என் மலர்
நீலகிரி
சர்வதேச சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் மலர்கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது.
இதனை காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி நடக்க உள்ளதால் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.
ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 275 வகையான விதைகள் கொண்டு வரப்பட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு, தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகிறது.
2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மலர் கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அவர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து தாவரவியல் பூங்காவில் அழகுபடுத்தி வைக்கப்பட்டுள்ள மலர்களையும் கண்டு ரசிக்க உள்ளார்.
மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க.வினர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். தற்போது முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஊட்டி 200-வது விழாவையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக நீலகிரி எம்.பி. ராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊட்டி 200-ம் ஆண்டை முன்னிட்டு நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கி ஓராண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 20ல் தொடங்க உள்ள மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி 200-வது ஆண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக என்று சிறப்பு இணையதளம் உருவாக்கி பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்வதுடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜான்சலீவன் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகைப்பட கேலரியும் அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம் வழியாக காரில் நீலகிரி செல்கிறார்.
நீலகிரிக்கு செல்லும் அவர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். நாளை முதல் வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் ஊட்டியிலேயே கவர்னர் தங்குகிறார்.
25-ந் தேதி காலை ராஜ்பவன் மாளிகையில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
வருகிற 29-ந் தேதி வரை நீலகிரியில் தங்கியிருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந் தேதி சென்னை திரும்புகிறார். பின்னர் அடுத்த மாதம் 3-ந் தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடந்து வருகின்றன.
கடந்த மாதம் முதல் பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. நாற்றுகள் வளரும் காலத்தை பொருத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.
நடவு செய்யப்பட்ட பூந்தொட்டிகளில் தற்போது பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. தாவிரவியல் பூங்கா ஊழியர்கள் தினமும் பூந்தொட்டிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.
இம்முறை தொடர்ந்து மழை பெய்ததால் தாவிரவியல் பூங்காவின் புல்வெளிகள் செடிகள் மரங்கள் என அனைத்தும் பசுமையாய் மாறி உள்ளது.






