என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
முதியவர் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே முதியவர் உள்பட 2 பேரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரணியம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன் (வயது 35). இவர் ஆறுகாட்டுத்துறை டாஸ்மார்க் கடை அருகே மது போதையில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திருமாவளவன் தன்னிடம் வைத்திருந்த பொருளை காணவில்லை. இதை பனையங்காடு பகுதியை சேர்ந்த பாண்டியன் எடுத்ததாக கருதி பாண்டியனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த அஞ்சப்பன் (85) என்பவர் தடுத்துள்ளார். இதனால் அஞ்சப்பனை திருமாவளவன் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும் கட்டையால் பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நாகை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்த அஞ்சப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
புகாரின்பேரில் வேதாரண்யம் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல், சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமாவளவனை கைது செய்தனர்.
வேதாரணியம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன் (வயது 35). இவர் ஆறுகாட்டுத்துறை டாஸ்மார்க் கடை அருகே மது போதையில் படுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திருமாவளவன் தன்னிடம் வைத்திருந்த பொருளை காணவில்லை. இதை பனையங்காடு பகுதியை சேர்ந்த பாண்டியன் எடுத்ததாக கருதி பாண்டியனிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.
அப்போது அந்த பகுதிக்கு வந்த ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த அஞ்சப்பன் (85) என்பவர் தடுத்துள்ளார். இதனால் அஞ்சப்பனை திருமாவளவன் கீழே தள்ளிவிட்டுள்ளார். மேலும் கட்டையால் பாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நாகை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்த அஞ்சப்பன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
புகாரின்பேரில் வேதாரண்யம் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல், சப்&இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமாவளவனை கைது செய்தனர்.
Next Story






