என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டாரத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. வட்டாரச் செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
மாவட்ட பேரவை உறுப்பினர் மணிவண்ணன், வட்டார துணைத் தலைவர் ராஜரெத்தினம், வில்லவன் கோகோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியா¢களுக்கு இணையான ஊதியத்தை உடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்டச் செயலாளர் சித்ரா காந்தி, பொருளாளர் எழில்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






