என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திருமருகல் அருகே வீடு கட்ட இடத்தை அளந்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் மாதாகோவில் தெருவை சேர்ந்த வீடு இல்லாத 11 குடும்பத்தினருக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த வருடம்  மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கியுள்ளர். 

    அதன்படி கிராம கணக்கில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டா வழங்கி 3 மாதங்கள் கடந்தும் இன்றுவரை இடங்கள் பயனாளிகளுக்கு அளந்து வழங்கப்படாமல் உள்ளது. 

    இதனால் அனைவருக்கும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணை பிறப்பித்து உள்ள நிலையில் அவர்கள் தற்போது வரை வீடு கட்ட முடியவில்லை என தெரிவிக்கின்றனர். 

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு இடத்தை அளந்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மூலிகை பூங்காவை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம், காடம்பாடியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 61 வகை மூலிகைகள் கொண்ட மூலிகை பூங்காவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் திறந்து வைத்து பேசும்போது:

    தற்போது உள்ள சூழ்நிலையில் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், இதுபோன்ற பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். காவலர்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு காற்று மாசுபடுவதை தடுக்க நம்மால் முடிந்த அளவு நாம் அனைவரும் உதவிட வேண்டும்.

    தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, போக்சோ வழக்குகள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள்.181, 1098, ஆகியவை ஆகும் என்றார். முன்னதாக ஆயுதப்படையில் ஆண், பெண் காவலர்களுக்கு ஓய்வு அறை திறந்து வைத்தார்.
    வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கடற்கரையில் பரவியுள்ள சேற்றால் படகில் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ள மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, மணியன்தீவு, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் 65 விசைபடகுகளும் 1400 பைபர் படகுகளும் உள்ளன. மேலும் கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும்.

    இந்த சீசன் காலத்தில் உள்ளூர் படகுகளுடன் வெளிமாவட்ட படகுகளும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்கின்றனர். ஏற்கனவே நாகை மாவட்ட கடற்கரை பகுதியில் இரட்டைமடி சுருக்கு மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்வதால் மீன் கிடைக்காததால் பல மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வெறும் கையோடு கரை திரும்புகின்றனர்.

    சில மீனவர்கள் ஏதாவது மீன் கிடைக்குமா என்ற எதிர்பார்பில் இரண்டு நாள் தங்கி மீன்பிடிக்கின்றனர். அவ்வாறு தங்கி மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படை, இலங்கை கடற்கொள்ளையர்கள், இலங்கை தமிழ் சிங்கள மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சீனா நாட்டு மீனவர்களால் தாக்கபடுகின்றனர். தினந்தோறும் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்கள் அதை வெளியில் கூறுவதில்லை. 

    அதற்கு காரணம் மீண்டும் மீன் பிடிக்க செல்லவேண்டும் என்ற அச்சம். தூப்பாக்கி சூடு, அரிவாள்வெட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனால் மட்டுமே கடலோரக் காவல் குழுமத்திற்கு தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற் கொள்ளையர் கள் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்களுக்கு மேலும் ஒரு பலத்த சோதனையாக புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் சேறு தள்ளி உள்ளது. 

    இதில் அதிகப்படியாக புஷ்பவனம் கடற்கரை பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு சேறு தள்ளி உள்ளது. அதனால் ஒரு மாத காலமாக மீன்பிடிக்க முடியமால் வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த அவதிப்படுகின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே மீன் பிடிக்கச் சென்ற புஷ்பவனம் மீனவர்களின் படகில் இரண்டு தடவை தாக்கப்பட்டு லட்சக்கணக்கான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    கடற்படையின் தாக்குதலு க்கு ஆளாகும் மீனவர்களுக்கு மேலும் ஒரு பலத்த சோதனையாக புஷ்பவனம் கடற்கரையில் சேறுதள்ளி உள்ளது. அதனால் ஒரு மாத காலமாக பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை இதனால் வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த அவதிப்படுகின்றனர் இந்த நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீன்பிடிக்கச் சென்ற புஷ்பவனம் மீனவர்கள் படகில் இரண்டு தடவை தாக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் இலங்கை கடல் கொள்ளையர் களால் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நமது இந்திய கடலோர கப்பலை கோடியக்கரைக்கு அருகே நிறுத்தி மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    மத்திய அரசு மீனவர்களின் கோரிக் கைக்கு செவிசாய்க்காது, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால் மீனவர்களின் மீன்பிடி தொழில் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
    நேதாஜி பிறந்தநாளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணதேவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட வீரர் 
    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 
    படத்துக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறுசரவணத்தேவர் மாலை 
    அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    குடியரசு தின விழாக்கள் வழக்கமாக ஜனவரி 24 ஆம் தேதி 
    தொடங்கி 26-ம் தேதி வரை மத்திய அரசின் சார்பில் நடைபெறும். 

    இந்த ஆண்டு குடியரசு தினவிழா நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 
    பிறந்தநாள் அன்றே தொடங்கி ஜனவரி 26-ந்தேதி வரை 
    நடைபெறும் என்று அறிவித்துள்ளதை முக்குலத்து புலிகள் 
    கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். 

    காந்தி ஜெயந்தி அன்று தேசம் முழுவதும் பொது விடுமுறையாக 
    அளிப்பது போல் நேதாஜியின் பிறந்தநாளுக்கும் தேசம் முழுவதும் 
    பொது விடுமுறை அளிக்க வேண்டும். 

    மேலும் அவரது பிறந்தநாளன்று அவரது படைப்பிரிவில் 
    இருந்த  முன்னாள் ஐ.என்.ஏ வீரர்கள் மற்றும் நேதாஜி 
    தொடங்கிய பார்வர்டு பிளாக் கட்சியின் முதுபெரும் 
    தலைவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் முக்குலத்து புலிகள் கட்சி நிர்வாகிகள் 
    ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    தமிழக கடல் பகுதிக்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து (வயது 44), பன்னீர்செல்வம் (48), ராஜேந்திரன் (54) ஆகிய 3 மீனவர்கள் இன்று அதிகாலை வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் படகில் அத்துமீறி ஏறினர்.

    அதிர்ச்சியடைந்த தமிழக மீனவர்கள் படகை விட்டு இறங்குங்கள் என கூறினர். திடீரென இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகமுத்து, பன்னீர்செல்வம், ராஜேந்திரன் ஆகியோரை கம்பு, இரும்புகம்பியால் சரமாரியாக தாக்கி அவர்களை கடலுக்குள் தூக்கி வீசினர்.

    பின்னர் படகில் இருந்த 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி, வாக்கிடாக்கி செல்போன், டீசல் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    இதற்கிடையே காயத்துடன் கடலில் தத்தளித்த நாகமுத்து உள்ளிட்ட 3 பேரும் போராடி நீந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்த சக மீனவர்கள் உடனடியாக தாங்கள் வந்த படகில் 3 பேரையும் ஏற்றி கொண்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்தனர்.

    இதையடுத்து 108 ஆம்புலன்சை வரவழைத்து வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக கடல்பகுதிக்குள் இலங்கை கடற்கொள்ளையர்கள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    தோப்புத்துறை பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள 
    வேதநாராயண பெருமாள் என்றழைக்கப்படும் அபிஷ்ட 
    வரதராஜர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை 
    முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இரவு பத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 
    இரவு பத்து நிகழ்ச்சியில் முக்கிய திருவிழாவான 
    கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. 

    சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள்ளேயே மேளதாளத்துடன் பெருமாள் புறப்பாடு நடைபெற்று கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று. 

    இதில் உபயதாரர்கள் உள்பட குறைந்த அளவு பக்தர்களே முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பெருமாளை வழிபட்டனர்.
    நாகூர் நாகநாதசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில், ராகு-கேது தோஷம் நீக்கும் ஆயிரமாண்டு 
    பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற நாகநாதசாமி கோவில் உள்ளது. 

    இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிவுற்றதையடுத்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 19-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து யாகசாலையில் பூர்ணாஹூதி தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்ற பின்னர், மேளதாள வாத்தியங்களுடன் கடங்கள் ஆலயத்தை சுற்றி 
    எடுத்துவரப்பட்டன. 

    அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 
    நாகநாதர், நாகவல்லி, ராகு கேது, துர்க்கை அம்மன் ஆகிய கோவில்களில் உள்ள விமானங்களுக்கும் கோவில் ராஜகோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வேதாரண்யத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கிரிதரன், சுப்பையன், நகரச் செயலாளர் நமச்சிவாயம், மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட கவுன்சிலர் தீபன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி-நாகை பாதையில் ரெயில் வேகம் அதிகரிக்க பராமரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆலயத்துக்கு 
    வந்து மாதாவை தரிசித்து செல்வர்.

    வெளியூர் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் நாகை&வேளாங்கண்ணி ரெயில் பாதை அமைக்கப்பட்டு சில ரெயில்கள் வந்து சென்றது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பாதை மின் பாதையாக அமைக்கப்பட்டது. 

    இந்த நிலையில் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தென்னக ரெயில்வே துறையினர் ஒரு வார காலமாக பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    குறிப்பாக ராட்சத எந்திரங்கள், ராட்சத ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டும் பாக்ஸிங், லிப்டிங், பார்மிசிங் மற்றும் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்தப் பணிகளை அடுத்த வாரத்தில் தென்னக ரெயில்வே துறை 
    அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    நாகையில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொலை, கொள்ளை தொடர்பான குற்ற வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதனடிப்படையில் நாகை நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய நாகையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், கருப்புசிவா, ரெட்டு பிரகாஷ், பச்சை சிவா, அப்பு என்கிற பார்த்திபன், சீனு ஆகிய 6 பேரும் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. 

    இதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    வேதாரண்யத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்: 

    வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டாரத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. வட்டாரச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். 

    மாவட்ட பேரவை உறுப்பினர் மணிவண்ணன், வட்டார துணைத் தலைவர் ராஜரெத்தினம், வில்லவன் கோகோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியா¢களுக்கு இணையான ஊதியத்தை உடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்டச் செயலாளர் சித்ரா காந்தி, பொருளாளர் எழில்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில்  ஏற்பட்ட சுனாமியால் ஏராளமான உயிரிழப்புகள் மட்டுமல்லாமல் கடற்கரையை ஒட்டி இருந்த பலரும் 
    வீட்டினை பறிகொடுத்து தவித்தனர்.

    இந்நிலையில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பிலும் பல்வேறு தன்னார்வ அமைப்பு சார்பிலும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

    அதன்படி வேளாங்கண்ணி ஏஞ்சல் நகர் பகுதியில் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள்  உள்ளன. 
    இந்த நிலையில் சில வீடுகள் சேதம் அடைந்து  வீட்டின் மேற்கூரை 
    காரை  இடிந்து விழுந்துள்ளது.

    மேலும் பல வீடுகள் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அச்சத்துடன் குடியிருப்புவாசிகள் வசிக்கும்  சூழலில் உள்ளனர். 

    எனவே ஆபத்தான நிலையில் உள்ள சுனாமி குடியிருப்புகளை 
    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து, 
    புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என வேளாங்கண்ணி 
    ஏஞ்சல் நகர் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×