என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கணினி துறையில் 2 திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டது
    • இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமியின் (ஐ.சி.டி. அகாடமி ) சார்பில் செப்டம்பர் 30-ந் தேதி மதுரையில் பிரிட்ஜ் 2023-ன் 52-வது பதிப்பு மாநாடு நடைபெற்றது.டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல் என்பதே இந்த கருத்தரங்கின் கருப்பொருள் ஆகும். எனவே இதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கல்வி சேவையின் மூலம் சமூக வ ளர்ச்சிக்கு முக்கிய ப ங்காற்றும் மிக சிறந்த ஆளு மையாக விளங்குபவர். புதிய தொ ழில்முனைவோர்களையும், புதிய, சிறந்த கண்டுபி டிப்பாளர்களையும் உருவாக்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருபவர். இந்த மாநாட்டில் வேந்தரின் வழிகாட்டுதலின்படி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் பங்களிப்புடன் கணினி துறையில் 2 எக்சலென்ஸ் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும். கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல பெரிய சர்வதேச கம்பெனிகளில் பணியில் சேர மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்க்காக அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் வழங்கப்படும் "கிளவுட் ஆர்கிடெக்ட்டிங்" என்ற பயிற்சி வகுப்பும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் வழங்கப்படும் மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ. டேட்டா அனலிஸ்ட் என்ற பயிற்சி வகுப்பும் ஐ.சி.டி. அகடெமியின் பங்களிப்புடன் இந்த மையத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் சார்பாக, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொழில் நிறுவங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் , மனித வளமேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் மூத்த கல்வியாளர்கள்களின் பயனுள்ள உரைகளை கேட்க இந்த குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில், நாம் அனைவரும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் பேசிய அனைவரும் சுட்டிக்காட்டினர். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

    • பெரம்பலூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில் எம்.ஜி.ஆர். விளை யாட்டு அரங்கில் 2 நாள்கள் நடந்த வாலிபால் போட்டி களில் வெற்றிபெற்ற அணி யினருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    போட்டி தொடக்க விழா விற்கு வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னராக எஸ்பி ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு போ ட்டியை தொடங்கிவைத்தார்.

    மாவட்ட அளவில் ஆண் கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக நடைபெற்ற இப்போட்டிகளில் 40 அணி களை சேர்ந்த 240 விளையா ட்டு வீரர்கள், வீராங்கணை கள் கலந்துகொண்டனர். இதில், பெண்களுக்கான போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் முதலிடமும், எஸ்.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடமும், ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாண விகள் 3-வது இடமும் பெற்றனர்.ஆண்களுக்கான போட்டியில், எஸ்.ஆடுதுறை எவரெஸ்ட் அணியினர் முதலிடமும், தனலட்சுமி கல்விக் குழுமம் 2-வது இடமும், கொளக்காநத்தம் டி.ஜி.பி அணியினர் 3-வது இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிக ளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டிகளில் வெற்றி ப்பெற்ற அணிகளுக்கு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவன தலைவர் கணேசன் பரிசு கோப்பை, ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    இதில் மாவட்ட விளை யாட்டு அலுவலர் லெனின், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர்கள் வல்லபன், செங்குட்டுவன், தி.மு.க. ஒன்றிய செயலாள ர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன், துணை செயலாளர் சிவராஜ், இணை செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக வாலிபால் சங்க மாவட்ட செயலாளர் அதியமான் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.

    • எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வழிபாடு நடைபெற்றது
    • மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை கோவிலில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலி ங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் காக ன்னை ஈஸ்வரர் கோவில் மற்றும் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவா மிகள் மணிமண்டபத்திலும் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி நடந்த சிறப்பு வழிப்பாட்டில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து, உலக மக்கள் நன்மைக்காக தொடர்ந்து நடைபெற்ற கோமாதா பூஜையில் கலந்து கொண்டா ர். பின்னர் அன்னதான தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மகா சித்த ர்கள் டிரஸ்ட் இணை நிறுவ னர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் காமாட்சிபுரி ஆதீன த்தின் மெய்யன்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காந்தி சிலைக்கு பெரம்பலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • 12 அடி உயர மரக்கன்றுகள் நடப்பட்டது

    குன்னம்,

    பெரம்பலூரில் காந்தி ஜெயந்தியைமுன்னிட்டு பழைய பேருந்து நிலைய த்தில் உள்ள காந்தி சிலைக்கு பெரம்பலூர் சுப்ரீம் லய ன்ஸ் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு சாசன த்தலைவர் என்ஜினியர் ராஜாராம் தலைமை தாங்கி னார். இதனைத் தொடர்ந்து சுந்தர் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் 12 அடி உயர மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு ஜி இடி மாவட்ட தலைவர் என்ஜி னியர் ராஜாராம் தலைமை தாங்கினார், சுப்ரீம் லயன்ஸ் வட்டார தலைவர் என்ஜினி யர் ரவி முன்னிலை வகி த்தார். மண்டல ஒருங்கிணை ப்பாளர் ரமேஷ், பெரம்ப லூர் சுப்ரீம் லயன்ஸ் தலை வர் குணாளன், செயலாளர் விக்னேஷ், என்ஜினியர் சீனிவாசன், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் தினேஷ், ராஜா, சரவணன், கார்த்திக்,

    பெரம்பலூர் அரிமா சங்கத்தை சேர்ந்த பாபு, சிவராஜ், சேவை பிரிவு செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் காசி விஸ்வநாதன், முதல் நிலை தலைவர் முரளி, மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்த வட்டார தலைவர் ென்ஜினியர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • பெரம்பலூரில் பெரியார் சிலை சேதப்படுத்திய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்
    • சிலை சேதப்படுத்தியதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், மறியல்

    பெரம்பலூர்,-

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.அதில் பெரியார் சிலையின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், ஒன்றிய கழக செயலாளர்கள், கர்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமார் நகர கழக செயலாளர் ராஜ பூபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஏ, கே ராஜேந்திரன் முன்னாள் ஒன்றி செயலாளர் முள்ளுக் குறிச்சி சுரேஷ், குன்னம் ரங்கநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூரில் புது பஸ்ஸ்டாண்ட் வளாகம் அருகில் அ.தி.மு.க.வினர் வைத்துள்ள பெரியார் சிலையை வேண்டுமென்றே திட்டமிட்டு சில விஷமிகள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷமிகளின் குற்ற செயல்கள் தொடருமேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை இதனை போன்ற விஷம செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து பணியை விரைவுபடுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    .போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் பெரியார் சிலை யின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை யில் மறியல் மற்றும் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோ தை யில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ.3.72 கோடியில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டம்
    • பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். ஆணையர் ராமர், நகராட்சி துணைதலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்றப்படவேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினர்.பின்னர் நகராட்சி தலைவர் அம்பிகா பேசுகையில் நகர பொதுமக்கள் நலன் கருதி கவுன்சிலர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ 3 கோடியே 72 லட்சம் செலவில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள நகராட்சி அறிவுசார் மையத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததற்கும் அனுமதி வழங்குதல், ரூ.22 லட்சம் செலவில் பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த தார் சாலையை சீரமைப்பது, பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ.372 கோடி செலவில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது என்பது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர், கவுன்சிலர்கள், சுகதார ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
    • 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்

    பெரம்பலூர்,

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நாட்டு நலபணித்திட்ட மாணவர்களின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது,தானத்தில் சிறந்தது இரத்த தானமெனவும், இப்போதுள்ள இளைஞர்கள் தங்களின் குருதியை தானம் செய்வதன் மூலம் அவர்களின் கொடையுள்ளம் பெருகும், மற்றும் உடலிலுள்ள இரத்த அணுக்கள் மீண்டும் உற்பத்தியாகும். எனவே அனைவரும் தகுந்த இடைவெளியில் குருதி தானம் செய்ய வலியுறுத்தினார்.முன்னதாக துவக்க முகாமில் கல்லூரி நிறுவங்களின் செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். கல்லூரி முதல்வர் மாரிமுத்து பேராசிரியர்கள், பேராசிரியைகள் முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியினை நகராட்சி தலைவர் அம்பிகா தொடங்கிவைத்தார். ஆணையர் ராமர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு மேற்பார்வையில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோர் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மேலும் நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதேபோல் மத்திய அரசின் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் வாருங்கள் ஒன்றிணைவோம் என்ற நிகழ்ச்சியின் கீழ் நடந்த தூய்மை பணியினை பள்ளி முதல்வர் மேகநாதன் தொடங்கிவைத்தார். பள்ளி வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கேந்திரிய ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இணைந்து திருக்கோவிலில் அனைத்து சன்னதிகளும் சுத்தப்படுத்தி தண்ணீரால் கழுவி விடப்பட்டு உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாள் நடராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உட்பட பலர்கலந்துகொண்டனர்.

    • முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது
    • மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

    பெரம்பலூர்

    முதியோர்தினத்தை யொட்டி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் பிரிவு ரோடு அருகே உள்ளே முதுயுகம் முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற கல்வி அதிகாதி ஜெயராமன் தலைமை வகித்தார். மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். நிகழ்வில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட முதியோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுயுகம் இல்ல பணியாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக மூத்தோர்கள் சார்பாக ராஜேஸ்வரி வரவேற்றார். அபிநந்தன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூர் நகரில் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
    • தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகராட்சி அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சிக்கு வரும் கொள்ளிடம் குடிநீர் திட்டத்திற்காக தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாளை (3ம்தேதி) முதல் 6ம்தேதி முடிய நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர், அய்யலூர் கிராமத்தில் உள்ள பஞ்சமாயி அம்மன் கோவிலில் உண்டியல், வெண்கல மணிகள், கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர்
    • மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தில் ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான பஞ்சமாயி அம்மன் கோவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது .அப்போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர் இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்து உண்டியல் மற்றும் வெண்கல மணிகள் கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.7000 இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×