என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்ந வீட்டில் விசாரணை நடத்தி விட்டு வெளியே வரும் போலீசார்.
குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி தாய்-பாட்டியிடம் 50 பவுன் நகை கொள்ளை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி தாய்-பாட்டியிடம் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 80) விவசாயி. இவரது மனைவி திலகவதி (58). இவர்களது மகள் மதுபாலா (28). இவருக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்மநபர்கள் சிலர் அத்துமீறி புகுந்தனர். அதிர்ச்சியடைந்த அவர் நீங்கள் யார்? உடனே வெளியே செல்லுங்கள் என கூறினார். அப்போது முகமூடி நபர்கள் கத்தியை காட்டி உங்களிடம் உள்ள நகை, பணத்தை கொடுங்கள். இல்லையென்றால் உங்களையும், பச்சிளங் குழந்தையையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினர்.
அதனை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி திலகவதி, மதுபாலா ஆகியோரின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தனர். பின்னர் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் என 50 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து பீரோவை உடைத்து ரூ.3½ லட்சம் ரொக்கத்தை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
உடனே பன்னீர்செல்வம் திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு கூச்சலிட்டவாறே விரட்டி சென்றார். சத்தம் கேட்டு பொதுமக்களும் விரட்டி சென்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து கரியாபட்டிணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 80) விவசாயி. இவரது மனைவி திலகவதி (58). இவர்களது மகள் மதுபாலா (28). இவருக்கு கடந்த 1½ மாதத்துக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பன்னீர்செல்வம் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்மநபர்கள் சிலர் அத்துமீறி புகுந்தனர். அதிர்ச்சியடைந்த அவர் நீங்கள் யார்? உடனே வெளியே செல்லுங்கள் என கூறினார். அப்போது முகமூடி நபர்கள் கத்தியை காட்டி உங்களிடம் உள்ள நகை, பணத்தை கொடுங்கள். இல்லையென்றால் உங்களையும், பச்சிளங் குழந்தையையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை ஒன்றும் செய்து விடாதீர்கள் என கெஞ்சினர்.
அதனை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி திலகவதி, மதுபாலா ஆகியோரின் கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தனர். பின்னர் வீட்டு பீரோவில் இருந்த நகைகள் என 50 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். தொடர்ந்து பீரோவை உடைத்து ரூ.3½ லட்சம் ரொக்கத்தை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
உடனே பன்னீர்செல்வம் திருடன்.. திருடன்.. என கத்திக்கொண்டு கூச்சலிட்டவாறே விரட்டி சென்றார். சத்தம் கேட்டு பொதுமக்களும் விரட்டி சென்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து கரியாபட்டிணம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






