search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    இரும்பு கம்பிகளை திருடியவர் கைது

    நாகூர் அருகே இரும்பு கம்பிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகூர் அருகே மேலநாகூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சிறிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

    இந்த பணிக்காக அந்த பகுதியில் இரும்பு கம்பிகள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன. 

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் 119 கிலோ இரும்பு கம்பிகளை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிய மேலநாகூர் பகுதியை சேர்ந்த மாறன் (வயது 21) என்பவரை கைது செய்தனர். 

    மேலும் தலைமறைவாக உள்ள 14 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×