என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேளதாளம் முழங்க நெல் கோட்டை கொண்டுவரப்பட்டது.
    X
    மேளதாளம் முழங்க நெல் கோட்டை கொண்டுவரப்பட்டது.

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மேளதாளம் முழங்க நெல் கோட்டை எடுத்துவரப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் 
    வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். 

    திருமண கோலத்தில் சிவன் பார்வதி அகத்தியருக்கு காட்சி கொடுத்த 
    இடம்.

    இந்த கோவிலுக்கு சொந் தமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள 
    குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளது. 

    இங்கு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைந்த 
    நெல்லை அறுத்து தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக 
    கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று 
    வருகிறது.

    அதன்படி தைப்பூசமான இன்று நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவசாயிகள் வேதாரண்யம் கொண்டுவந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோவிலில் 
    வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    பின்னர் மேளதாளத் துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக 
    எடுத்துச் சென்று வேதாரண்யம் கோவிலில் ஒப்படைத்தனர்.

    பின்பு அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்கள் வழங்கப்பட்டது.
    Next Story
    ×