என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 மாவட்டங்களில் பணிக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது.
    • இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    நாக்கல்:

    மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை, கோயமுத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருச்சி ஆகிய 5 கோட்டங்கள் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சேலம் கோட்டத்தின் கீழ் இயங்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் பணிக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான முன்னாள் படைவீரர்கள் www.petrolpumpdealerchayan.in என்ற இணையதள முகவரியில் 27.09.2023 வரை விண்ணப்பித்து பயன்பெறலாம். விருப்பமும் தகுதியும் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும், மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு நாக்கல் கலெக்டர் உமா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்கிட உள்ளது. கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு

    இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின்வசதி உள்ளதை உறுதி செய்திடவும், கிராம ஊராட்சி சேவை மைய கட்டிட அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர் அரசாணையின்படி பொறுப்பாக் கப்பட்டுள்ளார்.

    இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு ஊராட்சியிலும் சேவை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி, யுபிஸ் ரவுட்டர், ரேக் மற்றும் கண்ணாடி இழை கேபிள் உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும்.

    எச்சரிக்கை

    மேற்கண்ட கேபிள் அமைக்கும் பணியை தடை செய்தாலோ, உபகரணங்கள் மற்றும் கேபிளை சேதப்படுத்தினாலோ அல்லது திருடினாலோ, அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    நாமக்கல்:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டனர்.

    மேலும் சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் உமா கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 16 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.

    விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83,500 வீதம் 2 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தாட்கோ மூலம் 1 பயணியர் வாகனம், 2 டிராக்டர், 14 அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு ஆணை என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.2.36 மதிப்பிட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு சேமிப்பு கடன், 1 பயிர்கடன் என மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும் வழங்கினார். தோட்டக்கலைத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு நிழல்வலை குடில், 1 பயனாளிக்கு நுண்ணீர்பாசனம் என மொத்தம் ரூ.2.55 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 18.88 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், வேளாண்மை த்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,260 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.5,580 வீதம் ரூ.11.160 மதிப்பில் இலவச தையல் எந்திரம், மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கு கடனுதவிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.2.11 கோடி மதிப்பில் 3 வங்கி பெருங்கடனுதவியும், 2 பயனாளிகளுக்கு முதல்- அமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை என ஆக மொத்தம் 36 பயனாளிகளுக்கு ரூ.5.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 35 காவல்துறை அலுவலர்கள், 180 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 215 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

    கண்கவர் கலைநிகழ்ச்சி

    விழாவில் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ராசிபுரம் ஆர்.சி தூய இருதய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 492 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சாரதா, நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணன் (நாமக்கல்), கௌசல்யா (திருச்செங்கோடு), மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், துறைச்சார்ந்த அலுவலர்கள், அரசுத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ. மேட்டூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பெண்கள் பலரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் நேற்று இரவு குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பரமத்தி - வேலூர் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    போக்குவரத்து பதிப்பு

    புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தி - வேலூர் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர்.

    இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள் பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.

    பரமத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும் எனவும் அதுவரை பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் கூறியி ருந்தார்.

    தற்போது பரமத்தி மோட்டார் வாகன ஆய்வா ளர் அலுவலக ஆய்விற்காக வரும் வாகனங்கள் அலுவ லகத்தின் அருகில் உள்ள காலி இடங்க ளில் நிறுத்தப்பட்டு போக்கு வரத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.
    • இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் கோட்டை சாலை, பரமத்தி சாலை, கடைவீதி, மோகனூர் சாலை, திருச்சி சாலை, துறையூர் செல்லும் சாலைகள் உள்ளன.

    தெரு நாய்கள்

    இந்த சாலைகளில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதுதவிர இலகு ரக, கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.

    இந்நிலையில், இந்த சாலைகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று பயமுறுத்துகின்றன.

    மேலும், வாகனங்கள் வரும்போது, திடீரென குறுக்கே பாய்வதால் பலர் விபத்துகளில் சிக்குகின்றனர்.

    இதனால் பலருக்கு கை, கால்கள் முறிவதும், சில உயி ரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அண்மையில் பரமத்தி சாலையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் நாய் குறுக்கே சென்றதால் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    எனவே சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கடைசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கடைசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்த ரேஸ்வரர்,பரமத்தி வேலூ ரில் 400 ஆண்டுகள் பழமை யான எல்லையம்மன் ஆல யத்தில் உள்ள ஏகாம்ப ரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திரு வேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத தேய்பிறை பிரதோ ஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் குழுவுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் செயல்படுத்தபட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் இயற்கை விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிராம அளவில் இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் குழுவுக்கு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்திற்கு கபிலர்மலை வட்டாரம் தேர்வாகி உள்ள நிலையில் இதற்காக குழுவாக செயல்படும் விவசாயிகள் தங்கள் குழு மூலம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் போன்ற இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவி உற்பத்தி செய்யும் பட்சத்தில் அக்குழுவுக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூபாய் ஒரு லட்சம் பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிக்கும் அலகை நிறுவ ஆர்வமுள்ள விவசாயக்குழுக்கள் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பருவமழை தவறாது பெய்ய வேண்டும், தொழில் கல்வி வளம் பெறுக வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயங்கள், முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
    • ஊர்வலத்தில் ஆதிபராசக்தி உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பருவமழை தவறாது பெய்ய வேண்டும், தொழில் கல்வி வளம் பெறுக வேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயங்கள், முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசித்து விட்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவரை தெரு, கடைவீதி வழியாக மேட்டு தெருவில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மகளிர் மன்றத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் ஆதிபராசக்தி உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது.

    ஊர்வலத்துக்கு நாமக்கல் மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வேள்விக்குழு பிரச்சாரக் குழு இளைஞர் அணியினர் செவ்வாடை அணிந்த பெண்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டீ கடையில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கலா (36).

    விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த கலா கணவர் விஜயகுமாரை வீட்டில் இருந்த இரும்பு சுத்தியலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரின் தலையில் இரும்பு சுத்தியலால் தாக்கி கொலை செய்த மனைவி கலாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் பெண்கள் சிறையில் கலாவை அடைத்தனர்.

    கணவனை மனைவியே இரும்பு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இறந்தனர்.
    • அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு முழு உருவச்சிலை வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து. இவரது மனைவி அய்யம்மாள். அய்யமுத்து ராமாயிபட்டியில் உள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் இருந்து வந்து மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். இந்தநிலையில் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இறந்தனர்.

    அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே தான் இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர்.

    இந்தநிலையில் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அவரது பேரன்கள், பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ, அதே இடத்தில் அவருக்கு கோவில் கட்டி உள்ளனர். மேலும் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு முழு உருவச்சிலை வைத்தனர். அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று முன்தினம் அவர்களது சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்து வழிபட்டனர். தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபட்ட பேரன்கள், பேத்திகள், உறவினர்களின் செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1350 கோழிப்பண்ணை கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 6 1/2 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

    இங்கு உற்பதத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு மற்றும் உள்மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. வடமாநிலங்களில் உற்பத்தி குறைவால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை அதிகளவில் செல்கின்றன.

    இது மட்டுமின்றி துபாய், மஸ்கட், இலங்கை உள்பட பல்வேறு வெளிநா டுகளுக்கு முட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஒரு முட்டை ரூ 4.35 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 4.65 க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளன.

    இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணை யாள ர்கள் சங்க தலைவர் சிங்க ராஜ் கூறியதாவது:-

    நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது. மழைகாரணமாக நுகர்வு அதிகம் உள்ளதால் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    ×