என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மறமடக்கியில் புயல் பாதிப்பை பார்க்க அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை சிறைப்பிடித்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மறமடக்கியில் ‘கஜா’ புயல் தாக்கியதால் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான தேக்கு மரங்கள், பலா மரங்கள், மா மரங்கள், வாழை மரங்கள், முருங்கை மரங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மரங்கள் சாய்ந்து விட்டன.
முற்றிலும் இந்த மரங்களில் காய்க்கும் காய், பழங்களை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள் கஜா புயலால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளனர். சொத்துக்களை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மறமடக்கி பகுதி விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மறமடக்கி செல்லவில்லை. மேலும் சேத பாதிப்புகளை கணக்கிட அதிகாரிகளும் செல்லாத நிலையில், மறமடக்கியில் மொத்தம் 2 ஆயிரம் மரங்களுக்குள் தான் சேதம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக மறமடக்கி பகுதி விவசாயிகளுக்கு தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று மறியல் செய்வதற்காக மறமடக்கி கடைவீதியில் கூடினர். அப்போது அந்த பகுதியில் போலீஸ் ஜீப் மற்றும் வேனில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் எதேச்சையாக வந்தனர்.
உடனே விவசாயிகள் அவர்களை சிறைபிடித்தனர். தொடர்ந்து மறமடக்கியில் இருந்து செல்லும் 4 சாலைகளிலும் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த மரங்களுக்கு தீ வைத்து எரித்தனர். சாலையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை மறித்து கருப்பு கொடி கட்டினர்.
காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை போலீசார் சிறை வைக்கப்பட்டிருந்த தகவல் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. பஞ்ச வர்ணத்திற்கு தெரியப்படுத்தியும் அவர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வராததால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா விவசாயிகளிடம், மறமடக்கியில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன் போலீசாரை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மறமடக்கியில் ‘கஜா’ புயல் தாக்கியதால் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான தேக்கு மரங்கள், பலா மரங்கள், மா மரங்கள், வாழை மரங்கள், முருங்கை மரங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் மரங்கள் சாய்ந்து விட்டன.
முற்றிலும் இந்த மரங்களில் காய்க்கும் காய், பழங்களை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகள் கஜா புயலால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இழந்துள்ளனர். சொத்துக்களை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மறமடக்கி பகுதி விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மறமடக்கி செல்லவில்லை. மேலும் சேத பாதிப்புகளை கணக்கிட அதிகாரிகளும் செல்லாத நிலையில், மறமடக்கியில் மொத்தம் 2 ஆயிரம் மரங்களுக்குள் தான் சேதம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாக மறமடக்கி பகுதி விவசாயிகளுக்கு தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று மறியல் செய்வதற்காக மறமடக்கி கடைவீதியில் கூடினர். அப்போது அந்த பகுதியில் போலீஸ் ஜீப் மற்றும் வேனில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் எதேச்சையாக வந்தனர்.
உடனே விவசாயிகள் அவர்களை சிறைபிடித்தனர். தொடர்ந்து மறமடக்கியில் இருந்து செல்லும் 4 சாலைகளிலும் மரங்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த மரங்களுக்கு தீ வைத்து எரித்தனர். சாலையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை மறித்து கருப்பு கொடி கட்டினர்.
காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை போலீசார் சிறை வைக்கப்பட்டிருந்த தகவல் அறந்தாங்கி ஆர்.டி.ஓ. பஞ்ச வர்ணத்திற்கு தெரியப்படுத்தியும் அவர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வராததால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா விவசாயிகளிடம், மறமடக்கியில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதுடன் போலீசாரை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #GajaCyclone #TNMinister #Thangamani
புதுக்கோட்டை:
‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்காக அமைச்சர் தங்கமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட்ட அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள், உயர் மின் அழுத்த கோபரங்கள், துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் துரிதமாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 84 ஆயிரத்து 736 மின் கம்பங்கள், 4 ஆயிரத்து 320 கி.மீ. தொலைவு வரையிலான மின் கம்பிகள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் முற்றிலும் செயல் இழந்துள்ளன.

மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரம் பேர் வந்துள்ளனர். வயல்களில் சாய்ந்துள்ள மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பிகள் உடனடியாக அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
பணிகள் முடிவடைந்த பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான கணக்கீட்டுக்கு பின்னரே மொத்த மதிப்பீடு தெரியவரும்.
மாவட்டத்தில் ஏதாவது ஒரு விதத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அது குறித்து கணக்கீடு பட்டியலில் அவர் சேர்க்கப்படுவார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNMinister #Thangamani
‘கஜா’ புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்காக அமைச்சர் தங்கமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட்ட அமைச்சர் தங்கமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள், உயர் மின் அழுத்த கோபரங்கள், துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் துரிதமாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 84 ஆயிரத்து 736 மின் கம்பங்கள், 4 ஆயிரத்து 320 கி.மீ. தொலைவு வரையிலான மின் கம்பிகள், 841 மின் மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் முற்றிலும் செயல் இழந்துள்ளன.
இதனை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான மின் கம்பங்கள், உபகரணங்கள் இருப்பில் உள்ளன. நகர பகுதிகளில் 2 நாட்களிலும், கிராம பகுதிகளில் 4 நாட்களிலும் மின்சாரம் வழங்கப்படும்.

பணிகள் முடிவடைந்த பகுதிகளுக்கு தற்போது மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மின் வாரியத்திற்கு மட்டும் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான கணக்கீட்டுக்கு பின்னரே மொத்த மதிப்பீடு தெரியவரும்.
மாவட்டத்தில் ஏதாவது ஒரு விதத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அது குறித்து கணக்கீடு பட்டியலில் அவர் சேர்க்கப்படுவார். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNMinister #Thangamani
கஜா புயலால் வாழை, தென்னை, சோளம் சேதமடைந்ததால் சோகத்தில் இருந்த பெண் விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone
கந்தவர்க்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
கந்தவர்க்கோட்டை அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 45). விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வாழை, தென்னை, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.
சமீபத்தில் வந்த கஜா புயலால் இந்த பயிர்கள் கடுமையான வகையில் சேத மடைந்தன. சேதமடைந்த பயிர்களை சந்திரா கடந்த 17-ந்தேதி பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்திரா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கந்தவர்க்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #GajaCyclone
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின் கோர தாண்டவத்தால் பல ஆயிரம் ஏக்கர் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
கந்தவர்க்கோட்டை அருகே உள்ள புதுநகரை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி சந்திரா (வயது 45). விவசாயிகளான இவர்களுக்கு அதே பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வாழை, தென்னை, சோளம் ஆகியவற்றை பயிரிட்டு இருந்தனர். அவற்றை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர்.
சமீபத்தில் வந்த கஜா புயலால் இந்த பயிர்கள் கடுமையான வகையில் சேத மடைந்தன. சேதமடைந்த பயிர்களை சந்திரா கடந்த 17-ந்தேதி பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் அவர் வீடு திரும்பினார். தொடர்ந்து யாருடனும் பேசாமல் சோகத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்திரா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கந்தவர்க்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #GajaCyclone
நிவாரண பணிகள் இன்னும் நிறைவடையாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone
புதுக்கோட்டை:
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத அளவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அதிகளவில் சாய்ந்துள்ளன. அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். #GajaCyclone
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பங்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார். #Gaja
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். குறிப்பாக மின்விநியோகம் விரைவில் கிடைக்கும் வகையில் வெளி மாவட்ட மின் ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்தநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கஜா புயல் நிவாரண நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. 60 ஆண்டுகளாக இல்லாத சேதம். மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின்சாரம் சப்ளை வழங்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் அழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மணமேல்குடி, ஜெகதாபட்டினம், பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டையில் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. இன்றோ நாளையோ அறந்தாங்கியில் மின்சாரம் வழங்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி குடிநீர் வழங்க அறிவுறுத்தி உள்ளோம். தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 200 ஜெனரேட்டர்களை வழங்கி உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான தென்னை, வாழை, தேக்கு, பலா போன்ற மரங்கள் கீழே சாய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
கஜா புயலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சீரமைத்து வருகிறோம். சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் பேசி விவரங்களை கேட்டு வருகிறார். அவரின் உத்தரவின்படி நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று அல்லது நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகிறார். கஜா புயல் முன்னேற்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே பாராட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். குறிப்பாக மின்விநியோகம் விரைவில் கிடைக்கும் வகையில் வெளி மாவட்ட மின் ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்தநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கஜா புயல் நிவாரண நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்து உள்ளது. 60 ஆண்டுகளாக இல்லாத சேதம். மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மின்சாரம் சப்ளை வழங்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் அழைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மணமேல்குடி, ஜெகதாபட்டினம், பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டையில் சில பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது. இன்றோ நாளையோ அறந்தாங்கியில் மின்சாரம் வழங்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி குடிநீர் வழங்க அறிவுறுத்தி உள்ளோம். தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 200 ஜெனரேட்டர்களை வழங்கி உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான தென்னை, வாழை, தேக்கு, பலா போன்ற மரங்கள் கீழே சாய்ந்துவிட்டன. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
கஜா புயலால் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து சீரமைத்து வருகிறோம். சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி என்னிடம் தொலை பேசியில் பேசி விவரங்களை கேட்டு வருகிறார். அவரின் உத்தரவின்படி நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட இன்று அல்லது நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வருகிறார். கஜா புயல் முன்னேற்பாடு மற்றும் சீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே பாராட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
கஜா புயலால் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகையாக பெறப்படுகிறது. #Gaja
புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வர ஒரு சில வாரம் ஆகலாம் என கூறப்படுகிறது. மழையை தரும் புயல் என்று நம்பியிருந்த நிலையில் மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் புயலாகவே கஜா இருந்துள்ளது.
கிராமங்களின் அழகை முற்றிலும் அழித்துள்ள இந்த புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் பெரும்பாலும் வீடுகளில் உணவு சமைப்பது முதல் குளிப்பது வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கு போர்வெல் கிணறே ஆதாரமாக இருந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாததால் மக்கள் முடங்கியுள்ளனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களை நாடியுள்ளனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் திருக்கோகர்ணம், திலகர்திடல், காமராஜ் நகர் பகுதியில் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒருமணி நேரத்திற்கு ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதனை நாடியுள்ளனர்.
கிராமங்களின் அழகை முற்றிலும் அழித்துள்ள இந்த புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் பெரும்பாலும் வீடுகளில் உணவு சமைப்பது முதல் குளிப்பது வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கு போர்வெல் கிணறே ஆதாரமாக இருந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாததால் மக்கள் முடங்கியுள்ளனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களை நாடியுள்ளனர்.
இந்தநிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் திருக்கோகர்ணம், திலகர்திடல், காமராஜ் நகர் பகுதியில் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒருமணி நேரத்திற்கு ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதனை நாடியுள்ளனர்.
நிவாரண உதவிகள் வழங்க கோரி புதுக்கோட்டை - மணப்பாறை பகுதியில் பொதுமக்கள் சாலையில் சமையல் செய்து சாப்பிட்டு மறியல் செய்து வருகின்றனர். #Gaja #GajaCyclone
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தை கஜா புயல் புரட்டி போட்டுள்ளது. மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் 3 நாட்களாக தவித்து வருகின்றனர். சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்திற்குட்பட்ட மாங்காடு, வடகாடு பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் தொய்வு, குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் குறித்து கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும், பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை தீயிட்டு கொளுத்தியும், மரங்களை வெட்டி போட்டும் எதிர்ப்பை தெரிவித்தனர். நடுரோட்டில் சமையல் செய்து சாப்பிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கிராமப் பகுதியில் மரங்கள் முறிந்துள்ளதால் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரும் கிடைக்கவில்லை. இதுவரை எந்த அலுவலர்களும் கிராமப்பகுதிகளுக்கு வந்து அதற்கான பணிகளில் ஈடுபடவில்லை. நகர் பகுதிகளை போன்று கிராமப் பகுதிகளிலும் அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
முதற்கட்டமாக அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் ஜென ரேட்டர்கள் மூலம் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியா வசிய பொருட்களை தடையில்லாமல் வழங்க வேண்டும். மேலும் பாலும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி, மரங்கள், வீடுகள், தொழில் என சுமார் ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நிவாரண உதவி செய்ய வேண்டும் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்தூர் ஊராட்சி பகுதியில் புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து சாலையில் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கோரி அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிசானத்தூர் விலக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தாசில்தார் ஆரமுததேவசேனா, ஆணையர்கள் வெங்கடேஷ் பிரபு, மகாலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மரங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை பணிகளை அதிகாரிகள் எடுத்ததை தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு இன்னும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மணப்பாறை பகுதியில் கஜா புயலால் பகுதிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் ரத்தினவேல் எம்.பி. உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்தநிலையில் மணப்பாறை அருகே உள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிகளை தம்பிதுரை மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என்று கூறி, அந்த பகுதி மக்கள் உசிலம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களுடைய கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நிவாரண வழங்க கோரியும், சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளக்கோரியும் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மணப்பாறை பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை கஜா புயல் புரட்டி போட்டுள்ளது. மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் 3 நாட்களாக தவித்து வருகின்றனர். சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்திற்குட்பட்ட மாங்காடு, வடகாடு பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் தொய்வு, குடிநீர் விநியோகம் போன்ற பணிகள் குறித்து கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்தும், பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை தீயிட்டு கொளுத்தியும், மரங்களை வெட்டி போட்டும் எதிர்ப்பை தெரிவித்தனர். நடுரோட்டில் சமையல் செய்து சாப்பிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கிராமப் பகுதியில் மரங்கள் முறிந்துள்ளதால் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததில் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரும் கிடைக்கவில்லை. இதுவரை எந்த அலுவலர்களும் கிராமப்பகுதிகளுக்கு வந்து அதற்கான பணிகளில் ஈடுபடவில்லை. நகர் பகுதிகளை போன்று கிராமப் பகுதிகளிலும் அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
முதற்கட்டமாக அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் ஜென ரேட்டர்கள் மூலம் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியா வசிய பொருட்களை தடையில்லாமல் வழங்க வேண்டும். மேலும் பாலும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி, மரங்கள், வீடுகள், தொழில் என சுமார் ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து நிவாரண உதவி செய்ய வேண்டும் என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்தூர் ஊராட்சி பகுதியில் புயல் காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து சாலையில் கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளக்கோரி அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிசானத்தூர் விலக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தாசில்தார் ஆரமுததேவசேனா, ஆணையர்கள் வெங்கடேஷ் பிரபு, மகாலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மரங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை பணிகளை அதிகாரிகள் எடுத்ததை தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு இன்னும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மணப்பாறை பகுதியில் கஜா புயலால் பகுதிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மாவட்ட கலெக்டர் ராசாமணி மற்றும் ரத்தினவேல் எம்.பி. உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இந்தநிலையில் மணப்பாறை அருகே உள்ள உசிலம்பட்டி, தவிட்டுப்பட்டி, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிகளை தம்பிதுரை மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என்று கூறி, அந்த பகுதி மக்கள் உசிலம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களுடைய கோரிக்கை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நிவாரண வழங்க கோரியும், சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளக்கோரியும் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் திருச்சி மணப்பாறை பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை நீண்டு கொண்டே செல்கிறது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, அரிமளம் உள்பட பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒருசில இடங்களில் பொதுமக்களே சரிந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே பணிபுரிவதை காண முடிகிறது.
திருச்சி, சிவகங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தீயணைப்பு துறையினர் 300 பேர் வந்து, பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டுமானால் மீட்பு பணியாளர்கள் அதிகமாக தேவைப்படுகிற நிலை உள்ளது.
சாய்ந்த மரங்கள் அகற்றப்படாததால் கிராமப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், லாரிகள், கார்கள் செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவரக்கூடிய நிலை உள்ளது. புதுக்கோட்டை நகரப்பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
வீடுகள் முன்பு மற்றும் தெருக்களில் சாய்ந்த மரங்களை பொது மக்களே வெட்டி அகற்றி இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் வெட்டிய மரக்கிளைகளை எடுத்துச் செல்லக்கூட பணியாளர்கள் யாரும் இல்லை.
மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சார சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டதால் மின்கம்பங்கள் சேதத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சேதமடைந்த மின்கம்பங்கள், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக உடனடியாக புதியவை பொருத்த முடியாததால் மின்சாரம் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது. குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க நினைத்தாலும் உரிய தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

கிராமங்களில் தேங்கிய மழை நீரை பாத்திரங்கள் கழுவவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மீட்பு பணிகளில் முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆவுடையார்கோவில், திருமயம், மீமிசல், மணமேல்குடி, கொடிகுளம், அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய 7 பகுதிகளுக்கு நேற்று மின்சார சேவை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் இன்னும் புதுக்கோட்டை நகரப்பகுதி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மின்சார சேவை முற்றிலும் இல்லாததால் கடந்த 2 நாட்களாக இரவில் மின்சாரம் இன்றி இருள் நிறைந்து காணப்படுகிறது.
நெடுஞ்சாலை பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியும் மும்முரமாக நடக்கிறது. பொக்லைன் எந்திரம், ராட்சத எந்திரங் களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரக்கிளைகளை நகராட்சி பணியாளர்கள் லாரி மூலம் அப்புறப்படுத்தி வருகின்ற னர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல புயல் தாக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன்பின் தற்போது ‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் தெரிவித்தனர். புயல் பாதிப்பு மீட்பு பணி நேற்று 2-வது நாளாக நடந்த நிலையில், முழுமையாக முடிவடைய இன்னும் 6 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரு வார காலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூறைக்காற்றால் மாவட்டத்தில் மா, பலா, தென்னை மரங்கள் சாய்ந்ததோடு, காய்கறிகள், கரும்புகள், நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரிமளம் பகுதியில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் பல ஏக்கர் கணக்கில் சேதமடைந்துள்ளன.
விவசாயிகளின் விளைபொருட்கள் பாதிப்படைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் உணவு சமைக்கும் பொருட்கள் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, அரிமளம் உள்பட பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒருசில இடங்களில் பொதுமக்களே சரிந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே பணிபுரிவதை காண முடிகிறது.
திருச்சி, சிவகங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தீயணைப்பு துறையினர் 300 பேர் வந்து, பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டுமானால் மீட்பு பணியாளர்கள் அதிகமாக தேவைப்படுகிற நிலை உள்ளது.
சாய்ந்த மரங்கள் அகற்றப்படாததால் கிராமப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், லாரிகள், கார்கள் செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவரக்கூடிய நிலை உள்ளது. புதுக்கோட்டை நகரப்பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
வீடுகள் முன்பு மற்றும் தெருக்களில் சாய்ந்த மரங்களை பொது மக்களே வெட்டி அகற்றி இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் வெட்டிய மரக்கிளைகளை எடுத்துச் செல்லக்கூட பணியாளர்கள் யாரும் இல்லை.
மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சார சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டதால் மின்கம்பங்கள் சேதத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சேதமடைந்த மின்கம்பங்கள், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக உடனடியாக புதியவை பொருத்த முடியாததால் மின்சாரம் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது. குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க நினைத்தாலும் உரிய தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

கிராமங்களில் தேங்கிய மழை நீரை பாத்திரங்கள் கழுவவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மீட்பு பணிகளில் முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆவுடையார்கோவில், திருமயம், மீமிசல், மணமேல்குடி, கொடிகுளம், அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய 7 பகுதிகளுக்கு நேற்று மின்சார சேவை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் இன்னும் புதுக்கோட்டை நகரப்பகுதி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மின்சார சேவை முற்றிலும் இல்லாததால் கடந்த 2 நாட்களாக இரவில் மின்சாரம் இன்றி இருள் நிறைந்து காணப்படுகிறது.
நெடுஞ்சாலை பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியும் மும்முரமாக நடக்கிறது. பொக்லைன் எந்திரம், ராட்சத எந்திரங் களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரக்கிளைகளை நகராட்சி பணியாளர்கள் லாரி மூலம் அப்புறப்படுத்தி வருகின்ற னர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல புயல் தாக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன்பின் தற்போது ‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் தெரிவித்தனர். புயல் பாதிப்பு மீட்பு பணி நேற்று 2-வது நாளாக நடந்த நிலையில், முழுமையாக முடிவடைய இன்னும் 6 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரு வார காலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூறைக்காற்றால் மாவட்டத்தில் மா, பலா, தென்னை மரங்கள் சாய்ந்ததோடு, காய்கறிகள், கரும்புகள், நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரிமளம் பகுதியில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் பல ஏக்கர் கணக்கில் சேதமடைந்துள்ளன.
விவசாயிகளின் விளைபொருட்கள் பாதிப்படைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் உணவு சமைக்கும் பொருட்கள் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
புயல் சேத கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டதால் அதிகாரிகள், போலீசார் மீது விவசாயிக்ள கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. #GajaCyclone
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பெருமளவில் சேதத்தை எற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் கஜா புயலின் பாதிப்பு அதிகம் உள்ளது.
அப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பலா, தென்னை மரங்கள், மலர் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகவில்லை. சேதமடைந்த பகுதியை அதிகாரிகள் பார்வையிட வராததால் அப்பகுதி விவசாயிகள் விரக்தியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு வேளாண்மை உதவி அலுவலர்கள் 2 பேர் கொத்தமங்கலம் பகுதியில் சேத மதிப்பை கணக்கிட சென்றனர். அப்போது அவர்களை கிராம மக்கள் திடீரென்று சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த டி.ஆர்.ஓ. ராமசாமி, ஆர்.டி.ஓ. டெய்சி குமார், தாசில்தார் ரத்தின குமாரி ஆகியோர் டி.எஸ்.பி. அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நேற்றிரவு சேதம் பற்றி கணக்கெடுக்க ஆலங்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது வழியில் கொத்தமங்கலத்தில் வழி மறித்த விவசாயிகள், தங்கள் பகுதியில் கணக்கெடுக்கப்பட்ட சேதம் குறித்து விசாரித்தனர். அதில் குளறுபடி இருந்ததாக தெரிவித்த விவசாயிகள் திடீரென ஆத்திரமடைந்து அதிகாரிகள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். டி.எஸ்.பி. அய்யனார் தலையில் கல் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் வெளியேறினர்.
இதனிடையே அங்கு நின்ற தாசில்தார், டி.எஸ்.பி., போலீசார் வந்த 4 கார்களுக்கு விவசாயிகள், கிராம மக்கள் தீ வைத்தனர். இதில் கார்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பெருமளவில் சேதத்தை எற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் கஜா புயலின் பாதிப்பு அதிகம் உள்ளது.
அப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பலா, தென்னை மரங்கள், மலர் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகவில்லை. சேதமடைந்த பகுதியை அதிகாரிகள் பார்வையிட வராததால் அப்பகுதி விவசாயிகள் விரக்தியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு வேளாண்மை உதவி அலுவலர்கள் 2 பேர் கொத்தமங்கலம் பகுதியில் சேத மதிப்பை கணக்கிட சென்றனர். அப்போது அவர்களை கிராம மக்கள் திடீரென்று சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த டி.ஆர்.ஓ. ராமசாமி, ஆர்.டி.ஓ. டெய்சி குமார், தாசில்தார் ரத்தின குமாரி ஆகியோர் டி.எஸ்.பி. அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நேற்றிரவு சேதம் பற்றி கணக்கெடுக்க ஆலங்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது வழியில் கொத்தமங்கலத்தில் வழி மறித்த விவசாயிகள், தங்கள் பகுதியில் கணக்கெடுக்கப்பட்ட சேதம் குறித்து விசாரித்தனர். அதில் குளறுபடி இருந்ததாக தெரிவித்த விவசாயிகள் திடீரென ஆத்திரமடைந்து அதிகாரிகள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். டி.எஸ்.பி. அய்யனார் தலையில் கல் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் வெளியேறினர்.
இதனிடையே அங்கு நின்ற தாசில்தார், டி.எஸ்.பி., போலீசார் வந்த 4 கார்களுக்கு விவசாயிகள், கிராம மக்கள் தீ வைத்தனர். இதில் கார்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோரதாண்டவமாடிய கஜா புயலால் மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கி நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. #GajaCyclone
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரதாண்டவமாடிய கஜா புயலுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. தகவல் தொடர்பு துண்டிப்பால் புதுக்கோட்டை மாவட்டம் தனித்தீவாக மாறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட்ட கஜா புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில கிடப்பதால் மாவட்டம் முழுவதிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மரங்கள் வீடுகளில் சாய்ந்ததால் 100க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம், வருவாய், காவல்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பலத்த காற்று வீசியதால் வீட்டின் மேல்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, மாங்காடு , கொத்தமங்கலம்,கீரமங்கலம், அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மா, பலா, வாழை, கரும்பு, காய்கறி பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.
திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமணப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. கணினி, மின்சார வயர்கள், மின் கம்பங்கள் சரிந்து கடும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளன. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட 60விசைப் படகுகள் என்னஆனது என தெரியவில்லை. அதனை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுமாவடி, முத்துக்குடா, மணமேல்குடி, ஆவுடையார் கோவில், பிள்ளையார் திடல், அந்தோணியார்புரம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி உள்ளிட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாவல் ஏரி பகுதியில் குடிசை வீட்டில் இருந்த 27 நரிக்குறவர் குடும்பங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் சேத மதிப்பு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதோடு, மின்கம்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் சீரமைப்பு பணியும்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் சேதமான பகுதிகளை சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #GajaCyclone
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரதாண்டவமாடிய கஜா புயலுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. தகவல் தொடர்பு துண்டிப்பால் புதுக்கோட்டை மாவட்டம் தனித்தீவாக மாறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட்ட கஜா புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில கிடப்பதால் மாவட்டம் முழுவதிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மரங்கள் வீடுகளில் சாய்ந்ததால் 100க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம், வருவாய், காவல்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பலத்த காற்று வீசியதால் வீட்டின் மேல்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.
கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, மாங்காடு , கொத்தமங்கலம்,கீரமங்கலம், அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மா, பலா, வாழை, கரும்பு, காய்கறி பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.
திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமணப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. கணினி, மின்சார வயர்கள், மின் கம்பங்கள் சரிந்து கடும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளன. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட 60விசைப் படகுகள் என்னஆனது என தெரியவில்லை. அதனை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுமாவடி, முத்துக்குடா, மணமேல்குடி, ஆவுடையார் கோவில், பிள்ளையார் திடல், அந்தோணியார்புரம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி உள்ளிட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாவல் ஏரி பகுதியில் குடிசை வீட்டில் இருந்த 27 நரிக்குறவர் குடும்பங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் சேத மதிப்பு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதோடு, மின்கம்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் சீரமைப்பு பணியும்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் சேதமான பகுதிகளை சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #GajaCyclone
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. #GajaCyclone
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளின் மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகள் புயலில் சேதமடைந்ததால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குடிநீர் பாட்டிலை ரூ.50க்கு வியாபாரிகள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மின்தடையால் மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுகள் தயார் செய்ய முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படாததால் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைப்பதற்காக நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் முழுமையாக சீரமைக்க இன்னும் 3 நாட்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மட்டங்காலில் அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கு 12 மிகப்பெரிய கட்டிடங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள், பருப்பு, கோதுமை, அரிசி என 12 ஆயிரம் மூட்டைகள் இருந்தன. இவற்றின் மேற்கூரைகள் சிமெண்ட்சீட்டால் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கஜா புயலால் சீட்கூரைகள் காற்றில் பறந்தன. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து உணவு பொருட்களும் மழையில் நனைந்து சேதமாகின. புயல் பாதிப்பு காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளின் மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகள் புயலில் சேதமடைந்ததால் குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த குடிநீர் பாட்டிலை ரூ.50க்கு வியாபாரிகள் சிலர் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ஒரு லிட்டர் பால் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மின்தடையால் மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உணவுகள் தயார் செய்ய முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்படாததால் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைப்பதற்காக நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் முழுமையாக சீரமைக்க இன்னும் 3 நாட்கள் வரை ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மட்டங்காலில் அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கு 12 மிகப்பெரிய கட்டிடங்களில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள், பருப்பு, கோதுமை, அரிசி என 12 ஆயிரம் மூட்டைகள் இருந்தன. இவற்றின் மேற்கூரைகள் சிமெண்ட்சீட்டால் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கஜா புயலால் சீட்கூரைகள் காற்றில் பறந்தன. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து உணவு பொருட்களும் மழையில் நனைந்து சேதமாகின. புயல் பாதிப்பு காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
புதுக்கோட்டை:
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மின்தடையால் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனவயல், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்தன. இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் , தங்கள் பகுதியில் சேதமான இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும். சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #GajaCyclone
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மின்தடையால் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனவயல், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்தன. இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்
இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் , தங்கள் பகுதியில் சேதமான இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும். சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #GajaCyclone






