search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதை, வாகன ஓட்டிகளிடம் வசூல்சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
    X

    குடிபோதை, வாகன ஓட்டிகளிடம் வசூல்சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.
    • இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் வீராணம் போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணி புரிந்தவர் கதிரேசன் வயது (52), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் மது அருந்தி விட்டு பணிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார்.

    இந்த நிலையில் பணியின் ேபாது விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, வடக்கு துணை கமிஷனர் கவுதம் கோயலை விசாரிக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி கமிஷனரிடம் அறிக்கை அளித்தார். இதையடுத்து கதிரேசனை ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

    Next Story
    ×