என் மலர்
நீலகிரி
- தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது.
ஊட்டி:
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது.
மேலும் பரதநாட்டியம், சிலம்பாட்டம், பறை சாற்றுதல், குச்சி பிடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களையும் வளர்க்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற கலைகளை வளர்ப்பதன் மூலம் தமிழ்மொழி வளரும்.
அனைத்து துறைகளையும் சிறந்த துறைகளாக கொண்டுவர முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் 2019-20-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.
தமிழகத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி. சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
- விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஆண்டு முழுவதும் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
இதன் ஒரு கட்டமாக ஊட்டி அருகே உள்ள பகல்கோடு மந்து, சூட்டிங் மட்டம் சுற்றுலா தளத்தில், நீலகிரியின் ஆதி பழங்குடியினர்களான தோடர் இன மக்கள் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
அங்கு அவர்கள் அடுப்பு வைத்து புதிய பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.இதனை தொடர்ந்து தோடர் இன மக்களின் பாரம்பரிய படி பூஜைகள் செய்து கடவுளுக்கு பொங்கல் படைத்து கொண்டாடினர்.
இதனையடுத்து சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர். மேலும் தங்களுடைய பாரம்பரிய கலாசார உடையுடன் நடனமாடியது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
ஊட்டியில் இன்று காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் விழா மைதானத்திற்கு வரும் பொழுது அனைத்து காவலர்களுடன் இணைந்து நடனம் ஆடியபடியே மேடைக்கு வந்தார். இது அங்கிருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
இந்த விழாவில் காவல்துறையினர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவல்துறை குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.
- மகளிர் அணியினருக்கு சேலை வழங்கினார்.
- கழக தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஊட்டி
ஊட்டி நகர தி.மு.க. சார்பில் தமிழர் தைத் திருநாளை முன்னிட்டு ஊட்டி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு சர்ட், சுவர் கடிகாரம், நாள் காட்டி, மகளிர் அணியினருக்கு சேலை, சுவர் கடிகாரம், நாள் காட்டி போன்றவைகளை ஊட்டி நகர தி.மு.க செயலாளர் எஸ்.ஜார்ஜ் வழங்கினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தபா, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் எச்.மோகன் குமார், நகர துணை செயலாளர் கார்டன் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.
- பறை இசை முழங்க விழா நடைபெற்றது.
- நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க சார்பில் நகர செயலாளர் ச. இளஞ்செழியன் தலைமையில் காந்தி திடல் மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் அணியினர் குலவையிட்டும், கும்மியடித்தும், பறை இசை முழங்க விழா நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மு. திராவிடமணி, ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், சீனி, நகர நிர்வாகிகள், அவை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ஜபரூல்லா ஜெயக்குமார் நாகேஷ்வரி மாவட்ட பிரதிநிதிகள் ரசாக், நெடுஞ்செழியன், மணிகண்டன், பொருளாளர் தமிழழகன், பேரூர் செயலாளர் சுப்பிரமணி, நகர் மன்ற தலைவர் பரிமளா, ஒன்றிய அவைதலைவர் கருப்பையா, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கடாசலம், பத்மாவதி, மாவட்ட பிரதிநிதிகள் பால்ராஜ் நேச குமார் யூசுப் முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- பிராா்த்தனை நடைபெற்றது.
- பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஊட்டி,
சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளரான ஜே.ஜே.குட்வின் நினைவிடம் ஊட்டி புனித தாமஸ் தேவாலயத்தில் உள்ளது. அவரது நினைவிடத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் ராமகிருஷ்ண மடம் சாா்பில் பிராா்த்தனை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஊட்டி ராமகிருஷ்ண மடம் சுவாமி பரகீா்த்தமானந்தா மகராஜ் பேசுகையில், சுவாமி விவேகானந்தரின் வாா்த்தைகள் உலகுக்குக் கிடைக்க ஜே.ஜே. குட்வின் பணி மிகவும் முக்கியமானதாகும். இளைய சமூகத்தின் ஒழுக்கமான வாழ்க்கைக்கும், மனவலிமை மிக்க தெளிவான சிந்தனைக்கும் விவேகானந்தரின் வாா்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாா்.
இதில் அருட்தந்தை இமானுவேல் வேளவேந்தா், பிரிக்ஸ் பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
- நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
- குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் கடும் உறைபனி நிலவுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும்.
குளு, குளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது.
இன்று காலை ஊட்டியில் பல்வேறு இடங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது.
ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 24.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 2.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது. அவலாஞ்சி அணை பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. அவலாஞ்சி அணையில் உறைபனி காரணமாக தண்ணீர் ஆவியாக மாறியது.
நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் கடும் உறைபனி நிலவுகிறது.
தற்போது தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் புற்கள் மற்றும் வாகனங்கள் மீது படர்ந்து காணப்படும் உறபனியை கையில் எடுத்து கண்டு ரசிக்கின்றனர். அதனை புகைப்படம் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
- ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்பநிலையும் காணப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிட நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்த வண்ணம் இருப்பர்.
இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து பொங்கல் விடுமுறையை உற்சாகமாக களிக்க சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.
நேற்று பொங்கலையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்.
புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்பநிலையும் காணப்படுகிறது. இத்தகைய ரம்மியமான காலநிலையை அனுபவிக்கும் விதமாக குன்னூர், கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களான டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, கொடநாடு காட்சி முனை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர்.
- 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
- தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் கடந்த 30 நாட்களாக சமவெளி பகுதிகளில் இருந்து வந்த 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. அவை தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பிலும் உலா வந்தன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்தநிலையில் குன்னூர் நான்சச் தொழிலாளர்கள் குடியிருப்பை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை பக்காசூரன் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும், காட்டு யானைகள் மீண்டும் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 17-ந்் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில், வாகனங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் மற்றும் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
- கால்வாயில் கொட்டி வருகின்றனர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் வுட் காக் சாலையில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும் கால்வாய், தற்போது குப்பை தொட்டியாக மாறி உள்ளது. அப்பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் போது, குப்பைகளை வழங்காமல், கால்வாயில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் கால்வாயில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நீலகிரி கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
- 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட அணிக்கொரை கிராம சமுதாயக்கூடத்தில், சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட பொங்கல் வாழ்த்து மடல் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கி, பிற குழுக்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது.
இதில் கலைநிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அணிக்கொரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், பழங்குடியினர் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ஒரு சுய உதவிக்குழுவுக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.15 லட்சத்திற்கான காசோலை, சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை கலெக்டர் வழங்கினார்.சிறப்பாக போடப்பட்டிருந்த ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டு சுய உதவிக்குழு உறுப்பி னர்களை பாராட்டினார்.
தூனேரி ஊராட்சி அணிக்கொரை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், தூனேரி ஊராட்சி தலைவர் உமாவதி, தாசில்தார் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், விஜயா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- 160 பயணிகளுடன் இயக்கி வெற்றி.
- சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.
ஊட்டி,
நீலகிரி மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகை மற்றும் கரித்துகள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்களால் தீ விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் வகையிலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும் குன்னூா் ெரயில்வே பணிமனையில் தலைமை மெக்கானிக் மாணிக்கம் தலைமையிலான குழு, டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் 2-வது என்ஜினை குன்னூரில் வடிவமைத்திருந்தது.
அந்த என்ஜின் முதல்முறையாக 160 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் ெரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும், யுனெஸ்கோ அமைப்பு சாா்பில் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில்.
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சுவிட்சா்லாந்தில் வடிவமைக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த மலை ெரயில் என்ஜின்கள், மேட்டுப்பாளையம் முதல் குன்னூா் வரை நீராவி மூலம் மட்டுமே வரை இயக்கப்பட்டு வந்தது. நிலக்கரியை எரிபொருளாக கொண்டு பல ஆண்டுகளாக மலை ெரயிலை இயக்கி வந்தனா். நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அதிலிருந்து வெளியேறும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், கரித்துக ள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்கள் வனப் பகுதிகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாலும், பா்னஸ் ஆயிலை எரிபொ ருளாக கொண்டு இயங்கும் வகையில் என்ஜினில் மாற்றம் செய்யப் பட்டது.
பின்னா் காற்று மாசைக் குறைக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் வகையில் முதல் மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிம னையில் வடிவமை க்கப்பட்டது.
இது வெற்றி பெற்றதைத் தொடா்ந்து இரண்டா வதாக டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் என்ஜின் தயாரிக்கப் பட்டு சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.






