search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் தொடக்கம்
    X

    குன்னூரில் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் தொடக்கம்

    கூட்டுறவுத் துறை சார்பில் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பெறப்பட்டுள்ள ஏ.டி.எம் வாகனத்தை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள இளித்துறை கிராமத்தில் கலெக்டர் அம்ரித் முன்னிலையில் கூட்டுறவுத் துறை சார்பில் 23 லட்ச ரூபாய் மதிப்பில் பெறப்பட்டுள்ள ஏ.டி.எம் வாகனத்தை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், அதிகளவு சிறு, குறு விவசாயிகள் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொலை தூர கிராம விவசாயிகள் பயன் பெறுகின்ற வகையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ஏ.டி.எம். வாகன மூலம் பண பரிமாற்றம் செய்வதோடு, மின் கட்டணம், தொலை பேசி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை சிரமமின்றி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏ.டி.எம். வாகனத்தில் வங்கி சேவைகள் மற்றும் நிதியியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொலைக்காட்சி பெட்டி நிறுவப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×