என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பாக்கம் பாகவெளி கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த தடை
    X

    காவேரிப்பாக்கம் பாகவெளி கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த தடை

    • இரு சமூகத்தினரிடையே தகராறால் நடவடிக்கை
    • போலீசார் குவிப்பு

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள பாகவெளி கிராமத்தில் பாப்பாத்தி கண் ணியம்மன், திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை மாத திரு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடத்துவதில் இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.

    இதனால் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்கு மார், அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக், வாலாஜா தாசில்தார் நடராஜ் ஆகி யோர் முன்னிலையில் கடந்த 6-ந் தேதி சமரச பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வில்லை.

    இதனால் இரு சமூகத்தின ரிடையே அமைதியான சூழல் ஏற்படும் வரை கிரா மத்தில் எந்த கோவில்களிலும் திருவிழா நடத்தக் கூடாது என தற்காலிக தடை விதிக் கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தற்காலிக தடை உத்தரவை நீக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. அதன்

    மீது விசாரணை மேற்கொண் டதில் பாப்பாத்தி அம்மன் கோவில் சம்பந்தமாக ஒரே சமூகத்தில் வரவு செலவு பார்ப்பதில் கருத்து வேறு பாடு இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் இரு சமூகத்தினரி டையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக தடை உத்தரவு நீடிப்பதால் பாகவெளி கிராமத்தில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    வெளியிலி ருந்து வரும் ஆட்கள் ஊருக் குள்நுழை வதை தடுக்கபோலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

    Next Story
    ×