search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
    X

    கோத்தகிரி அருகே சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒரு சிறிய கடை ஒன்று உள்ளது.

    இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடி ஒன்று கடையின் சீட்டை உடைத்து உள்ளே நுழைந்து, தின்பண்டங்களை எடுத்து தின்றதுடன், வீசியும் சென்றுள்ளது. காலையில் கடை திறப்பதற்காக வந்த கடை உரிமையாளர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அரவேனு சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை பறிக்க செல்ல முடியாமலும், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் விடுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

    Next Story
    ×