என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அம்ரித்
நீலகிரியில் 15 இடங்களில் காலி மது பாட்டில்கள்- பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் தொடக்கம்
மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் போன்றவை தாராளமாக விற்கப்படுகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களையும், குடியி ருப்புகளை ஒட்டியும், வனங் களை ஒட்டியும் அமைந்துள்ளன.
இந்த மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் போன்றவை தாராளமாக விற்கப்படுகின்றன. இவற்றை வாங்கும் மதுப்பிரியர்கள் அவற்றை சாலை யோரங்கள், நடைபாதைகள், நீர்நிலையை ஒட்டிய பகுதிகள், விவசாய தோட்டங்களில் வைத்து மது அருந்திவிட்டு, குப்பைகளை அப்படியே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் சுற்றுசூழல் பாதிப்பது மட்டுமின்றி நீர்நிலை களும் மாசடைந்து வருகின்றன. வனங்களில் வீசி எறியப்பட்டு சேதமடைந்த மது பாட்டில்களை மிதித்து வனவிலங்குகள் காயம் அடைவதுடன், உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
இதனைத் தடுக்கும் வகையில் ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் காலி மது பாட்டில்களை சேக ரிக்கும் மையம் திறக்கப் பட்டுள்ளது. அதேபோல மாவட் டம் முழுவதும் 15 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள் ளது.இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப் பட உள்ளன. முதல் கட்டமாக தலைகுந்தாவில் அமைக்கப்பட்டு திறக்கப் பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் விரைவில் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மையத்திலும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பணியா ளர்கள் பணியமர்த்தப்பட்டு காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நீர்நிலைகள், சாலைகள், வனங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரிக்கப்படும்.
சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் இந்த மையங் களில் அவற்றை வழங்கலாம். மொத்தமாக சேகரிக்கப்பட்டு அவற்றைத் தயாரிப்பவர்களிடம் வழங்கப்படும். அதன் மூலம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காலி மதுபாட்டில்களை, டாஸ்மாக் கடைகளே திரும்ப பெற்று கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், திரும்ப பெறும் மது பாட்டில்களுக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது.
Next Story






