search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.
    X
    விராலிமலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை படத்தில் காணலாம்.

    விராலிமலை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது

    விராலிமலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    விராலிமலை:

    தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விராலிமலை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் மாதிரிப் பட்டி பிரிவு சாலை மற்றும் அத்திப்பள்ளம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 43) என்பவர் மாதிரிப்பட்டி பிரிவு சாலையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அத்திபள்ளத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மார்கண்டன் (40) என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து விற்னைக்காக வைத்திருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×