என் மலர்
பெரம்பலூர்
- மகா மாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் இந்த கோவிலில் திருப்பணிகளும், கும்பாபிஷேகமும் நடைபெறவில்லை. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு ஆய்வு செய்ய வந்தபோது, மகா மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரி, பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், இணை மற்றும் உதவி ஆணையர்கள் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கிட ஆணை வழங்கினர். இதைத்தொடர்ந்து மகா மாரியம்மன் கோவிலில் சிவாச்சாரியார்கள் பாலாலயம் பூஜை செய்து, கும்பாபிஷேக திருப்பணி தொடங்கிட யாகசாலை அமைத்து, கடங்கள் புறப்பாடு செய்து சக்தி அழைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
- புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.
பெரம்பலூர்
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் புகையிலை தடுப்பு மையம் ஆகியவற்றின் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதரத்துறை திட்ட உதவி அலுவலர் டாக்டர் கலைமணி, மாவட்ட புகையிலை தடுப்பு மைய ஆலோசகர் டாக்டர் வனிதா, மாவட்ட துணை சுகாதார செயலரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் மாணவ-மாணவிகளிடையே புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.
இதில் இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வரலாற்றுத்துறை தலைவரும், கவுரவ விரிவுரையாளரும், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலருமான செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவ செயலாளர் மணிமுருகன் நன்றி கூறினார்.
- அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
- பெரம்பலூர் கனிம வளத்துறையில் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
பெரம்பலூர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனை செல்வன், மாரிமுத்து, கார்த்திகேயன், பிரகாஷ், பூண்டி கலைவாணன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அக்குழுவினர் கவுல்பாளையத்தில் இலங்கை தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 72 வீடுகளின் கட்டுமான பணிகளையும், பின்னர் எளம்பலூர் சமத்துவபுரத்தில் ரூ.79.40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். திருநகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1.5 ஏக்கர் அரசு நிலம் பாதுகாக்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதையும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தினையும் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து அக்குழுவினர் அரசுத்துறைகளின் முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,பெரம்பலூர் மாவட்டத்தில் கனிம வளத்துறையில் பொறுத்தவரை சுமார் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாவட்ட கலெக்டரும், கனிம வளத்துறை அதிகாரிகளும் இணைந்து அந்த வருவாயை திரும்ப பெற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதே போன்று கூட்டுறவுத்துறையில் ஒரு அலகு பராமரிப்பதற்காக ஒரு ஒப்பந்ததாரிடம் கொடுக்கின்றனர். ஒரு திட்டத்திற்கு குறிப்பாக ரூ.11 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.21 லட்சம் கொடுத்து கோடிக்கணக்கில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் என்ன ஊழல் நடந்ததோ, அதே போன்று தான் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக்கல்லூரி வரும், என்றார்.
- தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்றது
- வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் சார்பில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், ஹோலி பண்டிகையின்போது சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது இந்த விழாவின் சிறப்பாகும். நமது கல்விக்குழுமத்தில் பயிலும் வட மாநில மாணவர்களுடன் இணைந்து நமது மாணவர்கள் சகோதர மனப்பான்மையுடன் இந்த விழாவை கொண்டாடுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.இவ்விழாவில் கலர் பொடிகளை தூவி மகிழ்வார்கள். வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. அதனால் அனைவரும் இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு ஹோலியை கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.ஹோலி பண்டிகையையொட்டி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவில் 200 மேற்பட்ட வடமாநில மாணவர்கள் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- 11 மனுக்களுக்கு மீது உடனடி தீர்வு காணப்பட்டது
- சிறப்பு விசாரணை முகாமிற்கு பொதுமக்கள் வருவதற்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், ஜனனி பிரியா ஆகியோர்பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 36 மனுக்களில், 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்
- அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம், சான்றிதழ் வாங்கி மோசடி செய்தவர் மீது புகார்
- கார் தந்தவர்கள் மீதே போலீசார் வழக்கு பதிந்துள்ளதாக எஸ்.பி.யிடம் மனு மூலம் குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, தெற்கு தியாகனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ஆறுமுகம். இவரது மகள் நித்யா(வயது 32). எம்.எஸ்.சி., பி.எட். படித்துள்ள இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவியை நேற்று சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், அரசு வேலைக்கு முயற்சி செய்து வரும் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெருநிலா கிராமத்தை சேர்ந்த ஒருவர் திருமண தரகர் என்று கூறி எங்கள் குடும்பத்தில் அறிமுகம் ஆனார். மேலும் அவர் எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் அரசு வேலை வாங்கினால் தான் திருமணம் நடக்கும் என்று கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி எனது பெற்றோரிடம் ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் என்னுடைய கல்வி சான்றிதழை வாங்கிக்கொண்டார். ஆனால் அவர் இதுவரை அரசு வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும், கல்வி சான்றிதழையும் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக எனது குடும்பத்தினர் அவரிடம் கேட்டதற்கு, அவரும், அவரது மனைவியும் சேர்ந்து எனது தந்தை, தாய், தம்பியை தாக்கினர். இது தொடர்பாக எனது தாய் கொடுத்த புகாரின்பேரில், அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் எங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தையும், கல்வி சான்றிதழையும் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்கவாதம் காரணமாக மனமுடைந்து துாக்கிட்டுகொண்டார்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை சேர்ந்தவர் தனபால்(வயது 60). இவருக்கு கடந்த ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்த தனபால் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்.
- மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் பாலமுருகன்(வயது 20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஓசூரில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்த பாலமுருகன் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பாலமுருகன் வயலுக்கு சென்று அங்கிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று பாலமுருகனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வந்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் நடக்காத வகையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கிராமப்பகுதிகளில் தங்களது குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் நீர்நிலைகள் அல்லது தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குளிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தனியாக அனுப்பக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
- விவசாயிகளின் ேகாரிக்கையின்படி நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் நெல் சாகுபடி அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அறுவடை செய்யப்படும் நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு, பல்வேறு மோசடிகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், தங்கள் பகுதிகளில் விளையும் நெல்மணிகளை தமிழக அரசின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பல்வேறு கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதன்படி பள்ளகாளிங்கராய நல்லூரில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
- அரசு பஸ் கண்டக்டரின் வீடு தீப்பற்றி எரிந்தது.
- மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம்
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பிரதான சாலையில் வசித்து வருபவர் கலியபெருமாள்(வயது 52). இவர் பெரம்பலூர்-அரியலூர் இடையே சென்று வரும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், கவிமணி, காவியா என்ற 2 மகள்களும் உள்ளனர். கலியபெருமாள் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். சுமதி, தனது பேரக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், டாக்டரிடம் காண்பிக்க பெரம்பலூருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கலியபெருமாளின் வீட்டில் தீப்பற்றி புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதற்கிைடயே கலியபெருமாள் வீட்டின் சமையல் அறை முழுவதும் எரிந்ததில், அங்கிருந்த அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் அரசு பஸ்களை தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்து இருப்பதை கைவிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் பணி வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.






