என் மலர்
நாகப்பட்டினம்
திருமருகலில் ஒன்றிய அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார்.
இதில் வடகரையிலுள்ள 9 குளங்களை ஒரு தரப்பு மக்கள் மட்டும் பயன்படுத்துவதை கண்டித்தும், ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையான சாலை வசதி வழங்க வேண்டும்.
சரியான பயனாளிகளை தேர்வு செய்து தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், ஆடு, மாடுகள் கொட்டகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் தொகுதி துணை செயலாளர் சுரேஷ், தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன், ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் வைரமுத்து, ஒன்றிய அமைப்பாளர் ஜெயராமன், ஒன்றிய துணை அமைப்பாளர் கண்ணன், வணிகரணி தொகுதி அமைப்பாளர் இளமாறன், துணை அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் திட்டச்சேரி ரவி, திருக்கண்ணபுரம் இரணியன்,
வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் முருகானந்தம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர்.
திருப்பூண்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்துள்ள கீழப்பிடாகை
ஊராட்சியில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சியில் சேரும் குப்பைகள் அனைத்தும்,
கீழப்பிடாகை-தலைஞாயிறு சிந்தாமணி கிராமத்து
பிரதான சாலையிலேயே கொட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட அளவு குப்பைகள் சேர்ந்த பிறகு அதே இடத்தில் வைத்து
அவை தீயிட்டுக் கொளுத்தபடுவதால், அதிக அளவிலான துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளித்த படியே செல்லவேண்டிய சூழல் நிலவி வருகிறது.
அந்தப் பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் அதனை உண்பதற்காக வரும் நாய்கள் மூலமும் அடிக்கடி அவ்வழியே சாலை விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
சாலையின் ஓரத்திலேயே கொட்டப்படும் குப்பைகளை கடந்து தான் அங்குள்ள மயானத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், இறந்தவரின் பிரேதத்தை சுமந்து செல்வோர் பெரும் சவாலை சந்திக்க நேரிடுகிறது.
எனவே சாலையோரமாக கொட்டப்படும் குப்பையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் தேவைக்கேற்ப அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
சமூக நலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம், வேளாண் மற்றும்
தோட்டக்கலை துறை சார்பாக உழவர்களுக்கு மானியம்
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் சுமார் 3 கோடியே 81 லட்சம்
ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில்மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன்,
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், எம்.எல்.ஏக்கள்
ஆளூர் முகமது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பயனாளிகள்
பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்:-
டெல்டா மாவட்டங்களில் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கேற்ப திறக்கப்படும். கடந்த முறை சாகுபடி செய்த குருவை நெல்மணிகள், முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டு, நெல்
மூட்டைகள் வீணாகி விடாமல் கொள்முதல் செய்யப்படும். குறுவைக்கு பின்பற்ற நடைமுறையில் இருந்த முறை நெல் கொள்முதல் ஆன்லைனில் சிரமம் இல்லாமல் நடைபெறும்.
இ-பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும். இ-பதிவில்
ஏற்படும் சிக்கல்களை விவசாயிகள் புகாராக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை பட்டதாரி பெண் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.
பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரகங்களை காண முடிகிறது. தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளதாகவும் சிவரஞ்சனி தெரிவித்தார்.
மேலும் அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குட வாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,250 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுரஅடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளது. இதனை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்குவதாக கூறினார்.
தங்க தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை இவர் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான நெல் ரகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களை கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.
பழங்காலம் முதல் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ரகங்களை காண முடிகிறது. தன் வாழ்நாளில் தன்னால் முடிந்த அளவு தொலைந்து போன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என உறுதியுடன் உள்ளதாகவும் சிவரஞ்சனி தெரிவித்தார்.
மேலும் அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி இலுப்பைப்பூ சம்பா, கருங்குருவை, மடுமுழுங்கி, நவரா, பால்குட வாழை, வெள்ள குடவாழை, செம்புலி பிரியன், கடற்பாலி உள்ளிட்ட 1,250 தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு 3 ஏக்கர் வயலில் ஒவ்வொரு நெல் ரகங்களையும் 40 சதுரஅடி என்ற அளவில் அவற்றை பயிரிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது அவைகள் நன்றாக கதிர் விட்டு உள்ளது. இதனை அறுவடை செய்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்குவதாக கூறினார்.
தங்க தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு, சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களையும் பயிரிட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாராம்பரிய நெல் வகைகளை இவர் பயிர் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியமான நெல் ரகங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதே எனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி சார்பில் மாணவர்கள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு
வரும் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்) சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி தெத்தியில் நடைபெற்றது.
தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணவு ஓவியப்போட்டி, மரக்கன்றுகள்
நடும் பணி நடைபெற்றது.
மாணவ&மாணவிகள், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லூரி கல்விக் குழுமத்தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள்,
செயலர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர்
அருள் பிரகாஷும், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர்
சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ராமபாலன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை,
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவராமகிருஷ்ணன், என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கு ரூ.55 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்த முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக தனிப்படை போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேதாரண்யம் புதுப்பள்ளி பாலத்தின் அருகில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 காரில் இருந்து இறங்கிய 9 பேர் ரகசியமாக திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் அதற்குள் போலீசார் 9 பேரையும் சற்றி வளைத்து பிடித்தனர்.
2 காரையும் சோதனை செய்தபோது ரூ.50 லட்சம் மதிப்புள்ள
170 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை அவர்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாகவும், அவற்றை இலங்கைக்கு
கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்து
170 கிலோ கஞ்சா மற்றும் 2 காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் இந்த கடத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?
அந்த 9 பேர் யார்? என்பது பற்றிய தகவல் தெரிய வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மேளதாளம் முழங்க நெல் கோட்டை எடுத்துவரப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில்
வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்.
திருமண கோலத்தில் சிவன் பார்வதி அகத்தியருக்கு காட்சி கொடுத்த
இடம்.
இந்த கோவிலுக்கு சொந் தமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள
குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது.
இங்கு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைந்த
நெல்லை அறுத்து தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக
கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று
வருகிறது.
அதன்படி தைப்பூசமான இன்று நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவசாயிகள் வேதாரண்யம் கொண்டுவந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில்
வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் மேளதாளத் துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக
எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.
பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்கள் வழங்கப்பட்டது.
நாகை துறைமுகத்தில் கடற்படை முகாமில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்த உ.பி. வாலிபர் கைது. தீவிரவாதியா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்
விடுதலைப்புலிகள் ஊடுருவல், தீவிரவாதம், எரிபொருள் கடத்தல் உள்ளிட்ட உள்ளிட்டவைகளை தடுப்பதற்காக இந்தியக் கடற்படை முகம் அமைக்கப்பட்டது.
இங்கு 100&க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வரும் நிலையில் துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்மநபர் ஒருவர்
கடற்படை முகாமில் நுழைந்தார்.
அப்போது கண்காணிப்பில் இருந்த கடற்படை வீரர்கள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் அவர் தீவிரவாதியாக இருக்கும் என்ற
சந்தேகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரணையில்
ஈடுபட்டனர்.
அப்போது அவரிடம் இருந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது
6 வரைபடங்கள், திசை காட்டும் காம்பஸ் கருவி, பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருந்தது. இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்த கடற்படை வீரர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார், க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் சுக்லா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்
சுற்றுலா வந்ததாகவும், வேலை தேடி வந்ததாகவும், உணவு தேடி
வந்ததாகவும் மாற்றி மாற்றி அவர்களிடம் தகவல்
தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பிடிபட்ட நபர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளதால்
இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் அதிகாரிகளுக்கு கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து திருச்சியிலிருந்து ரா உளவு அமைப்பின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். கடந்த 8 நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு பின் பிடிபட்ட அபிஷேக்சுக்லா பற்றிய முழு விவரம் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கீழ்வேளூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும்
வகையில் போலீசார் வாகன சோதனை, ரோந்து பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் வட்டம் கீழ்வேளூர் அருகே
காக்கழனி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில்
அதில் சாராயம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் நாகை பாப்பாகோவில் சமத்துவபுரம்
விக்னேஷ் (வயது 21), அதே பகுதி ஜோதிபாசு (21) என தெரிய வந்தது.
இதே போல தேவூர் கடைதெருவில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த நாகை அந்தணப்பேட்டை கடைதெரு மணிகண்டன் (20), சிக்கல் ரயிலடி தெரு முகமதுரபீக் (26) ஆகிய 2 பேர் பிடிபட்டனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும்
கைது செய்து சாராயம், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மாட்டுவண்டியில் சென்று நாகை கலெக்டர் பொங்கல் கொண்டாடினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், அம்பல் கிராமத்தில் மாட்டு
பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்,
முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோரை
மாட்டு வண்டியில் சென்று மேளதாளத்துடன்
கிராமத்திற்கு மக்கள் அழைத்து வந்தனர்.
நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு சூடம் ஏற்றி வணங்கி,
கால்நடைத்துறை சார்பாக 100-க்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினர்.
தப்படித்து நடனமாடி கிராம மக்களோடு பொங்கல்
விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தங்களது மாடுகளுக்கு மாலையிட்டு அலங்கரித்து
மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடிய
அப்பகுதி மக்கள் மஞ்சள் தண்ணீரை மாடுகளின் மீது
தெளித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இலங்கையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
கடந்த 2012-ம் ஆண்டு ஹெராயின் போதை வஸ்து கடத்திய வழக்கில்
கைது செய்யப்பட்டு ஓராண்டு ஜெயிலில் இருந்து ஜாமினில்
வெளிவந்தவர் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4.11.21 அன்று புஷ்பவனம் கடற்கரையிலிருந்து
படகில் கடத்த முயன்ற 92 கிலோ கஞ்சாவை படகுடன் கைப்பற்றி
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இதில் கடந்த 2012-ம் ஆண்டு ஹெராயின் வழக்கில்
கைதாகி சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்தவர் சம்மந்தப்பட்டது தெரியவந்தது. அதுமுதல் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து தஞ்சாவூர் கியூ பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் கியூ பிரிவு போலீசார் விசாரணையில் மேற்படி நபர் மல்லிப்பட்டினம் கடற்கரையில் ஒரு தனியாரிடம் மீன்பிடி தொழில் செய்து வரும் இலங்கை முல்லைதீவு
தீத்தகரை சிலாவட்டம் ஆனந்தசெல்வம் மகன் மதன் (எ) ஆண்டனிசென்பீட்டா¢ (45) என்பவர்தான் மேற்படி நபர்
என்பதை அறிந்து அவரை பிடித்து வேதாரண்யம் போலீசில்
ஒப்படைத்தனர்.
வேதாரண்யம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாட்டால் வேளாங்கண்ணி கடற்கரை பொதுமக்களின்றி வெறிச்சோடியது.
நாகப்பட்டினம்:
கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
நிலையில் மாநில அரசு வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட மூன்று
தினங்களும் வழிபாட்டு தலங்களை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அமலில் உள்ளது.
இந்நிலையில் தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக நாகை
மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற முக்கிய
சுற்றுலாத்தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணி புனித
ஆரோக்கிய அன்னைப் பேராலயத்திற்கு, ஆயிரத்துக்கும்
அதிகமான பக்தர்கள் வந்து, உற்சாகமாக பொழுதை கழிப்பது
வழக்கம்.
இந்நிலையில் அரசின் உத்தரவின்படி, வேளாங்கண்ணி
பேராலயம் மூடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை
வெகுவாக குறைந்துள்ளது.
கடலில் குளித்து மகிழும் இடம் தற்பொழுது, மிக குறைந்த
அளவிளான சுற்றுலாப் பயணிகளோடு வெறிச்சோடி காணப்படுகிறது.
வியாபாரிகள் வியாபாரம் இல்லை என வருத்தம் தெரிவித்தனர்.






