என் மலர்
ராணிப்பேட்டை
- நேர்த்திக்கடன் செலுத்தினர்
- ஏராளமாேனார் தரிசனம் செய்தனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஆடி மாதம் 3-ம் வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.
முன்னதாக ஊர் பொது மக்கள் அனைவரும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முத்து மாரியம்ம னுக்கு மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் கொக்கி போட்டு ஊர்வலமா கவும், அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும் மேலதாள முடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் கயிற்றில் தலை முடியை கட்டிய நிலையில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் பென்னகர் சுற்றுவட்டார பகுதிகளான மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு, பாரியம ங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கலவை:
காட்பாடி தாலுகா, 5 புத்தூர் பகுதியைச் பலராமன் (வயது 33).
இவர் திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் கிராமத்திலிருந்து வேனில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மழையூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அத்தியானம் - குட்டியம் சாலையில் சென்றபோது அவ்வழியில் தாழ்வாகச் சென்ற மின் ஒயர் வேனின் மீது உரசியது. வைக்கோலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ அனைத்து பகுதிகளிலும் பரவி வேன் முற்றிலும் சேதமானது.
தகவல் அறிந்து வந்த கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க வலியுறுத்தல்
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை யொட்டி வருகிற 7-ந்தேதி காலை 9 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வட்ட கிளைகள் தோறும் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும்.
இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மாணவிகளுடன் ஆலோசனை நடத்தினார்
- உணவில் காய்கறிகள், கீரைகளை சேர்க்க வேண்டுமென அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல மற்றும் வாலாஜாவில் உள்ள மிக பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாணவிகள் தங்கியுள்ள அறைகள், பயன்படுத்தும் கழிவறைகள், சமையலறைகள், உணவுப் பொருட்களின் இருப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் விடுதி காப்பாளர்களிடம் நாள்தோறும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்து கேட்டறிந்து, உணவில் அதிக அளவில் காய்கறிகள், கீரைகளை சேர்க்க வேண்டுமென விடுதி காப்பாளரை கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, தாசில்தார் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 25 ்கோவில்களில் கோவில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்குராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பித்த விவரத்தினை வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 0416-2977432- என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளது
- கட்டிடங்கள் அகற்றுவது குறித்து கேட்டறிந்தார்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது உழவர் சந்தையை பார்வையிட்ட அவர் அங்கு விவசாயிகள் உள்ளனரா அல்லது வியாபாரிகள் உள் ளனரா என கேட்டறிந்தார். பின்னர் அங்கு இயற்கை முறை யில் தேன்மற்றும் சிறுதானிய கஞ்சி வகைகள் தயாரிக்கும் கடை வைத்திருப்பவர்களிடம் விற்பனைகள் குறித்து கேட்ட றிந்தார்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபன் நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகள் பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகளையும் விரைவாக முடிக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டார்.
தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள நகர்புற நல வாழ்வு மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆற்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட உள்ளதால் அந்த இடத்தில் மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டியதையும் நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலகத் தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், மருந்துகள். உரங்கள் மற்றும் இருப்பு அறையை பார்வையிட்டார். ஆய் வின்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன், மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜெயபிரகாஷ். வேளாண்மைதுறை கண்காணிப்பாளர் கோபி, உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராஜ்குமார், உதவி நிர்வாக அலுவலர் யோகேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கூட்டமாக சுற்றி திரிவதால் போக்குவரத்து நெரிசல்
- முதியவர்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்
ராணிப்பேட்டை:
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வரலாற்று பின்புலத்துடன் தொழில் நகரமாகவும், அன்னிய செலவாணியை ஈட்டி தரும் நகரமாகவும் விளங்கியது ராணிப்பேட்டை நகரம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ராணிப்பேட்டை நகரம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டு மாவட்டத்தின் தலைநகர் என்ற அந்தஸ்தையும் பெற்றது.
மாவட்டத்தின் தலைநகரான பின்னர் ராணிப்பேட்டையிலேயே கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுடன் நகர உள்கட்டமைப்பு வசதிகளிலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது.
இவ்வாறு வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்களை சந்தித்திருந்த போதிலும் மாறாத சில நிகழ்வுகளும் தினந்தோறும் நடந்து, இதை மாற்றவே முடியாதா என்ற எண்ணத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ராணிப்பேட்டை பழைய பஸ் நிறுத்தம், உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது பல ஆண்டுகளாக மாறாமல் தொடர்ந்து வருகிறது.
காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த இடத்தில் மாடுகள் சுற்றுகின்றன. குறிப்பாக மாலை நேரத்தில் அதிக அளவில் மாடுகள் சுற்றுகின்றன.
இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோர்க்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
சாலையில் கூட்டமாக நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது.
இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.
சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்க நகராட்சி சார்பில் அறிவிப்பு செய்வதும் , மாடுகளை பிடிப்பது பின்னர் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து மாடுகளை விட்டு விடுவது என தொடர்ந்து வருகிறது.
கடந்த வாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையோரங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த நடவடிக்கை எப்போது தொடங்கும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்
- ஜெயிலில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையில் அதிகாரிகள், வள்ளி வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வள்ளியின் வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பதும், இவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதி களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதே தொடர்ந்து அதிகாரிகள் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான வள்ளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதே போல் வாலாஜா ஒத்தவாடை தெருவில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு பரத் (25) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.
சோதனையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.
- 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்
- பேரூராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்
கலவை:
கலவை பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ் தினசரி தெருவிற்கு சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டுதோறும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் தின கூலியாக ரூ.330 ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு பணி செய்து வருகிறோம், ஆனால் எங்களுக்கு தினசரி கூலியாக ரூ.305 தருகின்றனர்.
போதிய சம்பளம் இல்லாததால் குடும்பம் வறுமையில் உள்ளது எனக் கூறி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்த அங்கு வந்த பேரூராட்சி தலைவர் கலா சதீஷ், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 4 பேர் மீது வழக்கு பதிவு
- போலீசார் தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம்,ஸ்ரீ ராம் நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் கூழ் வாரத்தல் திருவிழாவும், இரவில் நாடகமும் நடைபெற்றது.
அப்போது அப்பகுதியில் சுகுமார் என்பவரின் வீட்டின் அருகே சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர் .
இதை சுகுமார் மற்றும் அவரது தாய் அமுதா, அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், பாலாஜி ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த வாலிபர்கள் சுகுமார் உள்பட 4 பேரையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த 4 பேரும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக சுகுமார் சிப்காட் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சீக்கராஜபுரம் மோட்டூரை சேர்ந்த விஜி(எ) கருணாகரன், மோகன்குமார், சதீஷ்குமார், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஏராளமானோர் பங்கேற்பு
- பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில், முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வசித்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தி.மு.க அரசை வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முரளி தலைமை தாங்கினார். அ.ம.மு.க.நகர செயலாளர் தனசேகர் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க மண்டல பொறுப்பாளரும், மாவட்ட செயலாளருமான என்.ஜி.பார்த்திபன் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கொடநாட்டில் கொலை,கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை
நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
மாவட்ட அவை த்தலைவர் பொ ற்கோ,மாவட்ட பொருளாளர் குத்புதீன், அ.ம.மு.க மாவட்ட அவைத்தலை வர் பாண்டு ரங்கன், மா வட்ட பொருளாளர் மூர்த்தி , பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ் உள்பட அ.திமு.க.(ஓ.பி.எஸ்.அணி) மற்றும் அ.ம.மு.க . நிர்வாகிகள் , தொண்டர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர செயலாளர் நித்யா நன்றி கூறினார்.
- 5 பேர் படுகாயம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கலவை:
காஞ்சிபுரத்திலிருந்து நேற்று மாலை கலவை நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டது.
இந்த பஸ்சில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் நந்தியம்பாடியைச் சேர்ந்த சாம்பசிவம் (வயது 47) டிரைவர் மற்றும் வடமன ப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (48) கண்டக்டராக பணியாற்றினார்.
கலவை அடுத்த மேச்சேரி அருகே இரவு 8 மணி அளவில் வரும்போது திடீரென பஸ் கியர் பாக்ஸ் உடைந்தது.
இதனால் நிலை தடுமாறிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மீது மோதியது.
புளிய மரம் முறிந்து விழுந்தது. தொடர்ந்து அந்த பஸ் அங்குள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. அதைத்தொடர்ந்து இறுதியாக அருகில் இருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது.
இந்த விபத்தால் பஸ்சின் முன்புறம் முழுவதும் நொறுங்கி சேதமானது. இதில் டிரைவர் சாம்பசிவம் மற்றும் பஸ் பயணிகள் கலவை அடுத்த அல்லாளச்சேரியைச் சேர்ந்த பச்சையப்பன் மனைவி குப்பு( 60) மற்றும் கலவை அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(68) கலவையான் பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (60)அகரம் மேட்டு தெருவை சேர்ந்த தயாளன்( 62)ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் டிரைவர் சாம்பசிவம், குப்பு, முருகேசன் ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






