என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் குதித்து ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி மாலதி (வயது 43). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாலதி நேற்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதிமக்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






