என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
திருப்பூண்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்துள்ள கீழப்பிடாகை
ஊராட்சியில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சியில் சேரும் குப்பைகள் அனைத்தும்,
கீழப்பிடாகை-தலைஞாயிறு சிந்தாமணி கிராமத்து
பிரதான சாலையிலேயே கொட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட அளவு குப்பைகள் சேர்ந்த பிறகு அதே இடத்தில் வைத்து
அவை தீயிட்டுக் கொளுத்தபடுவதால், அதிக அளவிலான துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளித்த படியே செல்லவேண்டிய சூழல் நிலவி வருகிறது.
அந்தப் பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் அதனை உண்பதற்காக வரும் நாய்கள் மூலமும் அடிக்கடி அவ்வழியே சாலை விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
சாலையின் ஓரத்திலேயே கொட்டப்படும் குப்பைகளை கடந்து தான் அங்குள்ள மயானத்திற்கு செல்ல வேண்டும் என்பதால், இறந்தவரின் பிரேதத்தை சுமந்து செல்வோர் பெரும் சவாலை சந்திக்க நேரிடுகிறது.
எனவே சாலையோரமாக கொட்டப்படும் குப்பையை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






