ கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது .

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசா வில்) : சென்னை 510, பர்வாலா 461, பெங்களூர் 480, டெல்லி 475, ஐதராபாத் 435, மும்பை 500, மைசூர் 482, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 545.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.110 ஆக பிசிசி அறி வித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஓணம் பண்டிகை

    அன்னதானப்பட்டி,

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்கு றிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இன்று வரலட்சுமி விரதம், வருகிற 29- ந் தேதி செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.260, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.40, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.120, வெள்ளை அரளி - ரூ.240, மஞ்சள் அரளி - ரூ.240, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.140, நந்தியா வட்டம் - ரூ.20 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • 2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம்.
    • தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி ஆலையை நிறுவ நடவடிக்கை

    சேலம்

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே முடக்குபட்டி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் கழுத்தில் மனுவை மாலையாக அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு நூதன முறையில் புகார் அளிக்க வந்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 2000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். மலை குன்றுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் என இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் எங்கள் பகுதியில் தற்போது 6 ஏக்கர் பரப்பளவில் பூச்சிக்கொல்லி ஆலையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிவடைந்து தற்போது ஆலையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பூச்சிக்கொல்லி ஆலை இப்பகுதியில் வந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் குடிநீர் மாசு ஏற்பட்டு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை போலீஸ் நிலையத்திலும், ஊராட்சி மன்றத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்தப் பகுதியில் பூச்சிக்கொல்லி ஆலையை திறக்க அனும திக்காமல் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பேர் சிற்றுண்டி, மற்றும் தேனீர் அருந்துவது வழக்கம்.
    • உணவகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த உணவகத்தில் தினசரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பேர் சிற்றுண்டி, மற்றும் தேனீர் அருந்துவது வழக்கம். இந்த நிலையில் இன்று உணவகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த நபர் ஒருவர் உள்ளே புகுந்த பாம்பை உணவகத்தை விட்டு வெளியே துரத்தினார்.

    இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சர்க்கரை பொங்கல், கிச்சடி, காய்கறி பிரியாணி ஆகிய உணவு வகைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
    • 1,418 பள்ளிகளில் பயின்றுவரும் 1 லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில்ப யன்பெறுகின்றனர்.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் முதல்-அமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    சர்க்கரை பொங்கல், கிச்சடி, காய்கறி பிரியாணி ஆகிய உணவு வகைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி ஆகியோர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

    1,418 பள்ளிகள்

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உன்னத நோக்குடன் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தினை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும்

    விரிவுபடுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,418 பள்ளிகளில் பயின்றுவரும் 1 லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில்ப யன்பெறுகின்றனர். தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். எவ்வழி யில் கல்வி பயின்று வரு கிறோம் என்பது ஒரு தடை

    யாக இருக்காது. இதற்கு எடுத்துக்காட்டாக சந்தி ரயான் 3 திட்ட இயக்குனர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்காணிப்பு

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    இத்திட்டத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், பள்ளிக் குழந்தைகள் ஊட்டச்சத்தோடும், வலிமையாக வளரவும், தங்குதடையின்றி பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், குழந்தைகள் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும்.

    இச்சிறப்புமிக்க இப்பள்ளியைத் தேர்வு செய்த மாவட்ட கலெக்ட ருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் ஆர்.டி.ஓ தணி காச்சலம், மாவட்ட ஒருங்கி ணைப்பு அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஓமலூர் தாசில்தார் புருசோத்தமன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி ராஜா, காமலாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பழனிக்கவுண்டர் உட்பட தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    சேலம்

    அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை வரவேற்று சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சிலைக்கு அமைப்புச் செயலாளர் செம்மலை முன்னிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

    இந்த நிகழ்ச்சியில் பாலசுப்ரமணியன் எம்.எல்.ஏ, அவைத் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.கே.செல்வராஜூ, ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், மாவட்ட இணை செயலாளர் உமாராஜ், துணை செயலாளர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான்கென்னடி, பட்டு ராமச்சந்திரன், சரோஜா, பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, சரவணன், யாதவ மூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், முருகன், கவுன்சிலர்கள் கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சரவணமணி, ராம்ராஜ், ஈஸ்வரன், வக்கீல் கனகராஜ், ஜமுனா ராணி, சுந்தரபாண்டியன், ராமசாமி, முன்னாள் மண்டல குழு தலைவர் மோகன், இளைஞரணி இணை செயலாளர் ஜிம் ராமு, தலைவர் அருள்ராம், வேபிரிட்ஜ் ராஜேந்திரன், பேரவை இணை செயலாளர் செங்கோட்டையன், துணைசெயலாளர் தங்கராஜ், பாமா கண்ணன் மற்றும் வட்டக் செயலாளர்கள் புல்லட் ராஜேந்திரன், கிருபாகரன், பிரகாஷ், புல்லட் செந்தில், ஸ்ரீதர், மேகலா பழனிசாமி, விநாயகம், மார்க்பந்து, நேதாஜி, கர்ணன், நாகராஜ், சகாயம், ரஞ்சித், ஜெகதீஷ், ரமளிசக்தி அன்பு, சந்துரு, ராஜாராம், ஜானகிராம், இளைஞர் பாசறை செயலாளர் வி.எஸ்.பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.
    • அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    வரதட்சணை

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓம லூருக்கு வந்த மோகன்ராஜை அவரது பெற்றோர் மறைத்து வைத்து கொண்ட தாகவும், இதுகுறித்து கேட்டபோது தன்னை மிரட்டி 100 பவுன் நகை ரூ.20 லட்சம் பணம் வாங்கி வா என கூறியதாகவும் பவித்ரா மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்தி ருந்தார். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நேற்று முன்தினம் முதல் கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மோகன்ரா ஜின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

    வழக்கு பதிவு

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீ சார் நேரில் சென்று விசா

    ரணை நடத்தினர். தொடர்ந்து பவித்ராவின் கணவர் மோகன்ராஜ், அவ ரது தந்தை முருகன், தாய் சாரதா என்கிற சத்தியா, உறவினர்கள் பூபதி, சவுமியா, செல்வி, பிரபு ஆகிய 7 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

    ×