search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி-நாகை பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கும் காட்சி.
    X
    வேளாங்கண்ணி-நாகை பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கும் காட்சி.

    ரெயில் வேகம் அதிகரிக்க பராமரிப்பு பணி தீவிரம்

    வேளாங்கண்ணி-நாகை பாதையில் ரெயில் வேகம் அதிகரிக்க பராமரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆலயத்துக்கு 
    வந்து மாதாவை தரிசித்து செல்வர்.

    வெளியூர் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையில் நாகை&வேளாங்கண்ணி ரெயில் பாதை அமைக்கப்பட்டு சில ரெயில்கள் வந்து சென்றது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே பாதை மின் பாதையாக அமைக்கப்பட்டது. 

    இந்த நிலையில் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தென்னக ரெயில்வே துறையினர் ஒரு வார காலமாக பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    குறிப்பாக ராட்சத எந்திரங்கள், ராட்சத ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டும் பாக்ஸிங், லிப்டிங், பார்மிசிங் மற்றும் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்தப் பணிகளை அடுத்த வாரத்தில் தென்னக ரெயில்வே துறை 
    அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×