என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பொன்னமராவதி கருப்புகுடிபட்டி கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது
    • ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்தனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில மீன் பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் விவசாய பாசன கண்மாயில் நீர் வற்றும் கண்மாய்களில் ஜாதி,மதம் பாராமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாக ஒன்று கூடி கலந்து கொள்ளக்கூடியதே மீன்பிடித் திருவிழாவாகும்.கடந்த ஆண்டு பெய்த மழையும் விவசாயம் போன்றே வரும் ஆண்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் இந்த மீன்பிடித் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாள்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதியில் அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கம்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் குவிந்தனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி மீன்பிடி உபகரணமான ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு எடுத்து சென்றனர்.

    • கந்தர்வகோட்டை அருகே சர்க்கரை ஆலை காவலாளி விபத்தில் பலியானார்
    • திருமணம் நடந்து 2 வருடங்களே ஆன நிலையில் சோகம்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே உள்ள சுங்கம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(வயது 35). இவர் அரசு சர்க்கரை ஆலையில், தனியார் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல இரவு பணியில் ஈடுபட்ட அவர், பணி முடிந்ததும் ஆலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கந்தர்வகோட்டை-தஞ்சாவூர் சாலை சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்துடன் வாலிபர் பிணம் கிடப்பதாக கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடல் கிடந்த இடத்தில் சோதனை நடத்தினர்.முகத்தில் பலத்த காயத்துடன் கிடந்தது சதீஸ்குமாரின் உடல் என்பது ெதரிய வந்தது.

    இதனை தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் அளித்த பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து நடந்ததா? அல்லது சதீஸ்குமாரின் இரு சக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்தால் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்த சதீஸ்குமாருக்கு, பிரியா என்பவருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்து, 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. திருமணமாகி இரண்டே வருடத்தில் சதீஸ்குமார் இறந்த சம்பவம் சுகம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும்.
    • இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும்.

    புதுக்கோட்டை :

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதில் விதிமுறைகள் இருப்பது மிகப்பெரிய கொடுமை. தேர்தல் நேரத்தில் அறிவித்தபோது விதிமுறைகளை அறிவிக்கவில்லை. அப்போது ஏன் சொல்லவில்லை.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை காங்கிரஸ், பா.ஜனதா என 2 கட்சியும் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். இதை தெரிந்து தான் அரசியல் கட்சியினர் ஆதரித்தனர்.

    தமிழ் தேசிய கொள்கையை விட்டு வந்தால் எங்களுடன் இணைந்து செயல்பட தயார் என பா.ஜனதா எச்.ராஜா கூறியுள்ளார். அதற்கு வாய்ப்பு இல்லை. தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வியடைந்ததாக திருமாவளவன் கூறியிருக்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் தெரியும்.

    பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி பேசுவதை விட்டுவிடலாம். ஈழத்தமிழர்களுக்கு நல்லது செய்ய மத்திய அரசு நினைத்தால் கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு குடியுரிமை பெற வேண்டும்.

    கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்ததற்கு காரணம் பணிச்சுமை தான். 6 மாதமாக அவருக்கு விடுமுறை கொடுக்கவில்லை. எனக்கு அவரை தெரியும். நல்ல அறிவாளி, சமூக பற்றுக்கொண்டவர், எல்லாரையும் நேசிக்க கூடியவர். துணிவான அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய கோழைத்தனமானவர் அல்ல. அவரது தற்கொலை அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் உள்ளது.

    டி.ஐ.ஜி. அளவில் உள்ளவர்களே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிற நிலை இருக்கிறபோது சாதாரண போலீசாரின் நிலையை கூறவா வேண்டும். எனவே போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுமுறை விட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல அனுமதிக்கலாம்.

    தமிழ் சினிமாவில் பட்டியலின மக்களின் உரிமை பற்றி பேசப்படுவதை நான் வரவேற்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்.

    சென்னை மெரினா கடல் பகுதியில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் நான் உடைப்பேன். சென்னையில் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையின் கை பறிபோனதில் நிவாரணம் வழங்காமல் முறையற்ற பதில் கூறுவது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் ௩ ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
    • கழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகா ஈஸ்வரர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த திருமண விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா,நகரச் செயலாளர் ராஜா ஆத்மா சேர்மன் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, சிவரஞ்சனி சசிகுமார்,அரவம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தாமரை. பழனிவேலு மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.


    • வடகாடு அருகே குரங்கு கடித்து 7 பேர் காயம் அடைந்தனர்.
    • இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர்.

    புதுக்கோட்டை :

    வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குரங்கு ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சரண்யா, விஜய், லட்சுமி, இந்திரா, சித்ரா, விஜயா உள்பட 7 பேரை கடித்தும், நகங்களால் கீறியும் உள்ளது. இதில் 3 பேர் குழந்தைகள் ஆவர். இதனைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி மற்றும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி சென்றனர். மேலும் இவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறினர்.

    கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்கை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி வனத்துறை மற்றும் கீழாத்தூர் ஊராட்சிக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த குரங்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அமர்ந்து பயமுறுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வர அச்சம் அடைந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டையில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
    • முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, தொழில் கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய கோரிக்கைகள் அடங்கிய 4 மனுக்களை திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் இந்தியன் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் திருநங்கைகளுக்கான இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சியினை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி துவக்கி வைத்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    • அறந்தாங்கி அருகே புதிய பேருந்து நிழற்குடையை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்
    • அமைச்சர் மெய்யநாதன் பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார்.

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காயக்காடு கிராமத்தில் புதிய பேருந்து நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சுற்றுசுழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆவணத்தான்கோட்டை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து பள்ளி வளாகம், கழிவறைகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது ஆசிரியர்களை பள்ளி வளாகத்தை வீட்டை போல தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் 156 மாணவ மாணவியர்கள் படிக்கின்ற பள்ளியில் போதிய வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. அரசு வழங்குகின்ற சலுகைகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் தயக்கம் காட்டக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலரை சாடிய அமைச்சர் கட்டிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பீர்களா எனவும் குற்றம் சாட்டினார். எனவே உடனடியாக போதிய கட்டிட வசதிகளுக்கு பரிந்துரைக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

    அமைச்சரின் செயலால் பொதுமக்கள் பெற்றோர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டாட்சியர் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை இந்து அறநிலையத்துறை சார்பில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 திருமணங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையேற்று நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்க ளை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத்தலைவர் தவ.பாஞ்சாலன், கவுன்சிலர் ரமேஷ்பாபு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா– வை முன்னிட்டு, வரவேற்புக் குழுத் தலைவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் "புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்வு நேற்று முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்றது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.

    பள்ளியின் முதல்வரும், புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும் போது, முதல் முறையாக புத்தகத் திருவிழா புதுக்கோட்டையில் தொடங்கிய ஆண்டிலிருந்து புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து விரும்பிய நூல்களை வாசித்தார்கள். பள்ளி மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி பொதுவான நூல்களை வாசிப்பதால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை, அறிவை, சான்றோர்களின் அனுபவங்களை அறிந்து தெளிவு பெறமுடியும். இளமையில் கல் என்றவாக்கிற்கிணங்க வாசிக்கும் பழக்கத்தை அறிய, நூல்களை நேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த "புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்வு பெரிதும் உதவுகிறது என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்வில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார், செல்வராஜ், ராமன் உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி மற்றும் பெரும்பாலான ஆசிரியகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழா விழிப்புணர்வுக்காக புதுக்கோட்டையில் ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் புத்தகம் வாசித்தனர்
    • புத்தக திருவிழா 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து வரும் 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ள 6-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, 3 லட்சம் பேர் பங்கேற்ற 'புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்வினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா துவக்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுமார் 3 லட்சம் பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொது இடங்களில் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற மாபெரும் நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேர நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டது. இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது.

    இந்த புத்தகத் திருவிழாவில் அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவாற்றவும் உள்ளனர்.புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது" என்ற நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பு என்பது கற்பனை உலகத்தை நிஜமாக்குவதற்கு நம்மிடையே ஆர்வத்தை தூண்டுவதாகும்.

    எனவே மாணவர்கள் அனைவரும் படிக்கும் பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதற்கான வழிவகையினை ஏற்படுத்தும். புத்தகம் படிப்பின் மூலம் நம்மிடையே வளரும் அறிவு செல்வத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய மக்களாக வளர வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கருணாகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி, நூலக அலுவலர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, வேல்சாமி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் .சாலை செந்தில், கவிஞர் தஙகம் மூர்த்தி, டாக்டர் சலீம், அறிவியல் இயக்கம் பாலகிருஷ்ணன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, விவசாய சங்கம் தனபதி, மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





    • 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனைசெய்யபட்டது
    • நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி மனுதாக்கல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த வழக்கில் 13 பேரிடம் டி.என்.ஏ. பரிசோ தனையும், 2 பேரிடம் குரல் பரிசோதனையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் முதற்கட்டமாக நடந்த டி.என்.ஏ. பரிசோதனையின் போது வேங்கை வயலை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் வர மறுப்பு தெரிவி த்தனர். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த நிலையில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமறுத்த 8 பேரிமும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி புது க்கோட்டை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இதில் 8 பேரையும் டி.என்.ஏ. பரசோதனைக்கு உட்படுத்தி கொள்ள கோர்ட் உத்தர விட்டதோடு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சிறுவர்கள் 4 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க அனுமதி கேட்டு புதுக்கோட்டை தாழ்த்தப்ப ட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மனுதாக்கல் செய்தனர்.

    • மின்னல் தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது
    • வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில்கடந்த சில தினங்களுக்கு முன்பு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த கோபி என்பவரின் மனைவி வித்யா மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைதொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இறந்த வித்யாவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசின் நிவாரண உதவித் தொகையான ரூ. 4.லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    ×