என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைக்கோல் ஏற்றி வந்த வேனில் திடீர் தீ
    X

    வைக்கோல் ஏற்றி வந்த வேனில் திடீர் தீ

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கலவை:

    காட்பாடி தாலுகா, 5 புத்தூர் பகுதியைச் பலராமன் (வயது 33).

    இவர் திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் கிராமத்திலிருந்து வேனில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மழையூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அத்தியானம் - குட்டியம் சாலையில் சென்றபோது அவ்வழியில் தாழ்வாகச் சென்ற மின் ஒயர் வேனின் மீது உரசியது. வைக்கோலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    இருப்பினும் தீ அனைத்து பகுதிகளிலும் பரவி வேன் முற்றிலும் சேதமானது.

    தகவல் அறிந்து வந்த கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×