என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் சட்ட நடவடிக்கை
    X

    கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் சட்ட நடவடிக்கை

    • கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை
    • 11 இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    கைத்தறி ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நம் நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு 1998ஆம் ஆண்டு முதல் 11 இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

    கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களான கரை பாவுபோட்டு டிசைனுடன் கூடிய காட்டன் வேட்டி இரகம், பாவு பேட்டு மற்றும் ஊடை பேட்டு மற்றும் புட்டா மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய காட்டன் துண்டு ரகம், கரை பாவு பேட்டு டிசைன் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமுக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன்ட்வீட் மற்றும், சத்தார்க் உள்ளிட்ட 11 ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு (5)-ன்படி சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் பிரிவு 10(ஏ)- ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக 6 மாதகால சிறை தண்டனையோ அல்லது அதிகபட்சமாக விசைத்தறி ஒன்று ரூ.5ஆயிரம் /- வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனையாக வழங்கப்படும்

    கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சென்னை குறளகத்தில் இயங்கி வரும் கைத்தறி துணை இயக்குநர் அமலாக்க பிரிவு - அலுவலகத்ததை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×