என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி சுபாஷனி தற்கொலைக்கு நீதிகேட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்த சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவி  சுபாஷினி உயிர் இழப்புக்கு நீதி கேட்டு நாகை, நாகூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறவினர்கள், இளைஞர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்ய வலியுறுத்தி நாகூரில் இளைஞர் அமைப்பினர் சார்பில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நாகூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சாலை நடுவே சாமியானா பந்தல் போட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது இன்ஸ் பெக்டர்கள் நாகூர் சிவராமன், கீழ்வேளூர் சோமசுந்தரம் ஆகியோர் சாலையில் சாமியான பந்தல் அமைக்க கூடாது என பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

    அப்போது சில இளைஞர்கள் காவல்துறையினரை மீறி சாலையில் மேலும் ஒரு சாமியான பந்தலை அமைத்தனர் தொடர்ந்து அங்கிருந்து நாகூர் காவல் நிலையத்தை முற்றுகையிட போராட்டக் காரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    அவர்களை போலீசார் நடு வழியில் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை கலைத்து அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
    உப்பு உற்பத்திக்கு பொருளாதார நிலை அழிந்து விடாமல் இருக்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என உற்பத்தியாளர், தொழிலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    வேதாரண்யம்

    வேதாரண்யத்தில் சிறு உப்பு உற்பத்தியாளர் ஐ.என்.டி.யூ.சி உப்பளத் தொழிலாளர்கள் சங்கம், வேதாரண்யம் உப்பு வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.. நகர மன்ற தலைவரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கினார்.

    கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி., பி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறு உப்பு உற்பத்தியாளர் சங்க பொருளாளர் தென்னரசு, செயலாளர் செந்தில், வியாபாரி சங்க பொருளாளர் வேதரத்தினம் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கேடிலியப்பன் உள்ளிட்ட உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்தியா முழுவதும் சிறு குறு உப்பு உற்பத்தியை கார்ப்பரேட் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தை கைவிடக் கோரியும் இந்திய உற்பத்தியில் தமிழகம் 2வது இடத்தை வகிக்கிறது தமிழகத்திற்குள் வேதாரண்யம் 2வது பெரிய உற்பத்தி மையமாகவும், இந்திய கரையோர நிலங்கள் 17,18ம் நூற்றாண்டுகளில் கிழக்கிந்திய கம்பெனியிடம் 1819ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து உள்ளது.

    பிரிட்டிஷ் அரசின் காலத்தில் 1930ல் மகாத்மா காந்தியின் தலைமையில் தண்டியில் உப்பு யாத்திரையும் வேதாரண்யத்தில் ராஜாஜி, சர்தார் வேதரத்தினம் ஆகியோர் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பிறகு காந்தி& இர்வின் ஒப்பந்தப்படி இந்திய மக்கள் உப்பு உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இந்திய அரசின் உப்பு துறை 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்கனவே தானாக முன்வந்து உப்பு உற்பத்தி செய்யும் சிறு மற்றும் குறு நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு குத்தகையை புதுப்பித்து தந்து கொண்டிருந்தனர்.

    இதனால் 700&க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், 10 ஆயிரம் உப்பள தொழிலாளர்களும் பயனடைந்து வந்தனர் தற்போது ஒன்றிய அரசு குத்தகையை புதுப்பிக்காமல் டெண்டர் ஏல முறையை கொண்டு வருவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க எத்தனிக்பதாக கருதுகிறோம். இதனால் வேதாரண்யம் பகுதியில் 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது

    கடல் நீரையும், சூரிய வெப்பத்தையும், மனித உழைப்பையும் மட்டுமே முதலீடாக கொண்ட இந்த உப்பு உற்பத்தி மண்ணின் சமூக பொருளாதார நிலைமையை அழித்து விடாமல் இருக்க ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். இப்பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சரை மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து சங்கப் பிரதிநிதிகள் நேரடியாக மனு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
    தமிழக எல்லைக்குள் புகுந்து 3 மீனவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். 

    இவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். 

    பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனர். 

    இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கரை திரும்பி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

    இதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் அத்துமீறி தமிழக எல்லைக்குள் புகுந்ததோடு, தமிழக மீனவர்களை தாக்கி பல லட்சம் பொருட்களை பறித்து சென்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டனர்.
     
    எனவே இலங்கை கடற்படையினர் மீது தமிழக எல்லைக்குள் புகுந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே வேன் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பூப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40). வேன் டிரைவர்.

    இவர் சவாரி சென்று விட்டு வேதாரண்யம்& திருத்துறைப் பூண்டி சாலையில் வெட்டுக்குளத்தில் வேன் நிறுத்துமிடத்தில் வேனை நிறுத்தி இறங்கி உள்ளார்.

    அப்போது அங்கு அமர்ந்திருந்த வேன் டிரைவர்கள் கணேசன் (39), ராஜகிரி (34), ஆனந்தபாபு (35) ஆகிய 3 பேரும் பாண்டியனை தரக்குறைவாக பேசி கட்டையால் தாக்கி உள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்&இன்ஸ்பெக்டர் தேவ சேனாதிபதி ஆகியோர் வழக்குபதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க விரித்த வலையில் 300 கிலோ வலையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    வேதாரண்யம்:

    வேதராண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டவர்-. இவர் தனக்கு சொந்தமான படகில் சக மீனவர்கள் சிலருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

    கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் சுமார் 650 கிலோ வலையை விரித்து விட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் படகில் அனைவரும் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் எழுந்து பார்த்த மீனவர் ஆண்டவர் தாங்கள் விரித்திருந்த வலையை மீன்கள் கிடைத்திருக்கும் என்ற நிலையில் படகில் இழுத்து போட்டனர்.

    அப்போது சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 300 கிலோ எடையிலான வலையை காணவில்லை எனக் கூறப்படுகிறது. யாரோ நள்ளிரவில் இவர்களது வலையில் பாதியை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி அறிந்த மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
    கடலில் மீன் பிடித்தபோது வலைகள் திருட்டு போன சம்பவம் சக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகை நகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கிய 2 தபால்காரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5&ம் வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள் ஆவார்கள். இக்குழந்தைகள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    இதனை கருத்தில் கொண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருதியும் நாகை பகுதியை சேர்ந்த தபால் காரர்கள் ராஜேந்திரன், சந்தோஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து, தனது சொந்த செலவிலேயே பள்ளியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத்திட்டத்தில் முதல் தவணை தொகை ரூ.250 செலுத்தி, இத்திட்டத்தில் இணைத்துள்ளனர். அதற்கான அட்டையையும் பெண் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கி உள்ளனர்.

    இது குறித்து ராஜேந்திரன், சந்தோஷ் ஆகியோர் கூறுகையில், சமூக நல்லெண்ணத்துடன் இதை செய்துள்ளோம். இத்திட்டத்தில் பணம் கட்டி சேர முடியாமல் பலர் உள்ளனர். முதல் தவணையை தொடர்ந்து, ஆண்டிற்கு ரூ.1000 ஆயிரம் கட்டி வந்தாலே போதும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில் ஒரு முழுமையாக தொகை கிடைக்கும். எங்களால் முடிந்த இந்த சிறு உதவியை செய்துள்ளோம். இதைத்தொடர்ந்து சிரமம் பார்க்காமல் பெற்றோர்கள் ஆண்டு தோறும் இத்திட்டத்தில் பணம் கட்டி வந்தால் போதும்.

    மேலும் இத்திட்டத்தை அனைவரும் தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    தபால்காரர்களின் இந்த செயலுக்கு தலைமை ஆசிரியை சாந்தி, இடைநிலை ஆசிரியர்கள் விமலா, சவுந்திரவள்ளி மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    மேலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன், தலைமை அஞ்சல் அதிகாரி திலகவதி, கோட்ட பி.ஆர்.ஐ.பி விஜயராகவன் ஆகியோருக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைமை அஞ்சல் அதிகாரி திலகவதியும் நாகை வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் பணம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி தாய்-பாட்டியிடம் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 80) விவசாயி. இவரது மனைவி திலகவதி (58). இவர்களது மகள் மதுபாலா (28). இவருக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்மநபர்கள் சிலர் அத்துமீறி புகுந்தனர். அதிர்ச்சியடைந்த அவர் நீங்கள் யார்? உடனே வெளியே செல்லுங்கள் என கூறினார். அப்போது முகமூடி நபர்கள் கத்தியை காட்டி உங்களிடம் உள்ள நகை, பணத்தை கொடுங்கள். இல்லையென்றால் உங்களையும், பச்சிளங் குழந்தையையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினர்.

    அதனை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி திலகவதி, மதுபாலா ஆகியோரின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தனர். பின்னர் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் என 50 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து பீரோவை உடைத்து ரூ.3½ லட்சம் ரொக்கத்தை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    உடனே பன்னீர்செல்வம் திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு கூச்சலிட்டவாறே விரட்டி சென்றார். சத்தம் கேட்டு பொதுமக்களும் விரட்டி சென்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து கரியாபட்டிணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம் அருகே முதியவர் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரணியம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன் (வயது 35). இவர் ஆறுகாட்டுத்துறை டாஸ்மார்க் கடை அருகே மது போதையில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திருமாவளவன் தன்னிடம் வைத்திருந்த பொருளை காணவில்லை. இதை பனையங்காடு பகுதியை சேர்ந்த பாண்டியன் எடுத்ததாக கருதி பாண்டியனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.

    அப்போது அந்த பகுதிக்கு வந்த ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த அஞ்சப்பன் (85) என்பவர் தடுத்துள்ளார். இதனால் அஞ்சப்பனை திருமாவளவன் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும் கட்டையால் பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நாகை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்த அஞ்சப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    புகாரின்பேரில் வேதாரண்யம் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல், சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமாவளவனை கைது செய்தனர்.
    நாகையில் தனியார் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தா நகர் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் 3வது மகள் சுபாஷினி.

    இவர் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வருகிறார். இந்நிலையில் முதலாம் ஆண்டு கடைசி பருவ தேர்வு வருவதால் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மீதமுள்ள 55 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், பணம் கட்டாத மாணவிகளை கட்டாய விடுப்பு அளித்ததுடன் மாணவிகளை வகுப்பறையின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முதலாம் ஆண்டு மாணவி சுபாஷினி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பாசோதனைக்காக மாணவியின் உடலை அனுப்பி வைத்தனர்.

    மாணவி தற்கொலையால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் நாகூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கல்வி கட்டணத்தை கட்ட சொல்லி தொல்லை கொடுத்து, மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கல்லூரி கட்டணம் கட்டக்கூறி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளின் தற்கொலை சம்பவம் தொடர் கதையாகி வருவது வேதனையளிக்கிறது என்று உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேதனையுடன் கூறினர்.

    இந்நிலையில் சர் ஐசக் நியூட்டன் கல்லூரி வாசலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர்.

    இந்நிலையில் நாகூர் போலீஸ் நிலையத்தில் மாணவி சுபாஷினி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கல்லூரி தாளாளரும் , நாகை ஊர்காவல் படை மண்டல தளபதியுமான ஆனந்த், கல்லூரி முதல்வர் லட்சுமி காந்தன், பிசியோதெரபி வகுப்பாசிரியர் ஜென்சி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து போலீசார் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.

    நாகை அருகே மீன் பிடித்தபோது தாக்கி வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீது மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். இவர்கள் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனராம்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் கரை திரும்பினர். இதையடுத்து 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

    பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சக மீனவர்கள் மற்றும் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    நாகையில் அரசு அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை சட்டயப்பர் மேல வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு குடும்ப அட்டை வாங்கி தருவது, சான்றிதழ்கள் வாங்கி தருவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நாகை வட்ட வழங்கல் அலுவலர் மாதவனை தொடர்புகொண்டு தான் கொடுக்கும் புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்களை விசாரிக்காமல் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் வட்ட வழங்கல் அலுவலர் மாதவன் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமாவை தொடர்புகொண்டு, தனியார் டிரஸ்ட் இடத்தை தனி நபருக்கு சட்டத்திற்கு புறம்பாக பட்டா மாறுதல் செய்து கேட்டு, மிரட்டி உள்ளார்.

    அதனை தொடர்ந்து நாகை தாசில்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகூர் போலீசார் பாஸ்கர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகை அருகே தொழிலாளி இடத்தை ஆக்கிரமித்த அ.தி.மு.க. நிர்வாகியிடம் கொட்டகையை பிரிக்ககோரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன் & அதிர்ஷ்ட வாணி தம்பதியினர். இவர்கள் அதே தெருவில் உள்ள ஒரு இடத்தை வீடு கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.

    இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடு கட்டாமல் இடத்தை போட்டு வைத்திருப்பதை பார்த்து வந்த அந்த பகுதியின் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மற்றும் அவருடைய தந்தை தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆக்கிரமிக்க திட்டம் போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சுப்ரமணியன் தினக்கூலி வேலைக்கு சென்றதை பார்த்த அவர்கள், சரசரவென கீற்று கொட்டகை ஒன்றை அவ்விடத்தில் கட்டி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

    பின்னர் கொட்டகை அமைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இடத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திர சேகரின் சொத்து பட்டா மற்றும் ஆவணங்களை சரிபார்த்து இடத்தை மீட்டுகொடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதனை தொடர்ந்து கொட்டகையின் உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்திய போலீசார், கொட்டகையை பிரிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×