என் மலர்
நீங்கள் தேடியது "தலைவர் தற்கொலை"
- வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 78) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.
நேற்று மதியம் ஜெயராமன் அக்ராவரம் ஏரிக்கரை பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் விரைந்து சென்று மயங்கிய நிலையில் இருந்த ஜெயராமனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
ஆம்புலன்சில் வந்தவர்கள் ஜெயராமனை பரிசோதனை செய்தனர். அப்போது ஜெயராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசில் அவரது மகன் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் ஜெயராமன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி மாலதி (வயது 43). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாலதி நேற்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அப்பகுதிமக்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






