search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குடிபோதை தகராறில் வாலிபருக்கு கத்திகுத்து

    வேதாரண்யம் அருகே குடிபோதை தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் முதலியார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 39). நல்லத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராம் (31). 

    இவர்கள் இருவரும் சோமநாதர்கோவில் அருகேயுள்ள டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே 
    திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதில் மோகன்ராம் ஆத்திரம் அடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரவி நாகை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு 
    சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து 
    மோகன்ராமை கைது செய்தார்.
    Next Story
    ×