என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட மல்லிப்பட்டினம் மீனவர்கள்.
மீனவர்களை தாக்கி வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர்
நாகை அருகே மீன் பிடித்தபோது தாக்கி வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர் மீது மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். இவர்கள் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனராம்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் கரை திரும்பினர். இதையடுத்து 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சக மீனவர்கள் மற்றும் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். இவர்கள் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக கோடியக்கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனராம்.இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் இன்று மதியம் 12.30 மணியளவில் கரை திரும்பினர். இதையடுத்து 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.
பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சக மீனவர்கள் மற்றும் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






