search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    காதலியை பிரித்து சென்றதால் காதலன் தற்கொலை

    வேளாங்கண்ணியில் காதலியை பிரித்து சென்றதால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிவன் கீழவீதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 26). இவரும்  அதே பகுதியை சேர்ந்த சிவநந்தினி (22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதனை அறிந்த சிவநந்தினியின் பெற்றோர் மகளை கண்டித்தனர். 
    இதனால் அரவிந்த்குமார் சிவநந்தினியை அழைத்து கொண்டு வெளியூர் சென்றார். அங்கு கோவிலில் ரகசியமாக தாலி கட்டினார்.

    இந்த நிலையில் மகள் சிவநந்தினியை காணவில்லை என வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து அரவிந்த்குமார், சிவநந்தினி ஆகியோர் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    தகவல் அறிந்த இருவரின் பெற்றோர், உறவினர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். 

    அப்போது அரவிந்த்குமார் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோரை, சிவநந்தினியின் தந்தை ராஜேந்திரன், அவருடைய சகோதரர்கள் மற்றும் உறவினர் மிரட்டி தாலியை கழற்றி போலீஸ் நிலைய வாசலில் வீசியதாக கூறப்படுகிறது. 

    மேலும் அரவிந்த்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிவநந்தினியை 
    மிரட்டி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதனால் காதல் மனைவியை பிரித்து சென்றதால் மனமுடைந்த அரவிந்த்குமார் தனது வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் அரவிந்த்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 
    விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×