என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மல்லிப்பட்டினம் மீனவர்கள்.
    X
    இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மல்லிப்பட்டினம் மீனவர்கள்.

    மீனவர்களை தாக்கி வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர்

    நாகை அருகே மீன் பிடித்தபோது தாக்கி வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீது மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். இவர்கள் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனராம்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் கரை திரும்பினர். இதையடுத்து 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

    பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சக மீனவர்கள் மற்றும் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×