search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி
    X
    கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி

    பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி

    தோப்புத்துறை பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் அமைந்துள்ள 
    வேதநாராயண பெருமாள் என்றழைக்கப்படும் அபிஷ்ட 
    வரதராஜர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை 
    முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இரவு பத்து நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 
    இரவு பத்து நிகழ்ச்சியில் முக்கிய திருவிழாவான 
    கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. 

    சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்குள்ளேயே மேளதாளத்துடன் பெருமாள் புறப்பாடு நடைபெற்று கொடி மரத்தடியில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று. 

    இதில் உபயதாரர்கள் உள்பட குறைந்த அளவு பக்தர்களே முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பெருமாளை வழிபட்டனர்.
    Next Story
    ×