என் மலர்tooltip icon

    நீலகிரி

    கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் மற்றும் காக்கா தோப்பு பகுதியில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கால்நடை மருத்துவர் காலி இடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ஊட்டியில் கால்நடை மருத்துவமனை உள்ளது. ஆனால் இங்கு பல மாதங்களாகவே பணியில் கால்நடை மருத்துவர்கள் கிடையாது. மேலும் ஆஸ்பத்திரியில் உரிய மருந்துகளும் இருப்பு வைப்பதில்லை. இதனால் கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று விட்டு திரும்பும் சூழ்நிலை உள்ளது. மேலும் இதனால் கால்நடைகளை இழக்கும் சூழலும் உள்ளது. இதை உடனடியாக போக்கவும் பாலுக்கு உரிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பல ஊா்களில் இருந்தும் வந்த பக்தா்கள் மலை அடிவாரத்தில் கூடி கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றம் பூஜைகள் செய்தனா்.

    ஊட்டி:

    கூடலூரை அடுத்துள்ள நம்பாலகோட்டை சிவன்மலையில் பவுர்ணமி தினத்தையொட்டி கிரிவலம் மற்றும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

    விழாவையொட்டி பல ஊா்களில் இருந்தும் வந்த பக்தா்கள் மலை அடிவாரத்தில் கூடி கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றம் பூஜைகள் செய்தனா்.

    தொடா்ந்து உலக அமைதிக்காக கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன், செயலாளா் நடராஜன், நிா்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்த நசுருதீன், திண்டுக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள அலுவலகத்தில் தாமோதரன் முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று நீலகிரிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிக்கு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    முதன்மை கல்வி அதிகாரி தாமோதரன் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். இதேபோல் பழங்குடியின குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு சிறிய கடை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது. காலையில் கடை திறப்பதற்காக வந்த கடை உரிமையாளர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அரவேனு சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை பறிக்க செல்ல முடியாமலும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் விடுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    • இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வன எல்லையோரம் உள்ள போஸ்பாறா, சீனக்கொல்லி முதல் தொரப்பள்ளி வரையில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    இதையடுத்து வன எல்லையோர கிராம பகுதியில் உள்ள அகழிகளை ஆழப்படுத்தியதுடன் யானைகள் நுழையும் குறிப்பிட்ட இடங்களில் மரக்கட்டைகளை வைத்து தீ மூட்டி யானைகள் நுழைவதை தடுக்கும் பணியை வனத் துறையினா் துவங்கி உள்ளனா். ஊருக்கு மிக அருகாமையில் கும்கி யானைகளையும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைத்துள்ளனா்.

    • பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. பிக்கட்டி, முள்ளிகூர், பாரதியார்நகர், கெரப்பாடு, குந்தாகோத்தகிரி, சிவசக்திநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்.

    இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலையில் தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் பிக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தற்போது தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து கூடியுள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது.

    இந்த நடைமுறையால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநியோகிக்க முடியும். தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தங்களிடம் இருந்து குறைந்த அளவு பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாய உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் மேலும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து பசுந்தேயிலை கொள்முதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் தொழிற்சாலை நுழைவு கேட் அருகே சென்று தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். விவசாய உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசிய நிர்வாக இயக்குனரை இடம் மாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் நிர்வாக இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தரப்பில் சுமுக பேச்சுவார்தை நடத்தாவிட்டால் இன்று முதல் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநி யோகிப்ப தில்லை என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

    • ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு ரத்தம் தேவைப்படுகிறது

    ஊட்டி;

    ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் உலக ரத்த கொடையாளர் தினம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ- மாணவிகள் 176 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியானது ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தொடங்கி காபி ஹவுஸ், மாரியம்மன் கோவில் வழியாக ஊட்டி சேட் மருத்துவமனையில் சென்றடைந்தது.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர், 3 முறை மற்றும் அதற்கு மேலாக ரத்த தானம் செய்த 23 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிக முறை ரத்த தானம் செய்த நபர்களை பாராட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    குறிப்பாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் என்பது ஒரு உன்னதமான செயல் ஆகும். ரத்த தானம் செய்வது குறித்து உங்களது பகுதியில் உள்ள நண்பர்களிடம் எடுத்துக்கூறி அவர்களும் ரத்த தானம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். இதேபோன்று தொடர்ந்து அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மனோ கரி, உறைவிட மருத்துவர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி உள்ள ஒரு உணவகத்துக்குள் 3 கரடிகள் புகுந்தன.
    • ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாகவே தொடா்ந்து கரடிகள் நடமாட்டம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒற்றை கரடி ஒன்று நகரின் பல இடங்களிலும் சுற்றி திரிந்து வருகிறது.

    கடந்த 11-ந் தேதி நள்ளிரவில் வனப் பகுதியை விட்டு வெளியேறிய கரடி ஒன்று ஊட்டி நகரின் மையப்பகுதியான அக்ரஹாரம் பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த நாய்கள் தொடர்ந்து குரைத்ததால் சந்தேகம் அடைந்த மக்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது கரடி ஒன்று நிற்பதை பார்த்ததும் பீதியடைந்தனா்.

    வனத்துறையினர் விரைந்து வந்து கரடியை அந்த பகுதியில் இருந்து விரட்டினர். ஆனால் கரடி வனத்திற்குள் செல்லாமல், அருகே உள்ள சலிவன் கோா்ட் ஹோட்டல் பகுதிக்கு சென்றது. அங்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி திரிந்த கரடி பின்னர் வனத்திற்குள் சென்றது.

    இந்த நிலையில் மீண்டும் நகருக்குள் கரடிகள் உலா வர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம், ஊட்டி இந்து நகரிலிருந்து தலைக்குந்தா செல்லும் சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்குள் 3 கரடிகள் புகுந்தன. பின்னர் உணவகத்துக்கு வெளியே கழிவுப் பொருள்களாக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை தின்றுவிட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. பின்னர் அங்கிருந்து வெளியேறி விட்டன.

    இந்த காட்சிகள் அனைத்தும், உணவகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களும் விரைந்து வந்து, காட்சிகளை பார்த்து விட்டு, கவனமாக இருக்குமாறு கூறி சென்றனர்.

    ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாகவே தொடா்ந்து கரடிகள் நடமாட்டம் காணப்படுவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத் துறையினா் கரடிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது.
    • காட்டெருமைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடியது.

    ஊட்டி:

    சுற்றுலா நகரமாக ஊட்டி திகழ்ந்து வருகிறது. ஊட்டி ஏரியில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏரியை சுற்றி தீட்டுக்கல், கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.

    அங்கு காட்டெருமை, சிறுத்தைப்புலி, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது நகருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

    குறிப்பாக காட்டெருமைகள் நகருக்குள் வருவது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி நகரின் மிக முக்கிய சாலையான மார்க்கெட் சாலையில் 5-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன.

    இந்த காட்டெருமைகள் வாகனங்கள் செல்லும் சாலையில் சர்வ சாதாரணமாக நடமாடியது. காட்டெருமைகள் வருவதை பார்த்ததும், வாகன ஓட்டிகளும், அந்த பகுதி பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.

    சில வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக இயக்கியபடியும், சிலர், அலறி அடித்து தப்பித்தால் போதும் என ஓட்டமும் பிடித்தனர். சிறிது நேரம் சாலையில் சுற்றிதிரிந்த காட்டெருமை கூட்டம் பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றது.

    இதுவரை ஒற்றை காட்டெருமை மட்டுமே ஊட்டி நகரில் உலாவந்த நிலையில் தற்போது காட்டெருமைகள் கூட்டமாக சுற்றி திரிவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் காட்டெருமைகள் நகருக்குள் சாவகாசமாக உலா வருகின்றன. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. நகரில் சுற்றி திரியும் காட்டெருமைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளோம். எனவே, வனத்துறையினர் வனவிலங்குகள் நகருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து.

    அரவேணு:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் வழிகாட்டுதலின் படி கோத்தகிரி வட்டாரத்தில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், சுப்ரமணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் பேரணியின் முக்கிய அம்சங்களை விளக்கி பேசினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், குன்னூர் ஜெ.சி.ஐ. அமைப்பு தலைவர் பாவனா, எப்.பி.டி. தன்னார்வ அமைப்பு ஜோசப், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங், தன்னார்வலர்கள் நிர்மலா யமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு கோத்தகிரி நெல்லை கண்ணன் அவர்கள் குளிர்பானம் வழங்கினார்.

    படுகர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ ஹெத்தப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே படுகர் இன மக்கள் வசிக்கும் பகுதியான சுள்ளிக்கூடு கிராமத்தில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ ஹெத்தப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் அவர்கள் பாரம்பரிய உடையான வெள்ளை ஆடை அணிந்து கலந்து கொண்டனர். இதில் குன்னூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் இட்டக்கல் போஜராஜ் கலந்துகொண்டனர்.

    கூட்டுறவுத் துறை சார்பில் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பெறப்பட்டுள்ள ஏ.டி.எம் வாகனத்தை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள இளித்துறை கிராமத்தில் கலெக்டர் அம்ரித் முன்னிலையில் கூட்டுறவுத் துறை சார்பில் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பெறப்பட்டுள்ள ஏ.டி.எம் வாகனத்தை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், அதிகளவு சிறு, குறு விவசாயிகள் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொலை தூர கிராம விவசாயிகள் பயன் பெறுகின்ற வகையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஏ.டி.எம். வாகன மூலம் பண பரிமாற்றம் செய்வதோடு, மின் கட்டணம், தொலை பேசி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை சிரமமின்றி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏ.டி.எம். வாகனத்தில் வங்கி சேவைகள் மற்றும் நிதியியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி பெட்டி நிறுவப்பட்டுள்ளது என்றார்.

    ×