என் மலர்tooltip icon

    நீலகிரி

    நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
    ஊட்டி, 
    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தூய்மைப்பணியாளர்கள் 2 நாளுக்கு ஒருமுறை தவறாமல் வந்து குப்பைகளை சேகரித்து செல்கின்றனர்.

    ஆனால் அப்படி இருந்தும் சில வார்டில் ஒருசிலர் குப்பைகளை சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள். இதனால் சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
    அதிலும் குறிப்பாக 18&வதுவார்டில் அமைந்துள்ள கோவில் பின்புறம் சாலை ஓரத்திலும் கோவிலின் கீழ்பகுதி சாட்லைன் செல்லும் முகப்பு சாலை ஓரத்திலும் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. 
    இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
    நகராட்சி பல முறை எச்சரித்தும் ஒருசிலர் தொடர்ந்து அத்துமீறி வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என அந்த பகுதி நகராட்சி கவுன்சிலர் முஸ்தபா, நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது. இதனையும் மீறி சாலைகளில் குப்பைகளை கொட்டினால் நிச்சயம் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பினையும் டிரெய்னேஜ் இனைப்பினையும் நகராட்சி நிர்வாகம் துண்டிப்பதுடன் அதிகமான அபராதத்துகை வசூலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மேலும் விரைவில் இப்பகுதிகளில் நகராட்சி மற்றும் காவல் துறை அனுமதியோடு கண்காணிப்பு காமிரா வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    சமுக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பில் கலெக்டர் அம்ரித் வெளியிட்டார்
    ஊட்டி,
    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான 24 மணி நேர கட்டணம் இல்லாத தொலைபேசி எண் கொண்ட சுவரொட்டிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:&
    சமூக நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டும், குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டும் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் மகளிர் தொடர்பான பிரச்சினைகளுக்கு 181 என்ற தொலைபேசி எண்ணும், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 1098 என்ற தொலைபேசி எண்ணும், பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 14417 என்ற தொலை பேசி எண்ணும், முதியோர்களுக்கான உதவி 14567 ஆகிய 24 மணி நேர கட்டணம் இல்லாத தொலைபேசி எண்கள் கொண்ட சுவரொட்டிகள் வெளியிடப்பட்டது. 

    மகளிர்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் வன்கொடுமை தொடர்பான புகார்களை மேற்கண்ட எண்களில் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு செல்லக் கூடிய சாலைகள் மற்றும் விளை நிலங்கள் அருகே நிற்கிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவதை வழக்கமாக வைத்துள்ளது.

    அப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் யானைகள் ஊருக்குள் நுழைந்து கொண்டு தான் இருக்கிறது.

    கோத்தகிரி குஞ்சப்பனை அருகே உள்ளது கோழிக்கரை கிராமம். இந்த கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த கிராமத்தையொட்டி 3 யானைகள் 2 குட்டிகளுடன் சுற்றி திரிந்து வருகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு செல்லக் கூடிய சாலைகள் மற்றும் விளை நிலங்கள் அருகே நிற்கிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் எப்போது யானை வருமோ என்ற அச்சத்திலேயே பயணித்து வருகின்றனர்.

    எனவே இந்த யானைகள் ஊருக்குள் நுழையாத வண்ணம், வனப்பகுதியில் அகழிகள் வெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடவுள்களின் வேடமணிந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    ஊட்டி: 

    கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி--யது.  

    தினமும் பல்வேறு சமுதாய மக்களின் உபயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்-தருளி, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது.

    நேற்று கோத்தகிரி  மலையாளிகள் சங்கத்தின் சார்பில்   கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கேரளா பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், மயிற்பீலி நடனம், பல்வேறு கடவுள்களின் வேடமணிந்த கலைஞர்களின் நடனத்துடன், இசைக்-கருவிகள் முழங்க அலங்கார ரதங்கள் ஊர்வலமாக கடைவீதி மாரி-யம்மன் கோவிலுக்கு புறப்பட்டது. 

    ஊர்வலத்துக்கு முன்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து தாலம் ஏந்தியவாறு சென்றனர். 

    இந்த ஊர்வலமானது காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்கெட் திடல், பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கேரள ரதத்தில் மாரியம்மன் எழுந்தருளி பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தார். 

    இதில் பிரமாண்டமான உருவத்தில் அமைக்க-ப்பட்டிருந்த  ஹனுமான், அரக்கனை வதம் செய்யும் தத்ரூபமான காட்சி பார்-ப்போரை பரவசப்படுத்தியது. மாலை வேளையில் கோத்தகிரி காந்தி மைத-£னத்தில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதை காண சுற்றுவட்டாரப்பகுதிக-ளிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

    வளர்ச்சி என்பது யாரையும் விட்டு விடாத வகையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பு, இளை-ஞர்-களுக்கான வேலை-வாய்ப்பு, பசுமையான மாவட்டமாக பேணிக்காப்பது உள்ளிட்ட பணி-களை தன்னார்வத்-துடன் செயல்படுத்தும் வகையில் நீலகிரியில் உள்ள பொறியியல் துறை, சமூக நல அமைப்புகளுடனான கருத்தாய்வுக் கூட்டம் ஊட்டி அருகே உள்ள கேத்தி மைனலா பகுதியில் மைண்ட் எஸ்கேப் என்ற அமைப்பு சார்பில் நடந்தது. 

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: 

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்-டங்களும் வளர்ச்சி-யடை-வதில் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். வளர்ச்சி   என்பது யாரையும் விட்டு விடாத வகையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.

    அனைத்து மக்களுக்கும் செல்வம், வாய்ப்புகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதே தமிழக அரசின் இந்த உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரியின் நோக்கமாகும். நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ரீதியாக நிலை-யான வழியில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதிலும் தமிழக அரசு கவனமாக இருக்கிறது.

    நீலகிரி மாவட்டத்தில் கல்வி, வேலை-வாய்ப்பு, கட்டுமானம், மருத்துவம் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். நிகழ்-ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரகல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில்  அனைத்து நலத்திட்ட பயன்கள், அடிப்-படை சேவைகள் அனைத்தும் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்தும், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல் வாழ்வு வாழத் தேவையான நட-வடிக்கைகளை மேற்-கொள்ளும் கிராம ஊராட்-சியாக அமைத்தல் போன்-றவை குறித்தும் விவாதிக்கப்-பட்டது. பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:&

     தமிழக முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது-மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 
     
    கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனடியாக செயல்படுத்-தப்படும். பொதுமக்கள் அரசுத் துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் வழங்குதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.

    மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்க மகளிர் திட்டம் சார்பில் பல்வேறு கடனு-தவிகளும், தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகள் கடனுதவி, பெற பி,எம்,கிநான் கார்டு, பயோ மெட்ரிக் கார்டு போன்ற-வைகளும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை போன்றவைகளும் வழங்கப்படுகின்றன.

    மேலும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தி-யுள்ளது. இத்திட்டத்தால் மாணவ, மாணவிகளின்  வசிப்பிடம் அருகே தன்னார்-வலர்களின் பங்களிப்புடன் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்துள்ளது.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்   மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 2 மாதத்துக்கான மருத்துவ பெட்டகத்தை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில்  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், தூனேரி ஊராட்சித் தலைவர் உமாதேவி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், ஊட்டி தாசில்தார் ராஜசேகர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் துணைவேந்தர்கள் பங்கேற்ற 2 நாள் கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    தமிழக துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் இன்று தொடங்கியது.

    காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

    இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

    கருத்தரங்கில் புதிய உலகக் கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசியர்கள், இணை பேராசிரியர்கள் என பலரும் பங்கேற்று உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மற்றும் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி பேசி விவாதித்தனர்.

    கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று தொடங்கிய துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கு தொடர்ந்து நாளையும் நடக்கிறது.

    2 நாட்கள் நடக்கும் கருத்தரங்கிலும் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.

    முன்னதாக இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதற்காக கவர்னர் மாளிகையில் கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் அமருவதற்கு இருக்கை அமைக்கும் பணி, முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான மேடை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வந்தது.

    அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்த போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். 

    அதன்பேரில் வருவாய்த்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினருடன் போலீசார் இணைந்து கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஆதிவாசி கிராமத்தில் மாவோயிஸ்டு குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

    இதற்கு கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமை தாங்கினார். தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் வரவேற்றார். கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய் சங்கர், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், துணை தாசில்தார் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் நந்தகுமார், வருவாய் ஆய்வாளர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     
    கூட்டத்தில், வனப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யக்கூடாது. உடனே அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்களை போலீசார் அறிவுறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து அடிப்படை வசதிகள் தொடர்பாக 34 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.  

    இதேபோன்று தும்பனேரிகொம்பை, வாழைதோட்டம், கொப்பரகடவு, சின்னாலன்கொம்பை, சடையன்கொம்பை, பாலவாடி, காமராஜ்நகர், குறிஞ்சிநகர், நெல்லிபாரா, கோட்டகாரா, செவிடன்கொல்லி, அயனிபாரா, புதுசேரி, தோட்டபெரா ஆகிய ஆதிவாசி கிராமங்களில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் மொத்தம் 137 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கி உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கான நடவடிக் கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
    ஊட்டி: 

    மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலி மது பாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் காட்சிகள் வெளியாகின.

    இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்கப்படும் மது பானங்களை பயன்படுத்திய பின்னர் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுவதாகவும் கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகள், இந்த கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக ஏப்ரல் 25&ந்  தேதிக்குள் மாற்றுத் திட்டம் வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினர்.

    இதன் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் கூடுதல் செயலாளர் எஸ்.கே பிரபாகர் நீலகிரி மாவட்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு ஒரு உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளார். 

    அதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட வேண்டும் என்றும், காலி மது பாட்டில்களை மீண்டும் மதுபான கடைகளிலேயே திருப்பி செலுத்தினால் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்பட வேண்டும்.

    அத்துடன் நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களில், இந்த மது பாட்டில் நீலகிரியில் விற்பனை செய்யப்பட்டது என்பதற்கான முத்திரை இடம் பெற வேண்டும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கான நடவடிக் கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இன்றே இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது.

    தமிழக அரசின் இந்த செயலை சுற்றுச்சூழல், வனவிலங்குகள் ஆர்வலர்கள்  வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், அரசுக்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
    விடுமுறை நாளான நேற்று ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரியில் அவ்வப்போது சாரல் மழை, மேகமூட்டம் என இதமான குளு, குளு கோடை சீசன் துவங்கியுள்ளது.

    இந்த இதமான சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    இப்படி வரும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீத சுற்றுலா பயணிகள் நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குறிப்பாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி இன்ஜின் மலை ரெயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு காரணம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அடர்ந்த காடுகள் வழியே செல்வது தான்.

    இந்த ரெயிலில் பயணிக்கும் போது வனவிலங்குகள், இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம் என்பதால் மலைரெயிலில் பயணிக்க அதிகம் விரும்புகிறார்கள்.

    விடுமுறை நாளான நேற்று ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    எதிர்வரும் மே மாதம் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோடை சீசன் முடியும் வரை சிறப்பு மலை ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரவு நேரங்களில் ஊட்டி முதல் கேத்தி வரை சுற்றுலா பயணிகளுக்காக தனி நீராவி இன்ஜின் கொண்ட மலை ரெயில் இயக்கப்பட்டது.

    இந்த ஆண்டும் அதே போல் மத்திய அரசு சிறப்பு கோடை சீசன் மலை ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் போன்றவை தாராளமாக விற்கப்படுகின்றன.
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களையும், குடியி ருப்புகளை ஒட்டியும், வனங் களை ஒட்டியும் அமைந்துள்ளன.

    இந்த மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் போன்றவை தாராளமாக விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் மதுப்பிரியர்கள் அவற்றை சாலை யோரங்கள், நடைபாதைகள், நீர்நிலையை ஒட்டிய பகுதிகள், விவசாய தோட்டங்களில் வைத்து மது அருந்திவிட்டு, குப்பைகளை அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால் சுற்றுசூழல் பாதிப்பது மட்டுமின்றி நீர்நிலை களும் மாசடைந்து வருகின்றன. வனங்களில் வீசி எறியப்பட்டு சேதமடைந்த மது பாட்டில்களை மிதித்து வனவிலங்குகள் காயம் அடைவதுடன், உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

    இதனைத் தடுக்கும் வகையில் ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் காலி மது பாட்டில்களை சேக ரிக்கும் மையம் திறக்கப் பட்டுள்ளது. அதேபோல மாவட் டம் முழுவதும் 15 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது.இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப் பட உள்ளன. முதல் கட்டமாக தலைகுந்தாவில் அமைக்கப்பட்டு திறக்கப் பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் விரைவில் அமைக்கப்படும்.  

    ஒவ்வொரு மையத்திலும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியா ளர்கள் பணியமர்த்தப்பட்டு காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நீர்நிலைகள், சாலைகள், வனங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரிக்கப்படும். 

    சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் இந்த மையங் களில் அவற்றை வழங்கலாம். மொத்தமாக சேகரிக்கப்பட்டு அவற்றைத் தயாரிப்பவர்களிடம் வழங்கப்படும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் காலி மதுபாட்டில்களை, டாஸ்மாக் கடைகளே திரும்ப பெற்று கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், திரும்ப பெறும் மது பாட்டில்களுக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
    அம்மன் கண்ணாடி பல்லக்கில் ஊஞ்சல் உற்சவத்தில் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஊட்டி: 

    ஊட்டி நகரின் மையப்பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. 

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும். கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது.

     20-ந் தேதி காப்பு கட்டப்பட்டு அன்று முதல் நேற்று  வரை நாள்தோறும் ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் மாலையில் தேர் ஊர்வலம்  நடைபெற்று வந்தது

    இதில் மாரியம்மன் ஆதிபராசக்தியாக, துர்க்கையாக, காமாட்சியம்மனாக, பகவதியாக, கருமாரியாக, ராஜராஜேஸ்வரியாக, ஹெத்தையம்மனாக, மகாலட்சுமிளாக என பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் ஊர்வலமாக நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த தேர்த்திருவிழாவின் கடைசி உபய திருவிழா நேற்று நடந்தது.அதனையொட்டி அம்மனுக்கு காலை 9 மணிமுதல் 11.30 மணிவரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 12.30 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மன் கண்ணாடி பல்லக்கில் ஊஞ்சல் உற்சவத்தில் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் போயர் சமுதாய உபய நிர்வாகிகள் சுப்ரமணியம், பாலசுப்ரமணியம், குணசேகரன் ரவி, தங்கராஜ், சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட போயர் சமூக பொதுநல சங்க தலைவர் ராயப்பன், செயலாளர் முருகன், பொருளாளர் நந்தகுமார், அ.தி.மு.க. அமைப்புசாரா ஓட்டுநர் அணி ஊட்டி நகர செயலாளரும் நொண்டிமேடு கிளை செயலாளருமான கார்த்திக், ராஜ்குமார், ஹரிகிருஷ்ணன், ரகுபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

    விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். கோவில் முன்பிருந்து புறப்பட்ட தேர் லோயர்பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்துலாந்தர், எம்.எஸ்.லைன், காபிஹவுஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட் மணிகூண்டு வழியாக இரவு சுமார் 10 மணிக்கு திருக்கோயிலை சென்றடைந்தது.
    ×