என் மலர்
புதுக்கோட்டை
திருச்சி:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ஆங்காங்கே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மச்சுவாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் விரைந்து சென்ற பறக்கும்படையினர் மச்சுவாடி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் பழனி, சதாசிவம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரத்து 500 பணம், அ.தி. மு.க. துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விராலிமலை தொகுதிக்குட்பட்ட ராஜாளிப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தி.மு.க.வை சேர்ந்த மணி, அ.தி.மு.க.வை சேர்ந்த முருகேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குடியில் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி வீட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு அவருடைய கணவர் சபரீசன் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதுபோல அண்ணா நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மோகனின் வீடு, அவருடைய மகனும், சபரீசன் நண்பருமான கார்த்தி மோகனின் அண்ணாநகரில் உள்ள அலுவலகம் மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா என்பவரின் வீடு, சேத்துப்பட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேபோல் கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள, கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியின் வீட்டில் காலை 11 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராயனூரில் உள்ள தி.மு.க. மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன் வீட்டிலும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கொங்கு மெஸ் சுப்ரமணி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட கே.வி.கோட்டை திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளே அதிக அளவில் வசித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகளும் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக ஆலங்குடி தாலுகா மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால் அங்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள், இது இங்குள்ள மக்கள்தொகைக்கு போதுமானது அல்ல. இதயநோய் மருத்துவர், ஆர்த்தோ மருத்துவர் போன்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லை. ரத்த வங்கி இல்லை. இதனால் விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் மகப்பேறுகாலத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கோட்டைக்கு செல்லவேண்டியநிலை உள்ளது. அவ்வளவு தூரம் செல்லும்போது, சில சமயங்களில் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலை உள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி இல்லை. மேலும் பொதுவார்டில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து காணப்படுகிறது. அந்த வார்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மழைக்காலங்களில் அந்த ஜன்னல் வழியாக தண்ணீர் வருகிறது. கட்டிடங்களில் மரக்கன்றுகள் முளைத்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் சுமார் 60 படுக்கைகள் உள்ளன. படுக்கை விரிப்புகளை துவைத்து தூய்மைப்படுத்த ஒரே ஒரு சலவைத்தொழிலாளி மட்டுமே உள்ளார். அதுமட்டுமின்றி துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மிகக்குறைந்த அளவிலே உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி, இங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






