என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple festival Community-verified icon Verified"

    • இரு சமூகத்தினரிடையே தகராறால் நடவடிக்கை
    • போலீசார் குவிப்பு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள பாகவெளி கிராமத்தில் பாப்பாத்தி கண் ணியம்மன், திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை மாத திரு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடத்துவதில் இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    இதனால் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்கு மார், அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், வாலாஜா தாசில்தார் நடராஜ் ஆகி யோர் முன்னிலையில் கடந்த 6-ந் தேதி சமரச பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வில்லை.

    இதனால் இரு சமூகத்தின ரிடையே அமைதியான சூழல் ஏற்படும் வரை கிரா மத்தில் எந்த கோவில்களிலும் திருவிழா நடத்தக் கூடாது என தற்காலிக தடை விதிக் கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தற்காலிக தடை உத்தரவை நீக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. அதன்

    மீது விசாரணை மேற்கொண் டதில் பாப்பாத்தி அம்மன் கோவில் சம்பந்தமாக ஒரே சமூகத்தில் வரவு செலவு பார்ப்பதில் கருத்து வேறு பாடு இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் இரு சமூகத்தினரி டையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக தடை உத்தரவு நீடிப்பதால் பாகவெளி கிராமத்தில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    வெளியிலி ருந்து வரும் ஆட்கள் ஊருக் குள்நுழை வதை தடுக்கபோலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

    • நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • ஏராளமாேனார் தரிசனம் செய்தனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    இங்கு ஆடி மாதம் 3-ம் வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக ஊர் பொது மக்கள் அனைவரும் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர்.

    அதனை தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முத்து மாரியம்ம னுக்கு மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் கொக்கி போட்டு ஊர்வலமா கவும், அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும் மேலதாள முடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்கள் கயிற்றில் தலை முடியை கட்டிய நிலையில் பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதில் பென்னகர் சுற்றுவட்டார பகுதிகளான மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு, பாரியம ங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×